|
கடவுள் இருக்கின்றான் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா?
இசையை ரசிக்கின்றாய் இசையின்
உருவம் வருகின்றதா?
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான் அவன்தன்
போதனை மறைகின்றதா?
சத்தியம் தோற்றதுண்டா உலகில்
தருமம் அழிந்ததுண்டா இதை
சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா
தேடியும் கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!
|