தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் > பட்டுக்கோட்டை பாடல்கள் - பொருளடக்கம் >   அரசியல் அறம் > நாட்டு நலம்இயற்கை > தெய்வம் தேடுதல் > சிறுவர் சீர்திருத்தம் >காதல் சுவை >  நகைச்சுவை > தத்துவம் > தனிப்பாடல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattukottai Kalyanasundaram: 1930 - 1959

 பட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள்
காதல் சுவை

6.1 காதலின் இலக்கணம்
6.2 காதல் பலன்
6.3 கடல் கடப்பேன்
6.4 ஆசைக்குப் பேதமில்லை
6.5 நாணம் எதற்கு
6.6 ஆசை வளருது
6.7 விருந்துக்கு அழைக்குது
6.8 சக்திக்குமேல் ஆசை
6.9 வண்டைத்தேடும் மலர்
6.10 இன்பம் காணலாம்
6.11 மூடிவைத்த காதல்!
6.12 தடைபோடும் நாணம்
6.13 பெண் தெய்வம்
6.14 பேசும் விழிகள்
6.15 சிலைக்குள் தெய்வம்
6.16 விருந்து!
6.17 கண்ணும் கண்ணும் பேசுது
6.18 பார்த்து ரசிப்பேன்!
6.19 கலையான நிலை
6.20 மாறும் மனம்
6.21 பூமாலை போட்டவன்
6.22 தாலி கட்டும் வீரன்
6.23 சேவை
6.24 பகைக்குரல் மாறுதே!
6.25 நல்ல துணைவன்
6.26 பெண் முகம் கண்ணாடி
6.27 எண்ணக் கனவுகள்!
6.28 பருவம்
6.29 கதை சொல்லும் தீபாவளி!
6.30 பொல்லாத காதல்
6.31 பெண்ணென்ற கோயில்
6.32 மாறாத ஆசை
6.33 காதலர் நிலை
6.34 கண் மலர்
6.35 நடக்கும் மின்னல்!
6.36 ஒன்றுபட்ட கணவனுக்கு
6.37 காதல் தோல்வி
6.38 அன்பு விதை
6.39 இல்லறம்
6.40 புது அழகு
6.41 காதலை ஏற்கும் நிலவு!
6.42 தடையில்லை!
6.43 இல்லற ஓடம்
6.44 கதை கட்டுவார்
6.45 இன்ப வேகம்
6.46 பெரும் சுகம்
6.47 ஆசை மனம்!
6.48 இன்பம் தேடுது
6.49 பேசும் சிட்டு
6.50 கண்ணால் அடக்குவேன்
6.51 மயிலோ குயிலோ!
6.52 வெளிவேசம்!
6.53 கேள்வியும் பதிலும்
6.54 வளைகாப்பு
6.55 மங்கையின் மகிமை
6.56 இன்ப கீதம்
6.57 ஒரு விழிப் பார்வை
6.58 முற்றிய காதல்
6.59 அன்பு ஆசை
6.60 பெண் உறவு!
6.61 மணமகள்
6.62 பொறுப்புள்ள பெண்
6.63 நன்றி கூறும் தென்றல்
6.64 பிரிக்க முடியுமா
6.65 ஒற்றுமை கலைந்தால்...
6.66 எண்ணத்தில் பொருத்தம்
6.67 வழி தேடும் காதல்
6.68 துணை தேடுதே!
6.69 அன்பு வளருமா?
6.70 வளையல் போடும் சண்டை
6.71 அழகு வந்தது
6.72 பருவம் வாடுது


6.1 காதலின் இலக்கணம்
ஊரடங்கும் வேளையிலே
உள்ளம் கவரும் சோலையிலே-இவ
யாருக்காகத் காத்திருந்தா
ஏரிக்கரையிலே?-அதுதான்
எனக்கும் புரியலே! (ஊரடங்கும்)

ஆரணங்கின் மையலிலே
அந்தியிளம் வெய்யிலிலே
அங்கொருவர் வருவதுண்டு
அதையும் சொல்லிவிட முடியலே,
இங்கிருக்கும் இவமனசு
எங்கே இருக்குதோ தெரியலே? (ஊரடங்கும்)

உளறாதே பொன்னம்மா
உள்ளதைச் சொன்னா என்னம்மா?
கலங்காதே குப்பமா
நலுங்கு வைப்பது எப்பம்மா?
பழங்காலப் பைத்தியம் உங்கள்
இளங்காதல் ஏற்குமா? (ஊரடங்கும்)

காரணம் விளங்கியும் கதையேண்டி
காதலின் இலக்கணம் இதுதாண்டி
வீணர்கள் இட்ட சாதி வேலிதாண்டி
விந்தைகள் புரிவதும் அதுதாண்டி!
ஊரடங்கும் வேளையிலே
உள்ளம் கவரும் சோலையிலே-அவர்
வாரேனென்று வாக்களித்தார்;
வந்து சேரவே-அதனால்
மனமும் சரியில்லே (ஊரடங்கும்)

[ரங்கோன் ராதா,1956]

6.2 காதல் பலன்
பெண் : வாடாத சோலை
மலர் பூத்த வேளை
வளர் காதலாலே
மனம் பொங்குதே! (வாடாத)

ஆண் : தாமரைப் பூ மேலே
தாவிடும் மீன் போலே
காமினி நீயென்
கருத்தினில் பாய்ந்தாயே

பெண் : என் காதல் ராஜா,
எழில் மேவும் நேசா
மங்காத நிலவே இம்
மாநிலம்...நாணிடும்...
மாரனே...வாடாத

ஆண் : குறும்பும் நியாயமே
அரும்பே மாரனே!
கரும்பே ஆசைக் காவியமே!...கரும்
மாந்தளிர் மேனி
வாய்த்த என் ராணி!

பெண் : புகழ்ந்தினிக் கவிபாட
போதாது நேரம்

ஆண் : புது மடமயிலே வா
போவோம் ஆற்றோரம்...

பெண் : வாழ்வெனும் ஓடம்
புதுப் பள்ளிக்கூடம்

ஆண் : மாண்புயர் பாடம் கூறுது
நேர்வழி சேருது...

பெண் : ஆற்றோரம் மேவும்
அடர்சோலை போல
படர் காதலாலே
பலன் காணுவோம்;
சுடர் வீசி வாழ்வில்
சுகம் காணுவோம் (ஆற்றோரம் மேவும்)

[படித்த பெண்,1956]

6.3 கடல் கடப்பேன்
உனக்காக எல்லாம் உனக்காக-இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

கண்ணுக்குள்ளே வந்து
கலகம் செய்வதும் எதுக்காக?-மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன்
கருத்தைச் சொல்லிடு முடிவாக (உனக்)

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?-இல்லே
பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குளிக்கணுமா?-சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமே இல்லாமெ
கெடக்கணுமா (உனக்)

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் இடி
மின்னல் மழைபுயலானாலும் துணிஞ்சு
இறங்கிடுவேன் (உனக்)


[புதையல்,1957]

6.4 ஆசைக்குப் பேதமில்லை
கண்ணுக்கு நேரிலே, கலை என்ற தேரிலே
கைகொட்டி ஆடிவந்த காதலே.
இன்னும் சந்தேகமோ?
ஏனிந்த வேகமோ?

மின்னலின் தோழி எந்தன் மீதிலே
எண்ணங்கள் யாவும் அங்கே
எழிலன்னம் நானும் இங்கே
இனிவிட்டுப் போவதெங்கே?

இனிவிட்டுப் போவதெங்கே
முடிவைக் காணாமலே....
சொல்லக் கூடாததெல்லாம்
தோன்றும் இந்த நாழிகை

பல்லக்கு போன்ற மங்கை
பக்கம் வந்தால் வெட்கம் மீறாதோ?
ஆசைக்குப் பேதமில்லை
அதில் மட்டும் வேதமில்லை

அறிவுக்கே வேலையில்லை
குறிவைக்கும் போதிலே
கொஞ்சம் பெண் மோகம் வெல்லும்
நெஞ்சம் ஏது பாரிலே?

கொம்புத் தேனான என்னைக்
கொள்ளை கொண்டீர் வெள்ளையன்பாலே!

[அல்லாவுதீனும் அற்புதவிளக்கும்,1957]

6.5 நாணம் எதற்கு
ஏதுக்கோ?.......
இருவிழி மருளும் நாணங்கள் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

என்ன நினைவோ? இளமைத் துணிவோ?
சின்ன வாயில் புன்னகை ஏதுக்கோ? ஏதுக்கோ?

புன்னைக் கொம்பிலே புரளும் பூங்கொடி
மண்ணில் சிந்திடும் வாச மலரும்,
விண்ணோடு குலவும் கண்ணாடி நிலவும்
வீணாகும் மௌனம் ஏதுக்கோ?
வீசும் வேல்பார்வை ஏதுக்கோ?..... (ஏதுக்கோ)

ஓடைத் தாமரை ஏடுபோல்-முக
சாடை காட்டிடும் தங்கக் கலசமே!
ஒய்யார நிலையே உண்டாக்கும் சிலையே
ஓயாத குறும்பும் ஏதுக்கோ?
உல்லாச மயக்கம் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

[சௌபாக்கியவதி,1957]

6.6 ஆசை வளருது
இல்லாத அதிசயமா
இருக்குதடி ரகசியமா
எதைநெனச்சி இவமனசு
இப்படி யாச்சுதோ? (எதை)

கண்ணுக்குள்ளே புகுந்திருந்த
காதலனைப் பிரிஞ்சிருந்தா
கவலைப்பட்டு மெலிவதுண்டு -அப்படியிருக்குமா?-இல்லை

முன்னும் பின்னும் பழக்க மின்றி
மொதன் மொதலாப் பாத்திருந்தா
என்னென்னமோ பண்ணிடுமாம்-இப்படியிருக்குமா?

சின்னஞ்சிறு பருவத்திலே
ரொம்ப ரொம்ப ஆழத்திலே
சிந்தனைகள்
செல்வதுண்டு-அதாயிருக்குமோ?-இல்லை

கன்னியரின் கனவினிலே
காணுகின்ற கடலுக்குள்ளே
எண்ணமீன்கள் மேய்வதுண்டு -இதாயிருக்குமோ?

மன்னன் மேலே வெச்ச
ஆசை வளருது-மனசு
வண்டிச் சக்கரம் போலே
சும்மா சுழலுது

வேலையாய்ப் போனவரு
வெற்றியுடன் வருவாரு
மாலயிட்டு மணமுடித்து
வாழ்விலின்பம் தருவாரு

வாழைத் தோட்டம் போல தழைத்து
மங்கலமாய் வாழ்வாரு
மஞ்சுளா முகத்தினிலே
மஞ்சளாகத் திகழ்வாரு

வெளக்கி எடுத்த
வெங்கலத் தவலை-உனக்கு
என்னடி கவலை

அந்த ராசாமகன் ராசாவுக்கு
ராசாத்தியாய் ஆவதற்கு
நல்ல நாளும் வந்து இருக்கு ஆனாலும்
இந்த ராணிக்குத் தான்கொஞ்சம் கிறுக்கு (இல்லா)

[கற்புக்கரசி,1957]

6.7 விருந்துக்கு அழைக்குது
ஓ.......
சின்ன மாமா!-ரொம்ப நேரமா-உன்னைத்
தேடி மனசு வாடுறேன் குடிசையோரமா
பொன்னுச்சரம் போட்டுகிட்டு-
பூத்தமுகம் காட்டிக்கிட்டு
வண்ணக்கிளி வந்திருக்கேன் வாசப்பக்கமா
பொண்ணாளாம் என்னையே கண்ணாலம் பண்ணியே
எந்நாளும் வாழவே ஏந்தான் தயக்கமோ? (சின்ன)

ஆசை வீரா-மீசைக்காரா-பேசறீர் ஜோரா-மாறா
நேசம் மறந்தீரா?
வீசுங்காத்து விருந்துக் கழைக்குது
வித்தாரக்குருவி முத்தாரங்கேக்குது (சின்ன)

கண்ணாலே வெல்லும் மாது-நானே அது
சொன்னாலே விளங்காது
என்ன வேணும் ஏது வேணும்
என்னைப் பார்த்துக் கேளுங்காணும்
சொந்தக்காரி வேணுமா?
சூழ்ச்சிக்காரி வேணுமா? (சின்ன)


[சௌபாக்கியவதி,1957]

6.8 சக்திக்குமேல் ஆசை
ஓ கோ கோ மச்சான் நீங்களா?-இங்கே
உள்ளே நுழைய வந்தீங்களா?
கேக்காத கதையைக் கேட்டிங்களா?-அதை
கேட்டிருந்தும் கேள்விகளைப் போட்டீங்களா!

வண்ணமுக வெட்டழகி
வட்டவிழிக் கட்டழகி
சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா?-அவ
அன்னநடை மின்னலிடை
அத்தனையும் சேர்ந்து ஒரு
பொண்ணாவந்து பொறந்திருக்கா புரியுமா?
முத்தத்திலே மோடிகளிருக்கு
கட்டிப்போடும்-கையை
கட்டிப்போடும்-நித்தம்
ரத்தத்திலே நீஞ்சிற சாத்தான்
சத்தம் போடும்-மச்சான்
சத்தம் போடும்
சக்திக்கு மேல் ஆசையிருக்கு
தடவிப்பார்க்க மீசையிருக்கு
முத்திப்போன காதல் கிறுக்கு
முளிச்சுக்¢ட்டே குருடாயிருக்கு
அவலை நினைச்சு உரலை உருட்டும்
அயித்தை மவனைப் பாருங்கடி

கவலை புடிச்சிக் கலங்குறாரு
காலைப் புடிச்சி வாருங்கடி
தவளை தத்துற நடை நடக்குற
சங்கதி என்ன கூறுங்கடி
கொவளை நிறைய தண்ணி வச்சு அதில்
இவரைப் புடிச்சி போடுங்கடி
குதிச்சு ஆடுங்கடி-வந்து
கூட்டமாப் பாடுங்கடி
மதிச்சு நடங்கடி-வடை
மாலையப் போடுங்கடி

போட்டிக்கு வந்தவரு
மாட்டிக் கிட்டாராம்
பொண்ணுக்குக் கிண்ணி வச்சு
கோட்டை விட்டாராம்
பூட்டிய வீட்டில்
புகுந்து கிட்டாராம்
பொட்டியைத் தேடி
ஆளை மிதிச்சாராம்

கத்தியைக் கண்டொருத்தர்
காதல் கொண்டாராம்
கையில் கொடுத்தவுடன்
கண்ணீர் விட்டாராம்
எத்தனை பேரோ
ஏமாந்துட்டாராம்
சத்திரவீரர் வித்தை
காட்டுராறாம் (போட்டி)

சந்தர்ப்பம் பாத்து ஒரு
சாமி வந்தாராம்
சக்தி நிறைஞ்சுதுண்ணு
சாம்பல் தந்தாராம்
மந்திரம் பண்ணி
மயக்கப் பார்த்தாராம்
மயங்காத கன்னி
விலங்கைப் பூட்டினாளாம் (போட்டிக்கு)

வாடி வாடி கட்டப்பொண்ணெ வாடி
வந்திருச்சு ஜோடி மந்திரத்தை மீறி
வாசலுக்கு முன்னாடி-ஹேய்
கருப்போ சிவப்போ மச்சான்
விரும்புறது பெண்தானடி
கசப்போ இனிப்போ மச்சான்
ஒம்மேலே ஒரு கண்தானடி
பாரு பாரு பக்கம் வந்து பாரு
ஊரு பேரு ஒனக்குச் சொல்லுவாரு
ஒண்ணுமில்லே தகராறு-ஹேய் (கருப்போ)

ஏது ஏது இது தெரியாது
இருக்குது - காது
எதுவும் கேட்காது
எடத்தை விட்டு நகராது - ஹேய் (கருப்போ)

வீரா-வீராதி வீரரான சூரா!
மாறாத மோகங் கொண்டீரா?
மாணோடுறவாட வந்தீரா?

ஏறாத மாமலையில் ஏறி வேங்கையோடு
போர் புரிந்து பெரும் பேறடைந்தோமென
ஊர் திரும்பி விடுவீரா......?
பாரினில் அதிகாரமுடைய
நாரியரிடம் உமது சக்தி
நீரினில் விழும் தீ!

வேருடன் எல்லா விதிகளும்
மாறிடும் ஒரு மங்கை சொல்லில்
அதை மறந்தீரோ?-இத்தனை கேட்டும்
அறிவிழந்தீரோ?

ஓரக் கடலில் ஈரமிருந்தும்
ஊன்றும் விதையதில் உயிர் பெறாது;
உணர்ந்து திரிந்து ஓடினாலே
உங்கள் உயிர் இனி உடலில் வாழும்
அதை மறந்தீரோ-இத்தனை கேட்டும்
அறிவிழந்தீரோ?


[சௌபாக்கியவதி,1957]

6.9 வண்டைத்தேடும் மலர்
சிங்காரப் பூங்காவில்
ஆடுவோமே
தேனூறும் தென்பாங்கு
பாடுவோமே!

கன்னிப்பொண்ணு
கலங்குது நின்னு
என்னமோ எண்ணி
சுழலுது கண்ணு

அன்னந்தனைக் கண்டொருத்தன்
ஆசைகொள்ளுறான்
கன்னம் வச்சுக் கொண்டுபோக
கனவு காணுறான்

என்னைக் கொண்டு செல்லும்
அந்தக் கள்ளன் யாரடி?
எங்களுக்கென்ன தெரியும்
சொன்னாத்தானடி

வண்ண மலரடி முகம்
வாடுவது ஏனடி?
வண்டு வரவில்லை என்ற
வருத்தந்தானடி (கன்னி)

கையும் கையுந்தான் மேளம்-இந்தக்
கணக்குக்குள் இருக்குது தாளம்;
சதங்கைகட்டி -தாளத்தை ஒட்டிக்
கும்மியுங்கொட்டிக்-கண்ணையும் வெட்டிப்
பலபல கலைகளை அபிநயங்காட்டிப்
பம்பரப் பெண்களின் நாட்டியப்போட்டி (கையும்)

ஒன்னத்தானே,ஒன்னத்தானே,
ஓ சின்ன மானே
ஊமையானதேனடி?
ஒண்ணுமில்லை போங்கடி
கன்னத்திலே ரோஜா நிறம்
காணுவதும் ஏனோ?
காலம் செய்யும் வேடிக்கைக்கு
காரணந்தான் நானோ?
காணாத காட்சியை எல்லாம்
கற்பனை பண்ணுதல் ஞாயமா?
காணாம எப்படியம்மா
கற்பனை வந்திடும் மாயமா?
ஒன்னத்தானே- ஒன்னத்தானே (சிங்கார)


[சௌபாக்கியவதி,1957]

6.10 இன்பம் காணலாம்
பெண்:

சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான்ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா?-அம்மா
நீசொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா!-என்
கண்ணல்லவா கலா!-உன்
எண்ணம்போல் வாழ்விலே!
இன்பம்தான் என்றாள்! (வெண்)

கன்னிஎன் ஆசைக்காதலே!
கண்டேன் மணாளன் நேரிலே!
என்னாசை காதல் இன்பம் உண்டோ?-தோழி
நீ சொல் என்றேன் (வெண்)

கண்ஜாடை பேசும் வெண்ணிலா!
கண்ணாளன் எங்கே சொல்நிலா!-என்
கண்கள்தேடும் உண்மைதனை
சொல்நிலவே என்றேன்!

ஆண்:

வெண்ணிலா! நிலா!-என்
கண்ணல்லவா கலா!-உன்
எண்ணம்போல் வாழ்விலே
இன்பம் காணலாம்!

[ஆரவல்லி,1957]

6.11 மூடிவைத்த காதல்!
ஆண் : மஞ்சப்பூசி, பூ முடிச்சி
மங்கலக் குங்குமம் வச்சு
கொஞ்சும் கிளி போலவந்த அஞ்சலே-ஒன்ன
கோயிலுகட்டிக் கும்பிடப்போறேன்
நெஞ்சிலே!

பெண் : அக்கம்பக்கம் பார்க்காம,
அனுமதியும் கேக்காம
தெக்குச் சீமை ஆடுபோல கத்துறே-சும்மா
சொக்குப்பொடி போட்டு என்னைச் சுத்துறே

ஆண் : சங்கம் பழக் கொத்துபோல
பொங்குகடல் முத்துபோல
மங்கையே நீ சிரிச்ச-என்
மனதைத் தட்டிப் பறிச்சு
கண் கட்டி வித்தை காட்டிக்
கையைக் கட்டிப் போடுறே
கருப்பட்டிப் பேச்சுக்குள்ளே
காதலைவச்சு மூடுறே (மஞ்ச)

பெண் : சொல்லித்தான் தெரியணுமா?
சும்மா கம்மா கிளறணுமா?
கிறுக்குப்போல உளறணுமா?
உள்ளத்திலே கள்ளத்தனம்
கூடாதே மச்சான்;
கோமாளி வேஷங்கள் போடாதே-வெறுங்
கோணங்கி ஆட்டங்கள் ஆடாதே

ஆண்: நீ பொல்லாத பொம்புளே,

பெண் : என்னைப் புரிஞ்சிக்காத ஆண்பிள்ளே,

ஆண் : அட
எல்லாம் எனக்குத் தெரியும் பொண்ணே
எதுக்கு இப்படி நீ தயங்குற-ஒன்னை
ஏமாத்திட்டுப் போறாப்போல
ஏக்கம்புடிச்சி மயங்குற

பெண் : அடி ஆத்தே யாரும்
பர்த்துகிட்டாக்கா பொல்லாப்பு!

ஆண் : அட
அதுக்கெல்லாம் நீ அஞ்சாதே-என்
ஆத்தங்கரைத் தாழம்பூ! (மஞ்ச)

[சௌபாக்கியவதி,1957]

6.12 தடைபோடும் நாணம்
இன்ப முகம் ஒன்று
கண்டேன்-கண்டு
எதுவும் விளங்காமல்
நின்றேன்-அதை
இரவே உன்னிடம் சொல்ல
வந்தேன் (இன்ப)

தேடாமல் அலையாமல்
நேரிலே-சுகம்
ஓடோடி வந்தது
வாழ்விலே
மனம் ஆனந்தம்
பாடுவதேனோ-இது
ஆரம்ப ஜாடைகள்
தானோ-இன்று (இன்ப)

தோன்றாத நினைவெல்லாம்
தோன்றுதே-கண்கள்
தூங்காமல் ஆசையைத்
தூண்டுதே-அது
ஏனென்று கேட்கவும்
ஓடுதே-புது
நாணம் வந்தே தடை
போடுதே-பொங்கும் (இன்ப)

[நான் வளர்த்த தங்கை,1958]

6.13 பெண் தெய்வம்
கற்பின் இலக்கணமே
களங்கமில்லாத திலகமே!
தீபமே பெண் தெய்வம்-உன்
கண்ணிலே நீர்பெருகக்
கவலையிலே மனம் உருகக்
கடும் பயணம் போவதெங்கே?
கடும் பயணம் போவதெங்கே?

பெரும் பாசமே இழந்து-மனம்
பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா? (பெரும்)

சொந்தமும் பந்தமும்
சுகங்களும் அன்பும்
சூழ்ந்து கொண்டே தினம் பாராட்டும்.... (சொந்த)

இன்பமென் றுனை நம்பவைத்துமே
இடையினில் ஏமாற்றும்-இதில்
எத்தனை மாறாட்டம்? (பெரும்)

காலத்தின் கைகளில்
வண்டியும் மாடும்
கண்ட திசையில்-அதன்
மனம்போல் ஓடும்... (கால)

எங்கு சேருமோ
என்ன ஆகுமோ
இங்கில்லையோ கவனம்-எதுவரை
உன் பயணம்? (பெரும்)

[நான் வளர்த்த தங்கை,1958]

6.14 பேசும் விழிகள்
துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே
அதற்குள் காண்பதெல்லாம்
ஆனந்தமே!ஆனந்தமே!

வளையலின் நாதம்
வாளோடு சிநேகம்
வாழ்வின் உல்லாசம்
மாமணம் வீசும்!

எனதாசை போலே
நடந்தால் மண்மேலே
நாடாளும் ராஜா நீயே-அதனால்
காண்பதெல்லாம் ஆனந்தமே!

இனித்திடும் காலம்
இளமையில் ஜாலம்
மனத்தினில் புதுமையை
வளர்க்குது மேலும்

விழியாலே பேசும்
அழியா நேசம்
நிலம் மீதில் நீங்காததே!-அதனால்
காண்பதெல்லாம் ஆனந்தமே! ஆனந்தமே!

[மர்மவீரன்,1958]

6.15 சிலைக்குள் தெய்வம்
பறித்த கண்ணைப் பதித்துவிட்டேன்
பத்தினியே நீ எந்தன் கணவன் கண்ணே
எடுத்த கையால் கொடுத்து விடு
ஏழைக்கு வாழ்வு கொடு!

இதயக் கோயில் அடுத்தவளே! அருள்மணியே!
அறங்காத்த தமிழ் மகளே! அம்மா உன்மேல்
ஆணையிட்டுக் கேட்கிறேன்
அன்பிருந்தால் பண்பிருந்தால் கண்கொடம்மா!

ஏழைக்கு உன் அருள் எட்டாத சிகரமோ?
இன்னமும் கண்கள் குருடோ?
இரு செவியும் மந்தமோ-நான்
அழுதகுரல் கொஞ்சமோ?
இதயமும் கல்லானதோ?
இரக்கம் பிறக்கவில்லையோ?

வாய் திறந்து சொல்லம்மா?-உன்
மகளின் கதையைக் கேளம்மா-துன்பம்
வரை கடந்து போனபின்பும் மௌனமா?-நீதி
முறை கடந்த நீயும் பெண்கள் தெய்வமா?

பெற்றுதா வென்று வேண்டும்
மதுரைத் திருநகரமதிர
சிகரத்தோடு குரலும் உயர
மறைகற்றவர் பதறப்
பொறி சிதறிய நாவெங்கே?
மகரக் கொடியும் கொற்றவன்
மணி பொன் முடியும் கட்டொடு
மண்ணில் வீழப்பொங்கிய மனமெங்கே? (வாய்திறந்து)

கண்ணிலுதிரும் மலரெடுத்து
கற்புநாரில் சரம்தொடுத்து
அன்னையே உன் காலடியில் சாற்றினேன்-தினம்
ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்;
உன்னை நம்பிநம்பி என்றும் போற்றினேன்-இன்று
ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்;

செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ?

தனிச் சிலம்பெடுத்து
ஊர்தழற்படச் சினத்தெரிந்த
சக்தியுண்டெனப் படைத்த கர்வமோ?
மனைச்சுகம் கெடுத்துகண்
மணிச் சுடர்தனைப் பறித்து
வாட வைத்தல் நீ வளர்த்த தர்மமோ?
அம்மா....அம்மா....அம்மா.....!

[தங்கப் பதுமை,1958]

6.16 விருந்து!
மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
விருந்து வைக்கணும் வாருங்கடி
பறந்து பறந்து ஆடுங்கடி-நம்ப
பழைய பாட்டைப் பாடுங்கடி

மிரண்டு மிரண்டு முளிக்கிறாரு
விவரம் என்ன கேளுங்கடி
விஷயம் புரிஞ்சு போகும்-அவர்
பொட்டியைத் தொறந்து பாருங்கடி (மரு)

சூரணமா மாத்திரையா
வேரைப் புடுங்கி அரைச்சதா
பூரணமா குணந்தருமா
பொதிகை முனிவர் லேகியமா

என்னங்காணும் வைத்தியரே
இப்படிநின்னா நடக்கும்
சின்னப்பிள்ளை நடிக்கிறீங்க
சிரிப்பில்கூட சிக்கனமா? (மரு)

பொல்லாத மயக்கமுங்க
சொல்லாமல்தான் வருதுங்க
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் சுடுதுங்க
என்னடி காசியம்மா
இவருக்கு அது புரியுமா?
சொல்லடியம்மா வியாதிகளை
வெல்ல இவரால் முடியுமா? (மரு)

அந்தப் புரத்திலே வைத்தியம் பார்த்து
அனுபவம் இருக்கா இல்லையா?-அவள்
தங்கக் கரத்திலே நாடி பார்க்கவும்
தைரிய மிருக்கா சொல்லையா?

இன்பக் குளத்திலே ஏக மலராக
இருப்பவள் எங்கள் எஜமானி-தினம்
இளமை குலுங்க வரும் எழில்ராணி-அவள்
அன்பு மனதிலே என்ன இருக்குதோ
அறிந்து கொண்டால் நீர் பெரும் ஞானி

யாருக்கும் விளங்காதவள் பாவி...ஓய்ஓய்ஓய்ஓய்
கொஞ்சுவா கெஞ்சுவா அஞ்சினா மிஞ்சுவா
மிஞ்சினா அஞ்சுவா கெஞ்சுவா கொஞ்சுவா
தெரியுமா?

ஆண் : சரியம்மா
பெண் : மருந்து...பாடுங்கடி!

[தங்கப் பதுமை,1958]

6.17 கண்ணும் கண்ணும் பேசுது
கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட)

பொன்னான பொண்ணு தனியா நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு
கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு (கண்ணோட)

சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
நெஞ்சிலே கொண்ட அன்பு-இளம்
பிஞ்சிலே கொண்ட அன்பு-இப்போ
என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு...எதிர்
பாராமலே வந்த வம்பு (கண்ணோட)

கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கு வந்த அன்பு....அதில்
என்னைக்கும் இல்லே வம்பு...அது
என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு...ஆஹா
வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட)
எங்கே
என் இன்பம் எங்கே? என் இதயம் எங்கே?
பகைவர் நடுங்கும் நடை எங்கே?-என்
பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே)

வீரமாமுகம் தெரியுதே-அது
வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
காதல் வளருதே! வாழ்வு மலருதே!

[நாடோடி மன்னன்,1958]

6.18 பார்த்து ரசிப்பேன்!
ஆண் : பக்கத்தில் இருப்பே-நான்
பாத்துப் பாத்து ரசிப்பேன்
வெக்கத்திலே முழிப்பே-நான்
விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன் (பக்கத்திலே)

செக்கச் சிவந்திருக்கும்
சிங்காரக் கன்னத்திலே
செல்லமாக் கிள்ளிடுவேன்-நான்
உள்ளதெல்லாம் சொல்லிடுவேன்
(பக்கத்திலே)

பக்குவம் தவறாத
பரவக் கொண்டை மீன் போல
பளிச்சிண்ணு துள்ளிடுவே
பாஞ்சி மனசை அள்ளிடுவே (பக்கத்திலே)

காவேரி ஓரத்திலே
கால் பதுங்கும் ஈரத்திலே
காலையிலே நான் நடப்பேன்
கலப்பை கொண்டுகிட்டு,
கட்டழகி நீ வருவே
விதையைக் கொண்டுகிட்டு-நெல்லு
விதையைக் கொண்டுகிட்டு (பக்கத்திலே)

வாய்க்கா வெட்டின களைப்பிலே-நான்
வந்து குந்துவேன் வரப்பிலே-புது
மஞ்சள் நிறத்திலே, கொஞ்சும் முகத்திலே
நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக் கொடிநீ
கஞ்சிக் கொண்டு வருவே-இன்பம்
கலையத்திலே தருவே (பக்கத்திலே)

பெண் : அப்புறம்?

ஆண் : ஒரு வீர மகனைப் பெத்திடுவே...!

பெண் : ஆளைப் பாருங்க!...

ஆண் : நீ தாலாட்டத் தெரியாமே
தவிச்சிடுவே-நான்
தந்தானத்தாம் தாளம் போட்டுப் பாடுவேன்

பெண் : எங்கே பாடுங்க...?

ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
அப்பா அம்மா சொன்னதைக் கேளு
அறிவு வந்ததும் சிந்திச்சுப்பாரு
அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி
அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி-நாட்டில்
அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி

பெண் : அப்புறம்...?

ஆண் : நீ
பக்கத்திலே இருப்பே-நான்
பாத்துப் பாத்து ரசிப்பேன்

[தேடி வந்த செல்வம்.1958]

6.19 கலையான நிலை
பெண் : கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலைகாண வா...நீ வா வா
கலையான நிலைகாண வா
ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு-அங்கே
கலப்பை தனை மறந்து உழவன்
கலங்குகின்றானே!- நின்று
மயங்குகின்றானே!
பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் - ஒரு
நொடிக்குள் அவனை இழுக்குதே....(கழனி)
ஆடிவரும் நதியோரம்,
ஆணும் பெண்ணும் வெகுநேரம்
அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்
வேகத்தினாலே - அவர்கள் நேசத்தினாலே
ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும்
அணைகளையும் தாண்டிவிடும்
அரிய பெரிய ரகசியத்தை
அறிந்திடலாமே - நாம்
அறிந்திடலாமே!
பெண் : எந்தன் மயிலே...மழை முகிலே
ஆண் : இளங்குயிலே...அதன் குரலே
இருவரும் : எழில் குலுங்கும்
உலகை உணர்ந்திடுவோம்

[திருமணம்,1958]

6.20 மாறும் மனம்
பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் - அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்)
திருமணமாகிடும் முன்னே ஒன்றும்
தெரியாதவர்போல் இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்,
வெடுக்கின்னு முறைப்பாங்க

ஆண் : ஹா! ஹா!

பெண் : ஆண்கள் மனமே அப்படித்தான் - அது
அடிக்கடி மாறும் இப்படித்தான்

ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான் - இந்த (பெண்)
மணமாகு முன்னே வாயும் பேசாமல்
மதிப்பு மரியாதை தருவாங்க - திரு
மணமானபின்னே வரிந்துகட்டிக் கொண்டு
குஸ்திக்கும் வருவாங்க

பெண் : ஓஹோ ஹோ ஹோ!

ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்

பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வாருங்க

ஆண் : ஓஹோ!

பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எட்டியும் போவாங்க (ஆண்)

ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமை யடைவாங்க

பெண் : ஆமா!

ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க (பெண்)
பெண் : மானே தேனே என்பதெல்லாம் - ஒரு
மாதம் சென்றதும் மாறிடுதே

ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் - ஒரு
வாரம் சென்றதும் ஓடிடுதே

பெண் : ஹா...ஹா...ஹா...
ஆமைகளென்ற பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க! (ஆண்)

ஆண் : இந்தப்
பெண்கள் குணமே அப்படித்தான் - அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்

[நான் வளர்த்த தங்கை,1958]

6.21 பூமாலை போட்டவன்
ஆண் : எழுந்தென்னுடன் வாராய்...சொக்கம்மா
எழுந்தென்னுடன் வாராய்!

பெண் : எங்கு என்னை அழைக்கிறாய்
என் மம்முத ராஜா?

ஆண் : என்னோட நீ வர
ஏனடி தாமதம்?

பெண் : ஏனென்று கேக்காதே
கால்ரெண்டும் நோகுது

ஆண் : நோகாமல் சுகமெல்லாம்
தானாகப் பிறக்குமா!

பெண் : போகாத ஊரெல்லாம்
போனாத்தான் பொறக்குமா?

ஆண் : (வசனம்) பெண்ணே,என் பொறுமையை
சோதிக்காதே; ஆத்திரம் வந்தால் உன்னை
என்ன செய்வேன் தெரியுமா?

பெண் : (வசனம்) என்ன செஞ்சிடுவே...ஹ¥க்கும்

ஆண் : கத்தியை உருவிக் குத்திடுவேன் - உன்னை
கண்டதுண்டாக வெட்டிடுவேன்

பெண் : நிறுத்தய்யா... நிறுத்தய்யா
நேரங்கெட்ட நேரத்திலே
ஊரை விட்டு ஓடுவது எதுக்கய்யா?

ஆண் : வாண்ணா வந்திடடி.....
மரியாதை யில்லாதவளே
ஏண்ணு கேக்காதே
எதிர்த்துப் பேசாதே
எட்டி விரட்டிடுவேன் - உன்னை
விட்டுப் பிரிந்திடுவேன்

பெண் : நீயே சகாயமென நினையாமல்...நாதா
வாயால் மோசமே போனேன்-
மதியாமல் பேதை
மாயம் எதுவும் இல்லை
வருத்தம் கொள்ளாதே என்னை
மன்னித்தருள வேண்டும்
வந்தனம் செய்தேன் ஸ்வாமி!

ஆண் : பத்தினி ரத்தினமே
பறந்துவந்த சீதனமே - என்
உத்தரவு போல உத்தமி - நீயரு
உதவிதான் செய்யவேண்டும்

பெண் : (வசனம்) என்ன உதவி செய்யணும்
அப்படியே ஆகட்டும் ஸ்வாமி
பூமாலை போட்டுப்போன
மாமா வருவதற்குள்
காமலை வந்ததய்யா வைத்தியரே
மாமியார் வைத்துப்போன
சாமானை வித்துத்தரேன்
மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே

ஆண் : கண்ணையிழந்தவளே
கட்டழகுப் பெண்மயிலே - இந்தக்
கைகண்ட மருந்தை - என்
கை கொண்டு பூசினால்
கண்கண்ட குணம் பெறலாம்

பெண் : களிம்போ களிம்பு களிம்போ களிம்பு
காயத்திலே பெருங்காய மிருந்தாலும்
மாயமாய் மறைக்கும் களிம்பு
வெள்ளைக் களிம்பு,கருங்களிம்பு,
வீரக்களிம்பு
சொல்ல முடியாத நோய்களுக்கும் - ஒரு
சூரணமிருக்கு வாங்கிடுங்கோ - அதை
பல்லில் படாமலே
உள்ளுக்குப் போடணும்
பாஷாணம் சேர்ந்தது பார்த்துக்குங்கோ
(களிம்போ)

[தங்கப்பதுமை,1958]

6.22 தாலி கட்டும் வீரன்
தோழிகள் : மானைத்தேடி மச்சான்
வரப்போறான் - ஓ
வரப்போறான்
தாளத்தோட தாலி
கட்டப்போறான் - ஏ
காட்டப்போறான் (மானை)

தலைவி : தாலிகட்டும் வீரனவன்
யாரு? - ஏ
எந்த ஊரு?
மாலை கட்டவேணும்
கொஞ்சம் கூறு - ஏ
என்னபே