|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > வட மலை நிகண்டு - தொகுப்பு : ஈஸ்வர பாரதி

Etext Preparation & Proof Reading : Mr. & Mrs.V. Devarajan, Durham, NC, USA
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.The original work was compiled by Iswara Bharati, son of Chidambara Bharati in the Kollam year 876, corresponding to 1700.A.D. It was called "iraiyUr vadamalai nikaNtu". Although it contained three chapters as mentioned in the dedication stanzas, only the second chapter is available in manuscript and is secured in Dr. U.V.Swaminatha Iyer Library.
It was due to the devoted efforts of late Dr. U.V.Swaminatha Iyer, who is revered as தமிழ்த் தாத்தா, that this manuscript was collected and preserved. The source of this text is the edition published by Dr. U.V.Swaminatha Iyer Library, edited by Tiru. R.Nagaswamy in 1983. This pmadurai file contains only the original verses (moolam) and not the meaning and notes included in the printed book.
பாயிரம் காப்புப் பாயிரம்
கொல்லமெண்ணூற் றெழுபத்தா றெனக்கணிதப்
பாவாணர் குறித்த வாண்டின்
மல்கியசீர் விக்கிரம வருடத்தா
வணிமூல வளஞ்சேர் நாளி
னெல்லைநகர் வடிவுகந்த வேய்முத்தைப்
பணிந்துலகி னெடுநா ணிற்கப்
பல்கலைதேர் வடமலைநன் னிகண்டினையீ
சுர கவிஞன் பகர்ந்திட்டானே.
பார்புகழ் திருநெல் வேலியம் பதிவா
ழைங்கரத் தொருகோட் டானையை வடிவேற்
சிங்கந் தன்னைச் சிறப்புட னீன்ற
பிடிவடி வுடைய பெண்கொடி பாகத்
தடிகள் செம்பொன் னடிகளை வணங்கி
ஒருபெய ரொருபொருள் உரைக்குங் காண்டமும்
ஒருபொருள் பலபெயர் ஓதுங் காண்டமும்
பலபெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும்
சொற்பொருட் காண்டத் தொகைமூன் றாக்கி
ஈட்டுபுகழ் இரையூர் வடமலை நிகண்டென
நாட்டினன் மடசை நன்னகர் வாழும்
சிதம்பர பாரதி சேய்தின முமையாள்
பதம்பணி யீசுர பாரதி தானே.
காப்புப் பாயிரம் முற்றும்.
கண்ணனுங் கண்ணனைக் காத்த நெல்வேலிக்
கண்ணனுஞ் செந்தமிழ்க் காப்பா குவரே.
திக்கன் புறுபெயர் நூல்செய்யவடி வாளுகந்த
நக்கன் புகழ்நெல்லை நாயக-முக்கண்ணிறை
சாரதிதா னெவவ்வுலகந் தந்தோன்செந் நாவினிற்சேர்
பாரதிதாள் வாழ்த்திநினைப் பாம்.உயிர் வருக்கத் தொகுதியில்
அகர வருக்கம் அருளெரும் பெயர்சிவ சத்தியி னுடனே
கருணையின் பெயருங் கருதப்பெறுமே. ....1
அனந்த னென்னும் பெயர்சிவனு மாதவனும்
சினந்தவிர் அருகனு நாலிரு தெய்வமும்
சேடனும் எனவே செப்புவர் புலவர். ....2
அரம்பை யெனும்பெயர் தெய்வப்பெண் பெயரும்
வாழையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....3
அரியெனும் பெயர்நித் திரையுமிரு சுடரும்
பரியுஞ் சிங்கமும் பகையுந் தேரையும்
பொன்னும் காற்றும் புரந்தரனு மாலும்
செந்நெற் கதிரும் கிளியும் காந்தியும்
தேரும் ஐம்மையுஞ் சேகும் வரியும்
கூர்மையு நிறமும் கூற்றும் வண்டும்
வேயும் பன்றியும் விசியும் புகையும்
பாயலுஞ் சிலம்பின் பரலும் சோலையும்
கண்ணில் வரியும் கடலும் உரகமும்
எண்ணிய திகிரியும் இகலியர் வாளும்
தகரும் வலியும் அரிசியும் குரங்கும்
புகரு நெருப்பும் புரையுஞ் சயனமும்
எறிதரு முரசமும் எண்படைக் கலமும்
குறிதரு பச்சையும் கூறிய மதுவும்
அரிதலும் நாற்பா னெழு பெயராமே. ....4
அண்ட ரெனும்பெயர் விண்டலத் தமரரும்
இடையரும் பகைஞரும் இயம்புவர் புலவர். ....5
அலரி யெனும்பெய ரலர்க்கணை ஐந்தும்
இரவியு மலருமோர் மரமு நீராவியுந்
தேனீயும் அழகும் செப்பப் பெறுமே. ....6
அருண னெனும்பெய ரருக்கனும் அவன்தேர்ப்
பாகனும் புதனும் பகர்ந்தனர் புலவர். ....7
அளக்க ரெனும்பெயர் சேறும் உப்பளமும்
கடலும் புடவியுங் கார்த்திகை நாளுமாம். ....8
அந்த மெனும்பெய ரருநெறி யுடனே
ஒருநாள் மீனும் உறுகவிப் பொருளும்
காடும் கனகமும் கையும் பாதியும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....9
அணங்கனெனும் பெயரே ஆசையும் அழகும்
வருத்தமும் கொலையும் மையனோயும்
தெய்வமுந் தெய்வத்து வமைசொல் மாதுமாம். ....10
அங்கத மெனுபெய ரரவுந் தோளணியும்
வசைபுகல் கவிதையும் வழங்கப் பெறுமே. ....11
அரவ மெனுபெய ரோசையும் பாம்பு
சிலம்பும் எனவே செப்புவர் புலவர். ....12
அண்ட மெனும்பெயர் முட்டையும் விசும்புமாம். ....13
அம்பர மெனும்பெய ராடையும் விசும்பும்
கடலு மெனவே கருதப்பெறுமே. ....14
அஞ்சன மெனும்பெயர் கருமை நிறமும்
ஒருதிசை யானையு மெழுதுகண் மையுமாம். ....15
அங்கி யெனும்பெய ரனலும் சட்டையும். ....16
அயமெனும் பெயரே அறலும் குதிரையும்
குளமும் இரும்பும் தகருங் கூறுவர். ....17
அளக மெனுபெயர் புனலு மயிரும்
மயிர்க்குழற் சியுமென வகுத்தனர் புலார். ....18
அளறெனும் பெயரே நரகமும் சேறுமாம். ....19
அந்தரி யெனும்பெயர் துர்க்கையும் உமையுமாம். ....20
அல்கல் எனும் பெயர் தங்கலு நாளும்
கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர். ....21
அந்தி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தோர்
ஓசைப் பெயரு மாலையும் இரவுமாம். ....22
அடுப்பெனும் பெயரே யியம னாளும்
அச்சப் பெயருமுத் தானமு மாமே. ....23
அறுவை யெனும்பெயர் சித்திரை நாளும்
தூசும் எனவே சொல்லப் பெறுமே. ....24
அன்றில் எனும்பெயர் மூல நாளுமோர்
புள்ளும் எனவே புகன்றனர் புலவர். ....25
அகியெனும் பெயரே அரவும் இரும்புமாம். ....26
அணுவெனும் பெயரே நுண்மையும் உயிரும்
மந்திரப் பெயரும் வழங்கப் பெறுமே. ....27
அகலுள் எனும் பெயர் ஊரு நாடும்
பரப்பும் எனவே பகரப் பெறுமே. ....28
அவந்தி யெனும் பெயர் கிளியின் பெயரும்
உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர். ....29
அருப்பம் எனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
சோலையின் பெயரும் நோயும் காடுமாம். ....30
அடையெனும் பெயரே இலையின் பெயரும்
அடுத்தலும் கனமும் அப்பமும் வழியுமாம். ....31
அருவி யெனும்பெயர் மலைச்சார் நதியுந்
தினைத்தாள் பெயரும் செப்பப் பெறுமே. ....32
அயிரி யெனும்பெயர் நுண்மணற் பெயரு
மீன்முள் ளரித்திடு கருவியும் விளம்புவர். ....33
அணையெனும் பெயரே மெத்தையும் சயனமும்
செய்கரைப் பெயரும் செப்பப் பெருமே. ....34
அகமெனும் பெயர்மரப் பொதுவும் சயிலமும்
இல்லமு மனமும் இடமும் பாவமும்
ஐந்திணைப் பொருளு டனுள்ளு மாமே. ....35
அங்கணம் எனும்பெயர் தூம்பு வாயிலு
முன்றிலுஞ் சேறும் மொழிந்தனர் புலவர். ....36
அரச னெனும்பெயர் வியாழமு மன்னனும். ....37
அன்னை யெனும்பெயர் முன்பிறந் தாளுந்
தாயும் துணைவியும் சாற்றப் பெறுமே. ....38
அம்மை யெனும்பெயர் தாயு மறுபிறப்பும்
யாப்பினோர் வனப்பும் இயம்பப் பெறுமே. ....39
அணியெனும் பெயரே அழகும் பெருமையும்
படையின துறுப்பும் இலக்கண அணியும்
பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர். ....40
அரத்தம் எனும்பெயர் அரத்தமும் சிவப்பும்
அரக்கும் கடம்பு மரத்தவுற் பலமுமாம். ....41
அடியெனும் பெயரே முதன்மையும் காலுங்
கவிதையின் பாதமும் செண்டும் வெளியுமாம். ....42
அரலையெனும் பெயர் அருங்கனி விதையும்
மாலும் கழலையின் பெயரும் வழங்குவர். ....43
அன்னமெனும் பெயர் சோறும் ஓதிமமுமாம். ....44
அக்கார மென்னும் பெயர்சருக் கரையும்
புடவையும் எனவே புகன்றனர் புலவர். ....45
அழனம் எனும்பெயர் அனலும் பிணமுமாம். ....46
அணியெ னும்பெய ரன்பும் நறவமும்
கொடையும் வண்டின் பெயரும் கூறுவர். ....47
அரிட்டம் எனும்பெயர் பிறவியிற் குற்றமும்
கள்ளும் காக்கையும் கருதப் பெறுமே. ....48
அத்தெனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும்
இசைப்புந் துன்னமும் அரைப்பட் டிகையுமாம். ....49
அக்கெனும் பெயரே சங்கின் மணியும்
ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர். ....50
அராகம் எனும்பெயர் பாழையாழ்த் திறமும்
செந்நிறப் பெயரு முடுகியற் கவிதையும்
ஆசையின் பெயரு மாமென வழங்குவர். ....51
அனந்தம் எனும்பெயர் பொன்னும் ஆகாயமும்
அளவின் மைப்பொருட் பெயரு மாமே. ....52
அலங்கல் எனும்பெயர் அசைவும் தொடையலும்
இலங்கலும் தளிரும் இயம்புவர் புலவர். ....53
அரத்தை யெனும்பெயர் குறிஞ்சி யாழிசையும்
துன்பமும் என்னச் சொல்லுவர் புலவர். ....54
அடலெனும் பெயரே சமரும் பெலமும்
வென்றியும் எனவே விளம்பப் பெறுமே. ....55
அயிலெனும் பெயரே வேலுங் கூர்மையும்
ஆர்தலின் பெயரு மாகு மென்ப. ....56
அரணம் எனும்பெயர் காவற் காடும்
வேலுங் காவலும் மதிலும் கவசமும். ....57
அம்பண மென்னும் பெயர்மரக் கலமும்
கதலித் தண்டும் நீர்ப்பந்தலுந் தூம்பும்
ஆமையின் பெயரு மாமெனப் புகலுவர். ....58
அளித்தல் எனும்பெயர் கொடுத்தலும் காத்தலும்
செறிவும் எனவே செப்புவர் புலவர். ....59
அச்சம் எனும்பெயர் அகத்தியும் பயமுமாம். ....60
அருணம் எனும் பெயர் செம்மறி யாடும்
மானும் எலுமிச்சுஞ் சிவப்பும் வழங்குக. ....61
அந்தம் எனும்பெயர் அழகு முடிவுமாம். ....62
அம்பல் எனும்பெயர் பழிமொழி யுடனே
சிலரறிந்து தம்முட் புறங்கூறல் செப்புவர். ....63
அலரெனும் பெயர்பழி மொழியும் பூவும்
பலரரிந் தலர்தூற் றுதலும் பகருவர். ....64
அரற்றல் எனும்பெயர் அழுகையும் ஒலித்தலும். ....65
அஞ்சலி எனும்பெயர் அஞ்சலித் திறைஞ்சலும்
வாவற் பறவையும் வகுத்தனர் புலவர். ....66
அலகெனும் பெயரே நுளம்பும் சோதிடமும்
நெற்கதி ராதியும் பலகறைப் பெயரும்
மகிழின் பரலும் புல்வாயுந் துடைப்பமும். ....67
அல்லி யெனும் பெயர் காசை மரமும்
வெள்ளாம் பலுமக விதழும் விளம்புவர். ....68
அதமெனும் பெயர்பா தாளமும் கீழும்
இறங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....69
அரமெனும் பெயரே பலபொருள் வடிவின்
அருகும் அராவும் கருவியு மாமே. ....70
அகைத்தல் எனும்பெயர் அறுத்தலும் ஒலித்தலும்
ஈர்த்தலும் எனவே இயம்பப் பெறுமே. ....71
அசியெனும் பெயரே அவமதிச் சிரிப்பும்
வசிதரு வாளும் படைக்கலப் பொதுவுமாம். ....72
அமரர் எனும்பெயர் அடுபடை வீரரும்
தேவரும் எனவே செப்புவர் புலவர். ....73
அந்தணர் எனும்பெயர் அறவோர் பெயரும்
பூசுரர் பெயரும் புகலுவர் புலவர். ....74
அள்ளெனும் பெயரே காதும் கூர்மையும்
வரிபத் திரும்பும் வன்மையும் செறிவுமாம். ....75
அலம்எனும் பெயரே அமைவும் கலப்பையும். ....76
அயிரெனும் பெயரே சருக்கரைப் பெயரும்
நுண்மணற் பெயரும் நுண்மையும் நுவலுவர். ....77
அண்டசம் எனும்பெயர் அரவும் தவளையும்
நண்டு முதலையு மாமையு மீனும்
உடும்பும் ஓந்தியும் பல்லியும் அரணையும்
பறவையும் இப்பியும் பகர்ந்தனர் புலவர். ....78
அற்றம் எனும்பெயர் மறைவும் அவகாசமு
முடிவும் எனவே மொழியப் பெறுமே. ....79
அருச்சுனம் எனும்பெயர் மருதுவும் வெளுப்புமாம் ....80
அத்தி யெனும்பெய ரதவு மியானையும்
உவரியும் எலும்பும் உரைக்கப் பெறுமே. ....81
அந்தில் எனும்பெயர் அசைச்சொல்லு மிடமுமாம். ....82
அம்மெனும் பெயரே அசைச்சொல்லு மழகும்
புனலின் பெயரும் புகலப் பெறுமே. ....83
அம்பெனும் பெயரே மேகமும் புனலும்
கணையு மூங்கிலுங் கருதப் பெறுமே. ....84
அகளம் எனும்பெயர் தாழியும் மிடாவுமாம். ....85
அங்காரக மெனும்பெயர் பூசு வனவும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர். ....86
அஞரெனும் பெயரே அறிவிலோர் பெயரும்
துக்கமும் எனவே சொல்லுவர் புலவர். ....87
அந்தகர் எனும் பெயர் குருடருங் கூற்றுமாம். ....88
அரக்கெனும் பெயரே மதுவிலோர் விகற்பமும்
சிவப்புஞ் சென்னிற மெழுகும் செப்புவர். ....89
அகவல் எனும்பெயர் கூத்துமாசி ரியப்பாவும். ....90
அரங்கம் எனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
போரிடம் வட்டா டிடமும் சபையும்
கூத்தா டுமிடப் பெயருங் கூறுவர். ....91
அன்னல் எனும்பெயர் நாகமும் சேறுமாம். ....92
அழுங்கல் எனும்பெயர் ஆர வாரமும்
இரங்கலும் கேடும் இசைக்கப் பெறுமே. ....93
அறலெனும் பெயரே நீரு நீர்த்திரையும்
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர். ....94
அளையெனும் பெயரே தயிரும் வன்மீகவும்
உம்மையும் பாளியும் மோர்இன்மைப் பெயருமாம். ....95
அங்கம் எனும்பெயர் உடலும் உறுப்பும்
ஆறங்கமும் கட்டிலும் எலும்பு மாமே. ....96
அழுவ மெனும்பெயர் துருக்கமும் பரப்பும்
நாடும் எனவே நவின்றனர் புலவர். ....97
அறுகெனும் பெயரே யாளியும் சிங்கமும்
புலியும் யானையும் புல்லினோர் விகற்புமாம். ....98
அத்திரி யெனும்பெயர் மலையும் குதிரையும்
கழுதையும் ஒட்டகப் பெயரும் கருதுவர். ....99
அறையெனும் பெயர்மலை முழையும் பாறையும்
சிற்றிலும் மொழியும் செப்பப் பெறுமே. ....100
அரிலெனும் பெயர்சிறு தூறும் பிணக்கமும்
குற்றமும் பரலும் கூறுவர் புலவர். ....101
அவலெனும் பெயர்நீர் நிலையும் பள்ளமும்
முளையு நெற்பெறு சிற்றுண்டியு மொழிகுவர். ....102
அண்ணை யெனும்பெயர் அறிவிலோன் பெயரும்
பேயின் பெயரும் பேசப் பெறுமே. ....103
அகப்பா வெனும்பெயர் மதிளுமுள் ளுயரத்துப்
பொருந்திய மேடையின் பெயரும் புலம்புவர். ....104
அசமெ னும்பெயர் புருவை யாடும்
மூவாட்டை நெல்லின் பெயரு மொழிகுவர். ....105
அசனி யெனும்பெயர் வச்சிரா யுதமும்
இடியின் பெயரும் இயம்பப் பெறுமே. ....106
அல்லெனும் பெயரே இரவும் இருளுமாம். ....107
அரிதம் எனும்பெயர் பசுமையும் திசையும்
பசும்புற் றரையும் பகரப் பெறுமே. ....108
அகடெனும் பெயரே வயிறும் புறமுமாம். ....109
அமரல் எனும்பெயர் மிடைதலும் பொலிவுமாம். ....110
அருகல் எனும்பெயர் கருங்கலுஞ் சார்தலும். ....111
அடுதல் எனும்பெயர் அடர்தலும் கொலையும்
பலபொருள் பாகப் படுத்தலின் பெயருமாம். ....112
அவிர்தல் எனும்பெயர் பீறலும் ஒளியுமாம். ....113
அம்பி யெனும்பெயர் தெப்பமும் தோணியும்
நீர்மே லோடு வனவு நிகழ்த்துவர். ....114
அந்தர மெனும்பெயர் பேத முடிவும்
விண்ணி னிடமும் விளம்பப் பெறுமே. ....115
அங்கா ரகனெனும் பெயருதா சனனும்
செவ்வாய்ப் பெயரும் செப்பப் பெறுமே. ....116
அடரெனும் பெயரே ஐமை வடிவும்
நெருங்குதற் பெயரு நிகழ்த்தப் பெறுமே. ....117
அரங்கெனும் பெயரே மனையின் விகற்பமும்
சபையும் வட்டா டிடமும்ஓ ரிடமுமாம். ....118
அயன மெனும்பெயர் ஆண்டிற் பாதியும்
வழியும் எனவே வகுத்தனர் புலவர். ....119
அமலை யெனும்பெயர் உமையவள் பெயரும்
ஆர வார மும்சபைப் பெயருமாம். ....120
அலவன் எனும்பெயர் நண்டும் பூஞையும்
நிலவுங் கடக ராசியும் நிகழ்த்துவர். ....121
அரசெனும் பெயரோர் தருவு மன்னனும்
ராச்சியப் பெயரும் இயம்பப் பெறுமே. ....122
அறிக்கை எனும்பெயர் அறிதலின் பெயரும்
பற்று வித்தலின் பெயரும் பகருவர். ....123
அதரெனும் பெயரே புழுதியும் வழியும்
நுண்மணற் பெயரு நுவலப் பெறுமே. ....124
அருந்த வெனும்பெயர் அருமையும் பொசித்தலும். ....125
அத்தன் எனும்பெயர் ஈசனும் குருவும்
தந்தையும் எனவே சாற்றினர் புலவர். ....126
அனித்தியம் எனும்பெயர் நிலையாமை பொய்யுமாம். ....127
அண்ணல் எனும்பெயர் தலைவனும் பெருமையும். ....128
அச்சுதன் எனும்பெயர் அமுதிறை பெயருங்
கண்ணனும் அசோகமர் கடவுள் பெயருமாம். ....129
அனுவெனும் பெயரே தொடர்ச்சியும் கவுளுமாம். ....130
அமுதம் எனும்பெயர் முத்தியும் பெருமையும்
புனலும் பயசும் புலவ ருணவுடன்
மேகமும் எனவே விளம்புவர் புலவர். ....131
அம்பரம் எனும்பெயர் அம்புடன் ஆனையிற்
பிறகா லுமெனப் பேசுவர் புலவர். ....132
அலையெனும் பெயரே கடலும் கடற்றிரைப்
பெயரும் எனவே பேசப் பெறுமே. ....133
அராவல் எனும்பெயர் புரைதலும் குறுகலும். ....134
அரணி யெனும்பெயர் தீக்கடை கோலும்
கவசமு மதிலும் கருதப் பெறுமே. ....135
அற்பம் எனும்பெயர் சிறுமையும் நாயுமாம். ....136
அழுக்கா றெனும்பெயர் பொறாமையின் பெயரும்
மனக்கோட் டத்தின் பெயரும் வழங்குவர். ....137
அனங்கம் எனும்பெயர் மல்லிகைப் பெயரும்
இருவாட் சியுமென இயம்புவர் புலவர். ....138
அசையெனும் பெயரீ ரசைகளும் அசைச்சொல்லும். ....139
அமுதெனும் பெயரே பாலும் இன்கதையும்
தெய்வ வுணவின் விகற்பமும் செப்புவர். ....140
அசோக மெனும்பெய ரசோகின் தருவும்
இன்பமும் எனவே இயம்பப் பெறுமே. ....141
அசைத்தல் எனும் பெயர் அசைத்தலின் பெயரும்
கட்டுதற் பெயரும் கருதுவர் புலவர். ....142
-----
அகர வருக்கம் முற்றும்.
ஆகார வருக்கம் ஆதி யெனும்பெய ரான்றிரு நாமமு
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும்
அருகனு முதலு நேரோடலு மாமே. ....143
ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும்
கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும்
ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர். ....144
ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும்
அடிமை யோலையும் புனர்பூ சமுமாம். ....145
ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும்
நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம். ....146
ஆசை யெனும்பெயர் திசையும் காதலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....147
ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும்
கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும்
சக்கிரா யுதமு மோதிரமுங் கரையுமாம். ....148
ஆலம் எனும்பெயர் அறலும் விடமும்
ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம். ....149
ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும்
தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர். ....150
ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம். ....151
ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர்
எண்ணும் எனவே இயம்புவர் புலவர். ....152
ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும்
நகரமும் யானைக் கூடமும் நவிலுவர். ....153
ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம்
நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர். ....154
ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும்
இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே. ....155
ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும்
கணவனும் எனவே கருதுவர் புலவர். ....156
ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம். ....157
ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந்
தேகமும் எனவே செப்பப் பெறுமே. ....158
ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும்
இசையின் குழலும் கள்ளு மூங்கிலும்
ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர். ....159
ஆரம் எனும்பெயர் அத்தி மரமும்
அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும்
சந்தன முமணி வடமும் பதக்கமும். ....160
ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும்
உரையா டலுமென வுரைத்தனர் புலவர். ....161
ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும்
அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப. ....162
ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும்
தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர். ....163
ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும்
மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம். ....164
ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும்
பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும்
ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர். ....165
ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும்
மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர். ....166
ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன்
வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே. ....167
ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும்
அணிதலின் பெயரு மாகு மென்ப. ....168
ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும்
சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர். ....169
ஆசினி யெனும்பெயர் மாவயி ரத்தொடு
பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர். ....170
ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம்
பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம். ....171
ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம். ....172
ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம். ....173
ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும்
மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே. ....174
ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும்
சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர். ....175
ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும்
சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம். ....176
ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும்
சீவனும் எனவே செப்பப் பெறுமே. ....177
ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும்
அசைச்சொற் பெயரும் உவமையு மாமே. ....178
ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும்
ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம். ....179
ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும். ....180
ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும். ....181
ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம். ....182
ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும்
பழமரப் பெயரும் பகருவர் புலவர். ....183
ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும்
மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம். ....184
ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும்
படகமும் எனவே பகர்ந்தனர் புலவர். ....185
ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம். ....186
ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம். ....187
ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும்
புகையு நாற்றமு மூச்சும் புகலுவர். ....188
ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும்
உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே. ....189
ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம். ....190
ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும்
புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர். ....191
ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும்
ஆரிய தேசத் தவரு மாமே. ....192
ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும்
ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே. ....193
------
ஆகார வருக்கம் முற்றும்.
இகர வருக்கம் இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன்
மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர். ....194
இருளெனும் பெயரே கருமையு மயக்கமும்
நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர். ....195
இரலை யெனும்பெயர் மானி னேறும்
அசுபதியு மூதுங் கொம்பு மாமே. ....196
இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும்
தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும்
புள்ளிற குங்கை வரையும் சிறுமையும்
குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர். ....197
இடியெனும் பெயரே நென்மா முதலும்
உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர். ....198
இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும்
தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர். ....199
இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும்
மலையும் காடும் வழங்கப் பெறுமே. ....200
இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும்
கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர். ....201
இடையெனும் பெயரெ இடமும் நுகப்பும்
நடுவும் எனவே நவிலப் பெறுமே. ....202
இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும். ....203
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம். ....204
இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும்
நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும். ....205
இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும்
நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர். ....206
இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும்
இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர். ....207
இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும்
கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர். ....208
இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப் புட்டிலாம். ....209
இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம். ....210
இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும்
நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர். ....211
இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும்
கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர். ....212
இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும்
செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர். ....213
இல்லெனும் பெயரே யில்லை யென்றலும்
இராசியு மனைவியு மனையும் இடமுமாம். ....214
இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும். ....215
இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம். ....216
இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும்
யானையின் பெயரும் இயம்புவர் புலவர். ....217
இகலெனும் பெயரே பெலமும் சமரமும்
பகையும் எனவே பகரப் பெறுமே. ....218
இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும்
இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர். ....219
இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும்
மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே. ....220
இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும்
பனைமடல் போலவும் பகரப் பெறுமே. ....221
இயமெனும் பெயரே யுரையும் ஓசையும்
வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே. ....222
இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும்
பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர். ....223
இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும்
செவ்வையும் எனவே செப்புவர் புலவர். ....224
இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும். ....225
இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம். ....226
இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம். ....227
இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும்
மரணமும் எனவே வழங்கப் பெறுமே. ....228
இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும்
ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர். ....229
இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும்
இளமையின் பருவமு மியம்பப் பெறுமே. ....230
இரதி யெனும்பெயர் மதனன் றேவியும்
பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம். ....231
இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம். ....232
இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும்
சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர். ....233
இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும்
முதலையு மெனவே மொழிந்தனர் புலவர். ....234
-------
இகர வருக்கம் முற்றும்.
ஈகார வருக்கம் ஈழ மெனும்பெயர் பொன்னின் பெயரும்
சிங்கள தேசமு நறவுஞ் செப்புவர். ....235
ஈகை யெனும்பெயர் ஈங்கையும் கொடுத்தலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....236
ஈடெனும் பெயரே பெலமும் குழைவும்
பெருமையு முவமையும் பேசுவர் புலவர். ....237
ஈமம் எனும்பெய ரெரியிடு கலனும்
மயானமும் விறகும் வழங்கப் பெறுமே. ....238
ஈண்டெனும் பெயரே யிவ்விடப் பெயரும்
ஈங்கையின் பெயரும் இயம்புவர் புலவர். ....239
ஈர மெனும்பெயர் அன்புங் குளிர்ச்சியும்
பகுத்தலும் எனவே பகரப் பெறுமே. ....240
ஈன்றா னெனும்பெயர் பிரமனும் பிதாவுமாம். ....241
-----
ஈகார வருக்கம் முற்றும்.
உகர வருக்கம் உடுவெனும் பெயரே யொளிவான் மீனும்
பகழியும் அம்புத் தலையொடு நாவாய்
நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர். ....242
உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே
சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே. ....243
உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன்
திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம். ....244
உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும்
மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே. ....245
உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும்
விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம். ....246
உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும்
தேரின் றட்டும் நாபியும் கடலும்
பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர். ....247
உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும்
கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம். ....248
உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந்
துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும்
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்
வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும்
ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும்
படையுறை யுடனே நன்னில வூரும்
எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர். ....249
உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும்
திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர். ....250
உலக்கை யெனும்பெய ரோண நாளு
முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர். ....251
உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும்
இருடியு மெனவே யியம்பப் பெறுமே. ....252
உறையுள் எனும்பெய ரூரு நாடும்
வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர். ....253
உயவை யெனும்பெயர் கானை யாறுங்
காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர். ....254
உழையெனும் பெயரே யாழி னரம்பும்
இடமும் மானும் இயம்புவர் புலவர். ....255
உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங்
குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர். ....256
உவாவெனும் பெயரினை யோனும் யானையும்
ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர். ....257
உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும்
திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர். ....258
உளையெனும் பெயரே பரிக்க டிவாளத்
தணிம யிராயவு மஃறிணை மயிரும்
ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம். ....259
உடையெனும் பெயரே செல்வமும் கூறையும்
குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர். ....260
உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும்
ஞானமு மெனவே நவிலப் பெறுமே. ....261
உரையெனும் பெயரே சத்த வொலியும்
தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர். ....262
உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும்
ஆய ரூருமோர் பக்கமும் வாவியும். ....263
உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம். ....264
உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும்
புணர்வும் செறிவும் புகலப் பெறுமே. ....265
உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம். ....266
உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும்
விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர். ....267
உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும்
தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே. ....268
உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும்
பெலமு மருமமும் பேசுவர் புலவர். ....269
உருவெனும் பெயரே நிறமும் வடிவமும்
அட்டையின் பெயரு மாகு மென்ப. ....270
உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும். ....271
உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும்
நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர். ....272
உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும்
படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர். ....273
உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம். ....274
உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம். ....275
உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும். ....276
உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....277
உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும். ....278
உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும்
நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....279
உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும்
மிடியும் பயமும் விளம்பப் பெறுமே. ....280
உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ட்சியுந்
தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர். ....281
உறதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும். ....282
--------
உகர வருக்கம் முற்றும்.
ஊகார வருக்கம் ஊக்க மெனும்பெய ருள்ளத்தின் மிகுதியும்
பெலமு முச்சாகமும் பேசப் பெறுமே. ....283
ஊழ்எனும் பெயரே பகையும் பழமையும்
மரபும் வெயிலும் விதியும் வழங்குவர். ....284
ஊதிய மெனும்பெயர் லாபமும் கல்வியும். ....285
ஊழ்த்த லெனும்பெயர் பதனழிவுஞ் செவ்வியும்
நினைத்தலும் எனவே நிகழ்த்தப் பெறுமே. ....286
ஊசி யெனும்பெயர் எழுத்தாணியுஞ் சூரியும். ....287
ஊறெனும் பெயரே தீண்டலுந் தீமையும்
கொலையும் இடையூறுங் கூறப் பெறுமே. ....288
ஊற்றெனும் பெயரே யூற்றி னுடனே
ஊன்றிய கோலும் உரைத்தனர் புலவர். ....289
ஊர்தி யெனும்பெயர் விமானமுந் தேரும்
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும். ....290
---
ஊகார வருக்கம் முற்றும்.
எகர வருக்கம் என்றூழ் எனும்பெயர் இரவியும் வெயிலும்
கோடைக் காலமும் கூறப்பெறுமே. ....291
எல்லெனும் பெயரே யிரவியும் ஒளியும்
இருளு மிகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர். ....292
எலியெனும் பெயரே யெலியின் விகற்பமும்
பூர நாளொடு மதுவும் புகலுவர். ....293
எருவை யெனும் பெயர் கொறுக்கையுடனே
கழுகுந் தாம்பிரப் பெயரும் கருதுவர். ....294
எறுழெனும் பெயரே தண்டா யுதமும்
பெலமு மெனவே பேசப் பெறுமே. ....295
எக்கர் எனும்பெயர் சொரிதலும் குவிதலும். ....296
எகின மென்னும்பெயர் புளிமாவு மன்னமும்
காவரிமாவு நீர்நாயும் புளியின்றருவும் புகலப்பெறுமே. ....297
எஃகெனும் பெயரே வேலுங் கூர்மையும்
உருக்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....298
எள்த லெனும்பெயர் இகழ்தலு நகையுமாம். ....299
எற்றெனும் பெயரே யிரக்கமும் எறிதலும்
அடித்தலும் எத்தன்மைத் தென்றலு மாமே. ....300
எற்றுதல் எனும்பெயர் எறிதலும் புடைத்தலும். ....301
எண்ணெனும் பெயரே யெள்ளு மிலக்கமுஞ்
சொதிடப் பெயரும் விசாரமு மெளிமையும். ....302
எழிலெனும் பெயரே யிளமையு மழகுமாம். ....303
எல்லை யெனும்பெயர் அளவையும் இரவியும். ....304
-----
எகர வருக்கம் முற்றும்.
ஏகார வருக்கம் ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். ....305
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ்
சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும்
காவலும் இரவுங் கருதுவர் புலவர். ....306
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும்
விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும்
அசுபதிப் பெயரு மாகு மென்ப. ....307
ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். ....308
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும்
மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. ....309
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும்
தலைவனும் எனவே சாற்றினர் புலவர். ....310
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும்
வாளும் எனவே வகுத்தனர் புலவர். ....311
ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். ....312
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு
மானுங் கண்ணே ணியுமே வழங்குவர். ....313
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும்
ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....314
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும்
கோடலின் பெயருங் கூறுவர் புலவர். ....315
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும்
உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. ....316
ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். ....317
ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். ....318
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும்
மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். ....319
----
ஏகார வருக்கம் முற்றும்.
ஐகார வருக்கம் ஐயம் எனும்பெயர் பிச்சைகொள் கலனும்
பிச்சையும் வெண்ணெயுஞ் சந்தே கமுமாம். ....320
ஐயை யெனும்பெயர் உமையும் துர்க்கையும்
அருந்தவப் பெண்ணும் அரசாளும் காளியும்
புதல்வியும் என்னப் புகன்றனர் புலவர். ....321
ஐயெனும் பெயரே குருவும் அரசனும்
எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும்
தலைவனும் தாரமும் சாற்றப் பெறுமே. ....322
ஐயன் எனும்பெயர் குருவுஞ் சாத்துனுந்
தந்தையு முதல்வனு மந்தணண் பெயருமாம். ....323
ஐதெனும் பெயரே நொய்தும் விரைவுமாம். ....324
---
ஐகார வருக்கம் முற்றும்.
ஒகர வருக்கம் ஒளியெனும் பெயரே யொண்சுட ரோனும்
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும்
கேட்டை யுமொளிப் பினிடமுங் கிரணமும். ....325
ஒலியெனும் பெயரே ஓசையும் காற்றும்
இடியு மெனவே யியம்பப் பெறுமே. ....326
ஒழுக்க மெனும்பெயர் வழியும் குலமும்
ஆசா ரமுமென அறியப் பெறுமே. ....327
ஒலியல் எனும்பெயர் ஒண்புனல் யாறும
ணில்லுஞ் சருமமும் உடுத்த ஆடையுமாம். ....328
ஒளிவட்ட மெனும்பெயர் சக்கரா யுதமும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....329
ஒண்மை யெனும்பெயர் நன்மையு மழகும்
மிகுதியும் ஒழுங்கு மறிவும் விளம்புவர். ....330
ஒதுக்க மெனும்பெயர் மறைவும் நடையுமாம். ....331
ஒன்றெனும் பெயரோ ரெண்ணு முத்தியுமாம். ....332
ஒல்லை யெனும்பெயர் சிறுபொழுதும் விரைவும்
தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர். ....333
ஒதுங்கல் எனும்பெயர் ஒதுங்குதல் நடையுமாம். ....334
------
ஒகர வருக்கம் முற்றும்.
ஓகார வருக்கம் ஓண மெனும்பெயர் மாதவ னாளும்
வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர். ....335
ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும்
அவர்விளை யாடலும் விளையாடு கலனும்
இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே. ....336
ஓங்க லெனும்பெய ருயரமு மலையும்
மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர். ....337
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும்
யானை நுதலணி பட்டமும் கிடங்கும்
ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர். ....338
ஒதை யெனும்பெயர் சத்த வொலியும்
புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும்
நதியும் நகரமும் நவிலப் பெறுமே. ....339
ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும்
அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும்
கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர். ....340
ஓவியரெனும் பெயர் சித்திர காரரும்
சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே. ....341
ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும்
ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர். ....342
ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம். ....343
ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும்
நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம். ....344
ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும்
கவரி மாவின் பெயருங் கருதுவர். ....345
ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும்
பெண்பான் மயிரு மறிவும் பூஞையும்
ஒத்தியு மெனவே யுரைக்கப் பெறுமே. ....346
ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும்
ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....347
----
ஓகார வருக்கம் முற்றும்.
ககரவருக்கத் தொகுதி
ககர அகர வருக்கம் கலையெனும் பெயரே கல்வியு நூலு
மானி னேறு மகர விராசியும்
மதியின் பங்கு மரத்தின் சுவடு
மாண்முகப் பெயருங் கால நுட்பமும்
புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர். ....348
கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும்
பன்றியு மெனவே பகரப் பெறுமே. ....349
கரமெனும் பெயரே கையுங் கழுதையும்
கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம். ....350
கழியெனும் பெயரே காலைக் காலமு
மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர். ....351
கவியெனும் பெயரே கவிவல் லோனும்
குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும்
வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர். ....352
கவையெனும் பெயரே கவருங் காடும்
எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம். ....353
கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும்
பூர நாளும் புகலப் பெறுமே. ....354
களிறெனும் பெயரே யத்த நாளும்
எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும்
யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே. ....355
கள்வ னெனும்பெயர் கடக விராசியுங்
கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ்
சோரனு முகவுஞ் சொல்லுவர் புலவர். ....356
கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு
மழிவிலாப் பொருளுங் குமரி யாறும்
கற்றாழை யினொடு கன்னி யிராசியுந்
துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே. ....357
கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம். ....358
கலியெனும் பெயரே கடையுகப் பெயரும்
வலியு மொலியும் வலியோன் பெயருமாம். ....359
கணமெனும் பெயரே கால நுட்பமும்
உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும்
திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர். ....360
கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும்
நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும்
சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர். ....361
கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்
துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர். ....362
கடியெனும் பெயரே காவலும் விரைவும்
அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும்
விளக்கமும் புதுவையு மணமு முடுகலும்
பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர். ....363
கழுதெனும் பெயரே காவற் பரணும்
வண்டும் பேயும் வழங்கப் பெறுமே. ....364
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்
தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும்
சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர். ....365
கயமெனும் பெயரே களிறும் ஆழமுங்
குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம். ....366
கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம். ....367
கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும்
நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர். ....368
கனமெனும் பெயரே மேகமும் பாரமும்
தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும்
முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே. ....369
கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும்
கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே. ....370
கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும்
மலைமுழை யுமென வழங்கப் பெறுமே. ....371
ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும்
விசும்பு மெனவே விளம்பப் பெறுமே. ....372
கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும்
புணர்த நாட்பெயரும் புகலப் பெறுமே. ....373
கயினி யெனும்பெயர் அந்த நாளும்
விதவையு மெனவே விளம்பப் பெறுமே. ....374
கடமெனும் பெயரே யானைத் திரளும்
மற்றதன் கொடிறு மதமும் கானமும்
யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும்
நீதியுங் கும்பமு நெடுமநச் சாரலும்
எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர். ....375
கவலை யெனும்பெயர் கவர்படு வழியும்
துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம். ....376
கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும்
வட்ட வடிவு மலையின் பக்கமும்
படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர். ....377
கட்சி யெனும்பெயர் காடுங் கூடும்
கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர். ....378
கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும்
முள்ளுங் கானமு மொழியப் பெறுமே. ....379
கணியெனும் பெயரே மருத நன்னிலமும்
வேங்கை மரமும் விளம்புவர் புலவர். ....380
கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம். ....381
களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும்
கருநிற மும்போர்க் களமும் விடமுமாம். ....382
கடையெனும் பெயரே கதவு முடிவும்
இடமு மெனவே யியம்பப் பெறுமே. ....383
கறையெனும் பெயரே கருமையு முரலுங்
குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம். ....384
கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந்
துண்டமு மெய்புகு கருவியும் வாளுங்
கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும்
இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர். ....385
கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும்
கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர். ....386
கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும்
கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும்
ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம். ....387
கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும்
அணிகலச் செப்பும் அச்சு மணியும்
வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே
பகர்ந்தனர் புலவர். ....388
கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது
கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும்
கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே. ....389
கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும்
மணிவடப் பெயரு மயிலிறகு மாமே. ....390
கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும்
நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர். ....391
கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும்
கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர். ....392
கல்லெனும் பெயரே யருவியு மோசையும்
மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப. ....393
கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம். ....394
கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந்
தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர். ....395
கதையெனும் பெயரே காரணச் சொல்லுந்
தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர். ....396
கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும்
மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே. ....397
கதவெனும் பெயரே கபாடமும் காவலும். ....398
கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும்
வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர். ....399
கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந்
துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர். ....400
கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம். ....401
கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம். ....402
கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும்
கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர். ....403
கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும்
கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர். ....404
கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும். ....405
கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும்
பிடியின் பெயரும் பேசுவர் புலவர். ....406
கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே
வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம். ....407
கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும்
முனிவன் பெயரு மொழியப் பெறுமே. ....408
கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும்
எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர். ....409
கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும்
தழும்பு மெனவே சாற்றினர் புலவர். ....410
கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும்
பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே ....411
கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும்
வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....412
கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்
வானம் பாடியும் கலிங்க தேசமுமாம். ....413
கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம். ....414
சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும்
அம்பின் பெயரு மாகு மென்ப. ....415
கவடெனும் பெயரே புரோசக் கயிறும்
மரத்தின் கவடு மனக்க படமுமாம். ....416
கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும்
பெலமும் புலவோர் பேசப் பெறுமே. ....417
கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு
பிடியா னையுமெனப் பேசப் பெறுமே. ....418
கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும்
திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர். ....419
கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும்
தேற்றமு மெனவே செப்பப் பெறுமே. ....420
கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந்
தத்துவ விகற்பமு நிறையறி கருவியும்
பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர். ....421
கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் ....422
கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம். ....423
கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம். ....424
களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம். ....425
கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும்
தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர். ....426
கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம். ....427
கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும்
இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம். ....428
கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம். ...429
கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும்
இருந்தையு மெனவே யியம்புவர் புலவர். ....430
கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும்
தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர். ....431
கனவெனும் பெயரே கனாவு மயக்கமும். ....432
கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும்
தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர். ....433
கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும். ....434
களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும்
கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர். ....435
கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும்
வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....436
கற்பக மெனும்பெயர் கற்பக தருவும்
சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர். ....437
கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம். ....438
கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும். ....439
கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன்
சனியின் பெயரும் சாற்றப் பெறுமே. ....440
கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும்
காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர். ....441
கலுழி யெனும்பெயர் கானி யாறும்
கலங்கிய நீருங் கருதப் பெறுமே. ....442
கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....443
கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும்
கடத்தலு மெனவே கருதப் பெறுமே. ....444
கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும்
காலுங் காலணிப் பெயருங் கருதுவர். ....445
கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும்
நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....446
கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும்
களவின் பெயருங் கருதப் பெறுமே. ....447
களப மெனும்பெயர் யானைக் கன்றும்
கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே. ....448
கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....449
கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும்
இடத்தின் பெயரும் விழியு மியம்புவர். ....450
கருவி யெனும்பெயர் கவசமும் யாழும்
பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந்
துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும்
கசையும் பல்லியப் பெயருங் கலணையுந்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....451
கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும்
விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே. ....452
கழங்கெனும் பெயரே வேல னாடலுங்
கொடியின் கழலுங் கூறுவர் புலவர். ....453
கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும்
உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம். ....454
கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும். ....455
கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும்
ஆர வாரத்தின் பெயரு மாமே. ....456
கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின்
சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....457
கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும்
நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....458
ககர வருக்கம் முற்றும்.ககர ஆகார வருக்கம்
காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங்
கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும்
வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும்
கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே. ....459
கால மெனும்பெயர் விடியற் காலமும்
விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம். ....460
காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந்
தாளும் பொழுதுந் தறியு மளவையும்
வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும்
பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும்
முளையு மெனவே மொழிந்தனர் புலவர். ....461
காள மெனும்பெயர் கருமையு நஞ்சும்
ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர். ....462
காரெனும் பெயரே மாரிக் காலமும்
கறுவிய கருமங் கடைமுடி வளவும்
தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும்
உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங்
கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர். ....463
காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும்
மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம். ...464
காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு
தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே. ....465
காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம். ....466
காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும்
அத்த நாளு மோரிசையு மடுப்புமாம். ....467
காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும்
இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர். ....468
காய மெனும்பெயர் கறியின் கரிப்பும்
ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம். ....469
காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும்
ஆக்கையுங் கனமும் கோப முமாமே. ....470
காசெனும் பெயரே மணியின் கோவையும்
குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர். ....471
காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....472
காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம். ....473
கான மெனும்பெயர் காடு மிசையுமாம். ....474
காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு
நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர். ....475
கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும்
மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும்
பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே. ....476
காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும்
துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம். ....477
காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும்
நாணலும் காசை மரமு நவிலுவர். ....478
காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும்
பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம். ....479
காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும்
பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே. ....480
காழெனும் பெயரே மணியின் கோவையு
மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம். ....481
காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும்
ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர். ....482
கானெனும் பெயரே காடு மணமுமாம். ....483
காப்ப, எனும்பெயர் வெண்ணீருங் காவலும்
தூசுங் கதவும் சொல்லுவர் புலவர். ....484
காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும். ....485
காலிலி யெனும்பெய ரருணனும் சனியும்
பாம்பு மெனவே பகரப் பெறுமே. ....486
காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந்
தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும்
அம்புங் கோலு மணிகலச் செப்பும்
குதிரை யுங்கமண் டலமு மியம்புவர். ....487
காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம். ....488
காம னெனும்பெயர் கணைவேள் பெயரும்
ஐந்தரு விறைவன் பெயரு மாமே. ....489
காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே
விருப்பமு மெனவே விளம்புவர் புலவர். ....490
காம மெனும்பெயர் விரகமும் விருப்பும். ....491
ககர ஆகார வருக்கம் முற்றும்.ககர இகர வருக்கம்
கிடக்கை யெனும்பெயர் கிளர்புவிப் பெயரும்
சயனமு மென்னச் சாற்றப் பெறுமே. ....492
கிழமை யெனும்பெயர் குணமு முரிமையும்
வாரமு மெனவே வழங்குவர் புலவர். ....493
கிளையெனும் பெயரே மூங்கிலும் சுற்றமும்
கிளைத்தலு மோர்பண் பெயருங் கிளத்துவர். ....494
கிட்டி யெனும்பெயர் தலையீற் றாவும்
தாளமு மெனவே சாற்றுவர் புலவர். ....495
கின்னர மெனும்பெயர் கின்னர மிதுனமும்
யாழின் பெயரு நீர்ப்பறவையு மாந்தையும். ....496
கிடுகெனும் பெயரே தேர்மரச் சுற்றும்
பரிசையு மெனவே பகரப் பெறுமே. ....497
கிளரெனும் பெயரே கிளர்த்தெழு கிரணமும்
கோட்டு மலர்ப்பூந் தாதுங் கூறுவர். ....498
கிஞ்சுக மெனும்பெயர் முண்முருக் குடனே
சென்னிறப் பெயருஞ் செப்பப் பெறுமே. ....499
கிள்ளை யெனும்பெயர் கிளியுங் குதிரையும். ....500
கிருட்டின னெனும்பெயர் கேசவன் பெயரும்
அருச்சனன் பெயரு மாகு மென்ப. ....501
கிருத்திம மெனும்பெயர் தொழிலுஞ் சருமமும்
பூதமும் பொய்யும் புகலப் பெறுமே. ....502
கிம்புரி யெனும்பெயர் கிரீட விகற்பமும்
களிற்றின் மருப்பின் பூணுங் கருதுவர். ....503
கிழியெனும் பெயரே கிழிபடு துகிலும்
இருநிதிப் பெயரு மெழுது படமுமாம். ....504
கிருட்டி யெனும்பெயர் பன்றியின் பெயரும்
ஓரீற் றாவும் உரைக்கப் பெறுமே. ....505
ககர இகர வருக்கம் முற்றும்.ககர ஈகார வருக்கம்
கீர மெனும்பெயர் கிளியும் பாலுமாம். ....506
கீச கமெனும் பெயர் மூங்கிலுங் குரங்குமாம். ....507
கீத மெனும்பெயர் இசையுடன் வண்டுமாம். ....508
கீலால மெனும்பெயர் நீருங் காடியும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....509
கீழெனும் பெயரே கிழக்குங் கீழ்மையும்
கீழ்ப்படு சாதியு மிடமுங் கிளத்துவர். ....510
ககர ஈகார வருக்கம் முற்றும்.ககர உகர வருக்கம்
குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....511
குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும்
வருண விகற்பமு மனையுங் கோயிலும். ....512
கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும்
வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர். ....513
கும்பி யெனும்பெயர் யானையும் சேறும்
நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....514
குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும்
அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம். ....515
குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும்
ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே. ....516
குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும்
உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர். ....517
குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம். ....518
குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும்
உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும்
சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும்
கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர். ....519
குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும்
கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும்
நாரை பெயரோடு மூல நாளும்
புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும். ...520
குன்றெனும் பெயரே வருண னாளும்
சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் ....521
குருவெனும் பெயரே குரவனு நிறமும்
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும்
தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம். ....522
குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும்
குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும். ....523
குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும்
அந்நில யாழுமோர் மரமு மாமே. ....524
குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும்
மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே. ....525
குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும்
காடு மெனவே கருதுவர் புலவர். ....526
குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....527
குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....528
குழையெனும் பெயரே சேறுந் துவாரமும்
தளிறுங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர். ....529
குடமெனும் பெயரே கும்பமும் பசுவும்
கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும்
நகர மக்காரமு நவிலப் பெறுமே. ....530
குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன்
புலைஞரு மெனவே புகன்றனர் புலவர். ....531
குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும்
நாழியுங் குறளு நவிலப் பெறுமே. ....532
குரலெனும் பெயரே வாசிக் கோவையும்
கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும்
கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும்
புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர். ....533
குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங்
கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே. ....534
குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும்
குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங்
கவணு மழுவுங் கருதப் பெறுமே. ....535
குரையெனும் பெயரே குதிரைப் பெயரும்
ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே. ....536
குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும்
அம்பின் குதையும் விற்குதையு மாமே. ....537
குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன்
கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர். ....538
குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம். ....539
குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும்
பறவை யிளமையு மாண்பான் மயிருமாம். ....540
குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும்
இசையின் குழலும் இருபான் மயிருமாம். ....541
கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும்
துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர். ....542
குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும்
வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர். ....543
குயமெனும் பெயரே யிளமையு முலையுங்
கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே. ....544
குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந்
தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர். ....545
குணமெனும் பெயரே கும்பமு மியல்புங்
கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர். ....546
குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும்
கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர். ....547
குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம் . ....548
குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு
மதியின் பெயரும் வழங்கப் பெறுமே. ....549
குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும்
பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர். ....550
குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும். ....551
குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும். ....552
குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும்
கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர். ....553
குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும்
செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே. ....554
குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....555
குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம். ....556
குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும்
மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர். ....557
நகர உகர வருக்கம் முற்றும்.ககர ஊகார வருக்கம்
கூற்றெனும் பெயரே கூற்றனும் வார்த்தையும். ....558
கூனியெனும்பெயர் குடும்பமுங் கூட்டமும்
பேயுஞ் சேனைத் தலைவனும் பேசுவர். ....559
கூட மெனும்பெயர் மலையின் குவடும்
கூட்டமு மறைவு மனவஞ் சனையும்
கொல்லன் சம்மட் டியையுங் கூறுவர். ....560
கூல மெனும்பெயர் பாகலும் பகவும்
வரம்பும் விலங்கின் வாலு நீர்க்கரையும்
தெருவும் பலபண்ட முமங்கா டியுமாம். ....561
கூளிய ரெனும்பெயர் பூதகண வீரரும்
கொலைத்திற லோருநட் பாளருங் கூறுவர். ....562
கூந்தலெனும் பெயர் மயிலின் றோகையும்
கோதையர் குழலுங் கூறப் பெறுமே. ....563
கூவிர மெனும்பெயர் தேரின் கொடிஞ்சியுந்
தேரு மெனவே செப்புவர் புலவர். ....564
கூத்த னெனும்பெய ருயிரின் பெயரும்
நடிப்போன் பெயரு நவிலப் பெறுமே. ....565
கூழெனும் பெயரே பலவகை யுணவும்
நெற்பயிர் முதலவுங் கனகமு நிகழ்த்துவர். ....566
கூரெனும் பெயரே கூர்மையு மிகுதியும். ....567
கூர லெனும்பெயர் மாதர்தம் மயிரும்
புள்ளின் சிறகும் புகலப் பெறுமே. ....568
கூழை யெனும் பெயர் கொடும்படை யுறுப்பும்
புட்சிறகு பெண்பான் மயிரும் புகலுவர். ....569
நகர ஊகார வருக்கம் முற்றும்.ககர எகர வருக்கம்
கெழுவுத லெனும்பெயர் மயக்கமும் பற்றுமாம் ....570
கெதியெனும் பெயர்பர கெதிநடை விரைவுமாம். ....571
ககர எகர வருக்கம் முற்றும்.ககர ஏகார வருக்கம்
கேடக மெனும்பெயர் ஊர்பொதுப் பெயரும்
பரிசையும் பலகையும் பகர்ந்தனர் புலவர். ....572
கேச மெனும்பெயர் பெண்ப