|
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய், அம்மா பேச வைத்தாய்
எண்ணும் எழுத்தெனும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புதுமை ஆற்றல் தந்தாய்
ஐயந்தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓம்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி
|