|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > மனோன்மணீயம் - சுந்தரம் பிள்ளை

manOnmaNIyam (a poetical play)
by cuntaram piLLai
மனோன்மணீயம்
ஆசிரியர் : சுந்தரம் பிள்ளை (1855-1891)
Etext Preparation and Proof-reading: Mr. Siva Kumar Pillai,.Shangai, Republic of China
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.பாயிரம்
கடவுள் வணக்கம்
(நேரிசை வெண்பா)
வேத சிகையும் விரிதலையும் மெய்யன்பர்
போதமும் போய் தீண்டாப் பூரணமே - பேதமற
வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.
தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.
ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.
எனவாங்கு
நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.
அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.
(நேரிசை வெண்பா)
அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.
பாயிரம் முற்றிற்று.
மனோன்மணீயம்
முதல் அங்கம் : முதற் களம்
இடம்: பாண்டியன் கொலு மண்டபம்
காலம்: காலை
(சேவகர்கள் கொலு மண்டபம்
அலங்கரித்து நிற்க)
(நேரிசை ஆசிரியப்பா)
|
1ம் சேவ: |
புகழ்மிகு அருமைதரு பொற்சிங் காதனந் |
|
2ம் சேவ: |
அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் |
|
3ம் சேவ: |
ஈதோ! நோக்குதி. |
|
4ம் சேவ: |
அவ்விடத் திருப்பதென்? |
|
3ம் சேவ: |
ஆரம் பொறு! பொறு! |
|
2ம் சேவ: |
முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! |
|
4ம் சேவ: |
எத்தனை பத்தி! எத்தனை கூட்டம்! |
|
3ம் சேவ: |
உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம். |
|
1ம் சேவ: |
அரசனும் ஈதோ அணைந்தனன். காணீர்! |
|
யாவரும்: (தொழுது) |
ஜய! ஜய! விஜயே! பவரா ஜேந்திரா!! |
|
ஜீவகன் |
வருக! வருக! குருகிரு பாநிதே!! |
|
சுந்தர: |
வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் |
|
ஜீவ: |
சுகம். சுகம். |
|
சுந்தர: |
இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்? |
|
ஜீவ: |
உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம். |
|
குடிலன் |
ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த |
|
சுந்தர: (எழுந்து) |
சம்போ! சங்கர! அம்பிகா பதேஎ! |
|
ஜீவ: |
என்னை! என்னை! எமக்கருள் குரவ! |
|
சுந்தர: |
காலம் என்பது கறங்குபோற் சுழன்று |
|
ஜீவ: |
ஆம்! ஆம்!சேவக அறைதி சென்று |
|
குடிலன்: (தனதுள்) |
நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல! |
|
சேவ: |
சுவாமி! |
|
முதல் நகர்வாசி : |
கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய |
|
2ம் நக: |
கேட்டோம்; கேட்டோம் நாட்டிற் கென்குறை |
|
3ம் நக: |
குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் |
|
1ம் நக: |
ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே |
|
2ம் நக: |
முனிவரங் கோதிய தென்னை? முற்றுந் |
|
3ம் நக: |
யாதோ |
|
4ம் நக: |
வாழ்த்தினர் போலும், மற்றென்? |
|
2ம் நக: |
பாழ்த்த இத் |
|
3ம் நக: |
ஐயமற் றதற்கேன்? யார்பரி வுறார்கள்? |
|
2ம் நக: |
அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை |
|
4ம் நக: |
ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு |
|
[நகர்வாசிகள் போக] |
முதல் அங்கம்: இரண்டாம் களம்
இடம்: கன்னி மாடம்
காலம்: ஏற்பாடு
[மனோன்மணியும் வாணியும் கழல்
விளையாடி இருக்க]
(ஆசிரியத் தாழிசை)
|
மனோன்மணி: |
(கழல் விளையாடிப் பாட) |
|
வாணி: |
நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண் |
|
மனோன்: |
இருளில் தனித்துறை ஏழையர் தங்கள்மேற் |
|
வாணி: |
எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல் |
|
மனோன்: |
தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத் |
|
வாணி: |
உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால் |
|
மனோன்: (சிரித்து) |
ஏதடி வாணி! ஓதிய பாட்டில் |
|
வாணி: |
ஏதம் மாநீ சூது நினைத்தனை? |
|
மனோன்: |
மறையேல்! மறையேல் பிறைபழி நுதலாய்! |
|
வாணி: |
ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம் |
|
மனோன்: |
ஏதடி! நுமது காதல் கழிந்ததோ? |
|
வாணி: |
(கண்ணீர் ச்ிந்தி) |
|
மனோன்: |
ஏனிது! ஏனிது! வாணி! எட்பூ |
|
வாணி: |
எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா |
|
மனோன்: |
முல்லையின் முகையும் முருக்கின் இதழுங் |
|
வாணி: |
அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி. |
|
மனோன்: |
வலம்புரிப் புறத்தெழு கலந்திகழ் மதியென |
|
வாணி: |
அறியாயொன்றும், அம்மா! அரிவையர் |
|
மனோன்: |
புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல் |
|
வாணி: |
ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்மா! |
|
மனோன்: |
பித்தே பிதற்றினை. எத்திறமாயினும் |
|
வாணி: |
ஈதெல்லாம் உனக்குயா ரோதுதற் கறிவர்! |
|
மனோன்: |
மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில் |
|
வாணி: |
சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் |
|
மனோன்: |
வேண்டுமேற் காண்டி அவையெலாம் வீண், வீண் |
|
வாணி: |
நூறாக் கேட்கினும் நூலறி வென்செயும்? |
|
மனோன்: |
உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும் |
|
வாணி: |
அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது |
|
மனோன்: |
அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெரிஞ்சிலா |
|
செவிலி: |
தாயே! வந்துபார் நீயே வளர்த்த |
|
மனோன்: |
போடி! நீ யாது புகன்றனை? தவத்தை |
|
முதற்றோழி: |
பொய்யன் றம்ம! மையுண் கண்ணால் |
[எல்லோரும் போக]
முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.
முதல் அங்கம்: மூன்றாம் களம்
இடம்: கொலு மண்டபம்
காலம்: காலை
(ஜீவகன், குடிலன், நாராயணன்
சம்பாக்ஷித்திருக்க)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
|
ஜீவகன்: |
நமக்கத னாலென்? நன்றே யாமெனத் |
|
குடிலன்: |
குறையா னொன்றுங் கண்டிலன். கொற்றவ! |
|
ஜீவ: |
ஐயரும் அழுக்க றடைந்தார் மெய்ம்மை |
|
குடில: |
அதிசய மன்றுபூ பதியே! இதுவும் |
|
ஜீவ: : |
ஒவ்வும்! ஒவ்வும்! நீ உரைத்தது முற்றும். |
|
நாராயணன்: |
(தனதுள்) |
|
(நேரிசை வெண்பா) |
|
|
நாரா: |
(அரசனை நோக்கி) |
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
|
சேவகன்: |
மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். |
|
ஜீவ: |
வரச்சொல் சேவக! |
|
குடில: (தனதுள்) |
அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன். |
|
ஜீவ: |
(சகடரை நோக்கி) |
|
சகடர்: |
ஆம்! ஆம்! அடியேன். |
|
ஜீவ: : |
மேயின விசேடமென்? விளம்புதிர். என் குறை |
|
சகடர்: |
அறத்தா றகலா தகலிடங் காத்துப் |
|
ஜீவ: |
சீலஞ் சிந்தை கோல் மனைத்துஞ் |
|
குடில: |
ஆவ தாயின் அறிவியா தொழிவனோ? |
|
ஜீவ: |
இடையூ றென்கொல்? இடியே றன்ன |
|
குடில: |
இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்! |
|
ஜீவ: |
என்னை? சகடரே இடையூ றென்னை? |
|
சகட: |
பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும் |
|
ஜீவ: |
ஏனிது சகடரே! என்கா ரியமிது! |
|
நாராயணன்: (தனதுள்) |
பாதகன் கிழவன் பணத்திற்காக |
(நிலைமண்டில ஆசிரியப்பா தொடர்ச்சி)
|
ஜீவ: |
தனிமொழி யென்னை? |
|
நாரா: |
சற்றும் பிசகிலை. |
|
ஜீவ: |
காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் |
|
நாரா: |
சிலவரு டந்தான் |
|
ஜீவ: |
விடு,விடு, நின்மொழி யெல்லாம் விகடம். |
|
சகட: |
சிறிதியா னறிவன் |
|
குடில: |
(அரசனை நோக்கி) |
|
சகட: |
(குடிலனை நோக்கி) |
|
ஜீவ: |
ஆமாம்! யாமுங் கண்டுளேஞ் சிலகால் |
|
குடில: |
அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். |
|
ஜீவ: |
அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே; |
|
குடில: |
இங்குளன் என்றனர். |
|
ஜீவ: |
மெத்தவும் நன்மை அப்படி யேசெய் |
|
குடில: |
சித்தம்; ஆயினும் செல்கிலன்; முனிவர் |
|
ஜீவ: |
சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்? |
|
சகட: |
இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி; |
|
ஜீவ: |
(செவிலியின் முக நோக்கி) |
|
செவிலி: |
நேற்றிரா முதலா- |
|
ஜீவ: |
பிணியோ என் கண்மணிக்கு? |
|
செவிலி: |
பிணியா |
|
ஜீவ: |
சுரம்! சுரம்! ஓ! ஓ! சொல்லுதி யாவும் |
|
செவிலி: |
அறியேம் யாங்கள், ஐய! அம் மாயம் |
|
ஜீவ: |
ஆ! ஆ! நோவிது காறுமொன் றறிகிலள் |
|
குடில: |
தவஞ்செய சை யென்றுதாய் நவின்ற |
|
ஜீவ: |
வறிதவ் ஐயம் |
|
குடில: |
(தனதுள்) |
[குடிலன் போக]
முதல் அங்கம்: மூன்றாம்
களம் முற்றிற்று.
முதல் அங்கம்: நான்காம் களம்
இடம்: கன்னி மாடம்
காலம்: மாலை
[மனோன்மணி சயனித்திருக்க, ஜீவகன்,
வாணி, செவிலி சுற்றி நிற்க]
(நேரிசை ஆசிரியப்பா)
|
ஜீவகன்: |
உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! |
|
செவிலி: |
உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் |
|
ஜீவ: |
ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! |
|
மனோன்: |
(கண்ணீர் தளும்பி) |
|
ஜீவ: |
குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ |
|
வாணி: |
அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே |
|
ஜீவ: |
புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் |
|
வாணி: |
கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; |
|
ஜீவ: |
ஆமோ அன்றோ யாமஃ தறியேம்; |
|
வாணி: |
இலையெனில்? |
|
ஜீவ: |
கன்னியா யிருப்பாய் என்றும். |
|
வாணி: |
சம்மதம். |
|
ஜீவ: |
கிணற்றிலோர் மதிகொடு சாடில் |
|
வாணி: |
விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? |
|
ஜீவ: |
நானே பிடித்த முயற்கு மூன்றுகால் |
|
வாணி: |
அரிவையர் பிழைப்பர்? (சேடி வர) |
|
சேடி: |
சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். |
|
ஜீவ: |
சாலவு மினிதே; |
|
வாணி: |
இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்; |
|
ஜீவ: |
(முனிவரை தொழுது) |
|
சுந்தர: |
(மனோன்மணியை நோக்கி) |
|
மனோன்மணி: |
(வணங்கி) |
|
செவிலி: |
(மனோன்மணியை நோக்கி) |
|
சுந்தர: |
(ஜீவகனை நோக்கி) |
|
ஜீவ: |
எங்குல குருவே! இயம்பிய தொவ்வும் |
|
சுந்தர: |
உலகுள மற்றை யரசெலாம் நலமில் |
|
ஜீவ: |
நல்லது தேவரீர் சொல்லிய படியே, |
|
சுந்தர: |
யோசனை வேண்டிய தன்று நடேசன் |
|
ஜீவ: |
கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி... |
|
சுந்தர: |
(எழுத்து) |
|
ஜீவ: |
தொழுதோம்; தொழுதோம்; செவிலி யவ்வறைக் |
|
[ஜீவகன் முதலியோர் போக] |
முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.
முதல் அங்கம்: ஐந்தாம் களம்
இடம்: குடிலன் மனை
காலம்: மாலை
[குடிலன் உலாவ]
(இணைக்குறள்
ஆசிரியப்பா)
|
குடிலன்: |
(தனிமொழி) |
|
சேவகன்: |
ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திர! |
|
குடில: |
(வாசித்து நோக்கி) |
|
(நேரிசை ஆசிரியப்பா) |
|
|
சேவகன்: |
வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் |
|
குடில: |
நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் |
முதல் அங்கம்; ஐந்தாம் களம் முற்றிற்று.
(கலித்துறை)
சீரும் வதுவையுஞ் சேரிமுறை செப்பியுஞ் சீவகன்றான்
போரும் நிதனமும்
புந்திசெய் மந்திரம் போற்றினனே
சாருந் தனுகர ணங்களைத் தானெனுந்
தன்மைவந்தால்
யாரும் அருள்வழி நிற்கலர் மாயை யடைவிதுவே.
முதல் அங்கம்
முற்றிற்று.
இரண்டாம் அங்கம் : முதற் களம்
இடம்: அரண்மனை
காலம்: வைகறை
[ஜீவகனும் குடிலனும்
மந்திராலோசனை]
(நேரிசை ஆசிரியப்பா)
|
ஜீவகன்: |
சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! |
|
குடிலன்: |
இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் |
|
ஜீவ: |
பகருதி வௌிப்படப் பண்பாய் |
|
குடில: |
எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; |
|
ஜீவ: |
கூடா தஃதொரு காலும்; குடில! |
|
குடில: |
குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! |