|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > Selection from Kappal Otiya Thamizhan V.O.Chidamarampillai வி.ஒ.சி கண்ட பாரதி
|
வி.ஒ.சி கண்ட பாரதி
[to read
the Tamil text you may need to download
& install a Tamil Unicode font from
here சுப்பிரமணிய பாரதி என்னும் பெரியார் திருநெல்வேலி ஜில்லா எட்டயபுரம் சமஸ்தானம் எட்டயபுரத்தில் பிறந்தவர். அவர் தகப்பனார் பெயர் சின்னச்சாமி அய்யர். அவர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் ஓர் உத்தியோகம் புரிந்து கொண்டிருந்தார். அவர் காலத்தில் என் தகப்பனாரும் அந்த சமஸ்தானத்தின் வக்கீலாயிருந்தனர். என் தகப்பனாருடன் அவர் என் சொந்த ஊராகிய ஒட்டபிடாரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அக்காலத்தில் என் ஊரில் தாலுகாக் கச்சேரியும், தாலுகா மேஜிஸ்டிரேட்டுக் கோர்ட்டும் இருந்தன. அவ்விரண்டில் ஒன்றில் ஏதேனும் ஒரு ஜோýயாக அவர் என் ஊருக்கு வருவர். என்னூருக்கு வந்த காலங்களில் அவர் என் வீட்டிலாவது,
என் வீட்டிற்கு மேற்கேயுள்ள பழைய பாஞ்சாலங்குரிச்சித் தானாபதிப் பிள்ளை
வீட்டுக் கூடத்தின் மாடியிலாவது தங்குவர். அப்போது எனக்கு வயது 15
அல்லது 16 இருக்கும். அவர் என்னோடும் மற்றையாரோடும் பேசிய
மாதிரியிýருந்து அவர் ஒரு பெரிய மேதாவியென்று நான் நினைத்தேன். அவரிடம்
நான் சென்ற சமயங்கள் சிலவற்றில் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன்
அதிபுத்திசாýயென்றும், அவன் சிறு பிள்ளையாயிருந்தும் தமிழில் சுயமாகப்
பாடுவானென்றும் என் தகப்பனார் என்னிடம் சொல்வதுண்டு. அச்சிறு பிள்ளைதான்
சுப்பிரமணிய பாரதி என்று இப்போது உலகமெல்லாம் புகழப்பெற்று விளங்கும்
பெரியார். அங்கிருந்தோர் அவர் மாடியில் இருக்கிறார் என்றனர்.
நான் மாடிக்குச் சென்றேன். இளவயதுள்ள ஓர் அய்யங்காரைக் கண்டேன்.
அவர்தான் இந்தியாவின் அதிபர் என்று நினைத்து அவரை உசாவினேன். அவர் ஆம்
என்றார். அவரிடம் என் ஊரும் பேரும் சொன்னேன். உடனே அவர் மாடியின்
உள்ளரங்கை நோக்கி, ""பாரதி! உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கின்றனர்""
என்று கூறினர். உடனே அங்கிருந்து பாரதியும் வேறொருவரும் வந்தனர்.
அய்யங்கார் ""இவர்தான் இந்தியாவின் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி""
என்றார். அவர் என் ஊரையும் பெயரையும் உசாவினர். ""ஓட்டப்பிடாரம் வக்கீல்
உலகநாத பிள்ளை மகன் சிதம்பரம் பிள்ளை"" என்றேன். அங்கிருந்து வங்காளத்தின் காரியங்களையும் பெபின்
சந்திரபாலர் முதலியோரின் பிரசங்கங்களையும் செயல்களையும் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தோம். என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சிபோல் ஒளிர்ந்து
கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது.
அச்சமயம் கடற்கரை விளக்குகளும் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. நால்வரும் வீடு
திரும்பினோம். பின்னர், நாள்தோறும் நான் இந்தியா அதிபர் வீட்டிற்கும்,
இந்தியா ஆபீஸ்க்கும், கடற்கரைக்கும் செல்லலானேன் அதிபரும் ஆசிரியரும்
நானும் பேசலானோம். ஆசிரியரும் நானும் முறையே கம்பரும் சோழனுமாகி,
மாமனாரும் மருமகனும் ஆயினோம். பிரான்ஸ் தேசத்துச் சரித்திரமும், இத்தாலி தேசத்துச்
சரித்திரமும், அவைபோன்ற பிறவும் அவர் சொல்லவும் நான் கேட்கவுமானோம்.
இத்தாý தேசாபிமானி மிஸ்டர் மாஸினியின் தேசவூழிய ""யௌவன இத்தாý""
சங்கத்தின் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்வதுவந்த பிரமாணச் செய்யுளை
ஆங்கில பாஷையில் என் மாமனார் எனக்குப் படித்துக் காட்டினார். அதனைக்
கேட்டதும் நான் சொக்கிப் போனேன். |