|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) > Canto 1, Carukkam - 4 (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 2 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 3 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
periya purANam of cEkkizAr
Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
முதற் காண்டம் (பன்னிரண்டாம் திருமுறை )
சருக்கம் 3 (இலை மலிந்த சருக்கம்)
Acknowledgements:Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission to release the TSCII version as part of Project Madurai etext collections. TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 3.1 | எறி பத்த நாயனார் புராணம் | (551-607) | மின்பதிப்பு |
| 3.2 | ஏனாதிநாத நாயனார் புராணம் | (608- 649) | மின்பதிப்பு |
| 3.3 | கண்ணப்ப நாயனார் புராணம் | (650 -835) | மின்பதிப்பு |
| 3.4 | குங்குலியக் கலய நாயனார் புராணம் | (836-870) | மின்பதிப்பு |
| 3.5 | மானக்கஞ்சாற நாயனார் புராணம் | (871-907 ) | மின்பதிப்பு |
| 3.6 | அரிவாட்டாய நாயனார் புராணம் | ( 908-930 ) | மின்பதிப்பு |
| 3.7 | ஆனாய நாயனார் புராணம் | (931 - 972) | மின்பதிப்பு |
| 551 |
மல்லல் நீர் ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம் | 3.1.1 | 552 | பொன் மலைப் புலி வென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந் நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரமாகும் தொன் நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர் | 3.1.2 | 553 | மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும் தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் தேமலர் அளகஞ் சூழும் சில மதி தெருவிற் சூழும் தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ | 3.1.3 | 554 | கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் படரொளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் | 3.1.4 | 555 | மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் | 3.1.5 | 556 | பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக் கோயில் மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகி இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருட் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் | 3.1.6 | 557 | மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழையரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார் | 3.1.7 | 558 | அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம் பூப் பறித்து அலங்கல் சாத்தி உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் | 3.1.8 | 559 | வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி மெய்ம் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னிக் கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலைத் தெய்வ நாயகருக்குச் சாத்தும் திருப் பள்ளித் தாமம் கொய்து | 3.1.9 | 560 | கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலிய நேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டு அங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்துச் சாத்தும் காலை வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார் | 3.1.10 | 561 | மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச் சோழனார் தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு பெற்ற வெங் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் | 3.1.11 | 562 | மங்கல விழைவு கொண்டு வரு நதித் துறை நீராடிப் பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் எங்கணும் இரியல் போக எதிர் பரிக் காரர் ஓடத் துங்க மால் வரை போல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே | 3.1.12 | 563 | வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் 1 சென்று ஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல வன் தனித் தண்டில் தூங்கும் மலர் கொள் பூக் கூடை தன்னைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்து முன் பறித்துச் சிந்த | 3.1.13 | 564 | மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்டக் கால் கொண்டு போவார் போலக் கடிது கொண்டு அகலப் போக நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் | 3.1.14 | 565 | அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்று போக 1 மெய்ப் பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று செப்பு அரும் துயரம் நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார் | 3.1.15 | 566 | களி யானையின் ஈர் உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா! | 3.1.16 | 567 | ஆறும் மதியும் அணியும் சடை மேல் ஏறும் மலரைக் கரி சிந்துவதே வேறுள் நினைவார் புரம் வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா! | 3.1.17 | 568 | தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் நெஞ்சேய் துயரம் கெட நேர் தொடரும் மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள் செஞ் சேவடியாய்! சிவதா! சிவதா! | 3.1.18 | 569 | நெடியோன் அறியா நெறியார் அறியும் படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும் அடியார்களில் யான் ஆரா அணைவாய் முடியா முதலாய் எனவே மொழிய | 3.1.19 | 570 | என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி மன்றவர் அடியார்க்கு என்றும் வழிப் பகை களிறே அன்றோ கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் | 3.1.20 | 571 | வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி உம்மை இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் சிந்தி முன் பிழைத்துப் போகா நின்றது இத் தெருவே என்றார் | 3.1.21 | 572 | இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும் செங்கண் வாள் அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார் | 3.1.22 | 573. | கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அக் களிறே போலும் அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசிக் கொண்டு எழுந்து ஆர்த்துச் சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார் | 3.1.23 | 574. | பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேற் கதுவ அச்சம் தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் | 3.1.24 | 575. | கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்ய கோல் பாகர் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார் | 3.1.25 | 576 | வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் | 3.1.26 | 577 | மற்று அவர் மொழிந்த மாற்றம் மணிக் கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக் குரை கழல் பணிந்து போற்றிப் பற்றலர் இலாதாய் நின் பொற் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் | 3.1.27 | 578 | வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற கிளர் மணித் தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க | 3.1.28 | 579 | தந்திரத் தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு வந்துறச் சேனை தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப எந்திரத் தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி | 3.1.29 | 580 | வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க வல்லெழும் உசலம் நேமி மழுக் கழுக் கடை முன் ஆன பல் படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன் கண் எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும் | 3.1.30 | 581 | சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க | 3.1.31 | 582 | தூரியத் துவைப்பும் முட்டுஞ் சுடர்ப் படை ஒலியும் மாவின் தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும் வீரர் தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே | 3.1.32 | 583 | பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் மண்ணிடை இறு கால் மேல் மேல் வந்து எழுந்தது போல் தோன்ற தண்ணளிக் கவிகை மன்னன் தானை பின் தொடரத் தானோர் அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் | 3.1.33 | 584 | கடு விசை முடுகிப் போகிக் களிற் றொடும் பாகர் வீழ்ந்த படு களம் குறுகச் சென்றான் பகை புலத்து அவரைக் காணான் விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தடக் கைத்தாய அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் | 3.1.34 | 585 | பொன் தவழ் அருவிக் குன்றம் எனப் புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் | 3.1.35 | 586 | அரசன் ஆங்கு அருளிச் செய்ய அருகு சென்று அணைந்து பாகர் விரை செய்தார் மாலையோய் நின் விறற் களிற்று எதிரே நிற்கும் திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார் பரசு முன் கொண்டு நின்ற இவர் எனப் பணிந்து சொன்னார் | 3.1.36 | 587 | குழையணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு மழை மத யானைச் சேனை வரவினை மாற்றி மற்ற உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் | 3.1.37 | 588 | மைத் தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரே இந்த மெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட அத் தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன் என் கொலோ பிழை என்று அஞ்சி | 3.1.38 | 589 | செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க மறிந்த இக் களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார் | 3.1.39 | 590 | மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் சென்னி இத் துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன் பறித்துச் சிந்தத் தரை படத் துணித்து வீழ்த்தேன் | 3.1.40 | 591 | மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீதங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் ஈதங்கு நிகழ்ந்தது என்றார் எறி பத்தர் என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன் | 3.1.41 | 592 | அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ் அபராதத்துக்கு இங்கு இது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார் | 3.1.42 | 593 | வெந்தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக கெட்டேன் அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று தந்த வாள் வாங்க மாட்டார் தன்னைத் தான் துறக்கும் என்று சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் | 3.1.43 | 594 | வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர் பால் என்றே ஆங்கு அவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி | 3.1.44 | 595 | வன் பெருங் களிறு பாகர் மடியவும் உடை வாளைத் தந்து என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி | 3.1.45 | 596 | புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவாறு என்? கெட்டேன்? என்று எதிர் கடிதிற் சென்று பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும் | 3.1.46 | 597 | வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற அளவு இலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக் கள மணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப | 3.1.47 | 598 | தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச் செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள் கொழுந்து அணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே | 3.1.48 | 599 | ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும் போர் வடி வாளைப் போக எறிந்து அவர் கழல்கள் போற்றிப் பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார் | 3.1.49 | 600 | இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற அருமறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்று அத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் | 3.1.50 | 601 | மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் உட்டரு களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து முட்ட வெங்கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கிப் பொங்கும் பட்ட வர்த்தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார் | 3.1.51 | 602 | ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த மான வெங் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்து அருளும் என்ன மேன்மையப் பணி மேற் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல் யானை மேற் கொண்டு சென்றார் இவுளிமேற் கொண்டு வந்தார் | 3.1.52 | 603 | அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப் பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான் | 3.1.53 | 604 | தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமியாரும் சார எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார் | 3.1.54 | 605 | மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல் உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும் நாளும் நல்தவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில் கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் | 3.1.55 | 606 | ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும் நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி நீளும் இத் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்? | 3.1.56 | 607 | தேனாரும் தண் பூங் கொன்றைச் செஞ்சடையவர் பொற்றாளில் ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி வானாளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும் ஏனாதி நாதர் செய்த திருத் தொழில் இயம்பலுற்றேன் | 3.1.57 |
| 608 |
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும் தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில் வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்து எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர் | 3.2.1 | 609 | வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில் தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய் வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில் ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார் | 3.2.2 | 610 | தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக் கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் | 3.2.3 | 611 | வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில் தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார் | 3.2.4 | 612 | நள்ளர்களும் போற்றும் நன்மைத் துறையின் கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் | 3.2.5 | 613 | மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான் | 3.2.6 | 614 | தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின் ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம் மேனாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் | 3.2.7 | 615 | கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலை மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப் பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்று எதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான் | 3.2.8 | 616 | தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான் | 3.2.9 | 617 | வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு பொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே அங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா | 3.2.10 | 618 | ஆர் கொல் பொர அழைத்தார்? என்றரி ஏற்றின் கிளர்ந்து சேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி வார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார் | 3.2.11 | 619 | புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும் விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார் மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் | 3.2.12 | 620 | வந்தழைத்த மாற்றான் வயப் புலி போத்து அன்னார் முன் நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால் இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும் சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென் | 3.2.13 | 621 | என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக் கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் | 3.2.14 | 622 | மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடு மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர் காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர் | 3.2.15 | 623 | கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய வாளொளி வட்ட முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர் ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன | 3.2.16 | 624 | வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர் செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன | 3.2.17 | 625 | வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில் | 3.2.18 | 626 | குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின வெருவர எருவை நெருங்கின வீசியறு துடிகள் புரண்டன இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை | 3.2.19 | 627 | நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர் தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் | 3.2.20 | 628 | கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர் ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர் | 3.2.21 | 629 | பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் | 3.2.22 | 630 | அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில் விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன | 3.2.23 | 631 | திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் | 3.2.24 | 632 | இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த தம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்பு தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார் | 3.2.25 | 633 | வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்ப நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண் எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர் தஞ்சிரமும் தோளுரமும் தாளுரமும் தாந்துணித்தார் | 3.2.26 | 634 | தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார் | 3.2.27 | 635 | இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு அன்னவர் தம் முன் சென்று அதி சூரன் நேர் அடர்ந்தான் | 3.2.28 | 636 | மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச் சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப் பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான் | 3.2.29 | 637 | போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்த மான மிக மீதூர மண் படுவான் கண் படான் ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான் | 3.2.30 | 638 | கேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும் நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத் தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான் | 3.2.31 | 639 | இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து கை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில் வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார் | 3.2.32 | 640 | சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து மற்றவன் முன் சொல்லி வரக்குறித்தே அக் களத்தே பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார் | 3.2.33 | 641 | தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1 தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2 ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப் பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான் | 3.2.34 | 642 | வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான் | 3.2.35 | 643 | வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி சென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தே முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் | 3.2.36 | 644 | அடல் விடையேறு என்ன அடத்தவனைக் கொல்லும் இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர் புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக் கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார் | 3.2.37 | 645 | கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என் அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று | 3.2.38 | 646 | கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் | 3.2.39 | 647 | அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான் இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார் | 3.2.40 | 648 | மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப் பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார் | 3.2.41 | 649 | தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடைய எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும் நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் | 3.2.42 |
| 650 |
மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு | 3.3.1 | 651 | இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில் நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் | 3.3.2 | 652 | குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் | 3.3.3 | 653 | வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும் புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் | 3.3.4 | 654 | வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் | 3.3.5 | 655 | ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும் | 3.3.6 | 656 | மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால் அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் | 3.3.7 | 657 | பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான் மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் | 3.3.8 | 658 | அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள் இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப் பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச் சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான் | 3.3.9 | 659 | பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார் | 3.3.10 | 660 | வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத் தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப் போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை | 3.3.11 | 661 | பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே | 3.3.12 | 662 | கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும் ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது | 3.3.13 | 663 | கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும் பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த | 3.3.14 | 664 | அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம் பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக் கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான் | 3.3.15 | 665 | கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும் இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித் தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற | 3.3.16 | 666 | அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும் திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார் புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக் கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே | 3.3.17 | 667 | வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள் புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் | 3.3.18 | 668 | வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப் பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம் திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் | 3.3.19 | 669 | ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப் பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க | 3.3.20 | 670 | பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித் தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில் | 3.3.21 | 671 | தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல் வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார் | 3.3.22 | 672 | பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப் பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோ ச்ச இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி | 3.3.23 | 673 | துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப் பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல் அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும் குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து | 3.3.24 | 674 | அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும் சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி | 3.3.25 | 675 | கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத | 3.3.26 | 676 | அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக் குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல் புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச் சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் | 3.3.27 | 677 | தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால் சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான் | 3.3.28 | 678 | வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம் | 3.3.29 | 679 | மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும் தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச் சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார் | 3.3.30 | 680 | . மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர் எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும் பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் | 3.3.31 | 681 | பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் செய்தார் | 3.3.32 | 682 | சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர் குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் | 3.3.33 | 683 | ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி மெய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச் செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர் | 3.3.34 | 684 | செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள் | 3.3.35 | 685 | அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார் இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார் | 3.3.36 | 686 | பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக் காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார் மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார் | 3.3.37 | 687 | தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் | 3.3.38 | 688 | குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம் அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் | 3.3.39 | 689 | வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத் தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால் பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள் | 3.3.40 | 690 | பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக் கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் | 3.3.41 | 691 | வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல் எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப் புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர் அதன் பொலிவு போல்வார் | 3.3.42 | 692 | இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பில் காலம் கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் | 3.3.43 | 693 | அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும்
அடலேனம் புலி கரடி கடமை ஆமா வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத் திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன் பால் சார்ந்து சொன்னார் | 3.3.44 | 694 | சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து
வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன் என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக் கொண்மின் என்ற போதின் அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இம் மாற்றம் அரைகின்றார்கள் | 3.3.45 | 695 | இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது
உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் | 3.3.46 | 696 | சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை
முன் கொண்டுவரச் செப்பி விட்டு மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ்வு ஊட்ட தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் | 3.3.47 | 697 | கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை
மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தாழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப் பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள் | 3.3.48 | 698 | நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி
அன்னை நீ நிரப்பு நீங்கி நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் | 3.3.49 | 699 | கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்
குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலங் கவர் வென்றி மேவு மாறு காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் | 3.3.50 | 700 | மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து
இங்கு அன்போடு வருகின்றேனுக்கு எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரிச் சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக் கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள் | 3.3.51 | 701 | தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார்
சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள் மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்னக் கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான் | 3.3.52 | 702 | முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்
மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய் மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும் உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே | 3.3.53 | 703 | தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்
குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத் தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் | 3.3.54 | 704 | நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு
பரித்து அதன் மேல் நலமே செய்து தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய் வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என விடை கொடுத்தான் இயல்பில் நின்றான் | 3.3.55 | 705 | செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை
திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை கொண்டு புறம் போந்து வேடரோடும் மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின் புலர் காலை வரிவிற் சாலைப் பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் | 3.3.56 | 706 | நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்தி வெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து | 3.3.57 | 707 | முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி தன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்தி மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின் மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக | 3.3.58 | 708 | கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேர கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடு துண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல் தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க | 3.3.59 | 709 | மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத் தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச் சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கைக் கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி | 3.3.60 | 710 | அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ் விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி | 3.3.61 | 711 | வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம் சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப் பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன் சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி | 3.3.62 | 712 | அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித் துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச் செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார் | 3.3.63 | 713 | பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி வில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில் சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் | 3.3.64 | 714 | மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் பானற்குல மாமலரில் படர் சோதியார் முன் தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ள கானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் | 3.3.65 | 715 | நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச் சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்ல நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் | 3.3.66 | 716 | அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச் செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக் கைப் பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன மெய்ப் பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் | 3.3.67 | 717 | தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார் மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே | 3.3.68 | 718 | வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன் சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய் ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம் | 3.3.69 | 719 | போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்பச் சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே கார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள் வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் | 3.3.70 | 720 | நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத் தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக் கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார் | 3.3.71 | 721 | கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம் மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும் காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே | 3.3.72 | 722 | நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர் வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான் பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங் கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே | 3.3.73 | 723 | தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம் பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம் துன்றி நின்ற என்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார் | 3.3.74 | 724 | ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம் நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர் கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் | 3.3.75 | 725 | வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன் மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மா அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் | 3.3.76 | 726 | வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர் எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக் கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம் | 3.3.77 | 727 | ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம் கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரை ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் | 3.3.78 | 728 | தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே | 3.3.79 | 729 | வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப் பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் | 3.3.80 | 730 | பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக் கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத் தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் | 3.3.81 | 731 | கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால் வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே | 3.3.82 | 732 | நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான் தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம் வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக் கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே | 3.3.83 | 733 | கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால் மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி | 3.3.84 | 734 | பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர் புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே | 3.3.85 | 735 | துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார் வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார் கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் | 3.3.86 | 736 | இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக் கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம் பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில் | 3.3.87 | 737 | போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு |