|
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும் (கண்)
உன்னைப்போல் குழந்தையில்லை
உன்னைப்போல் துணையுமில்லை
உன்னாலே மலர்ந்த உள்ளம்
எண்ணாத நாளுமில்லை (கண்)
அந்த நாள் மறைந்ததம்மா இன்று நான் மனிதனம்மா
செண்டாடும் வடிவழகைக் கண்டாடும் கலைஞனம்மா
அன்னையே உன்வடிவம் தந்தையே உன் இதயம்
அன்பே உன் துணையிருக்க என் பாடல் முடிவதெங்கே? (கண்)
|