தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் >  pANTiyan paricu - பாண்டியன் பரிசு


Literary Works of Bharathidaasan
( Kanakasubbaratnam, 1891-1964)
புரட்சி கவிஞர் பாரதிதாசன்
(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்

VII : pANTiyan paricu - பாண்டியன் பரிசு
Etext Preparation: Ms. Veena Jayaraman, Dallas, Texas, USA; Mr. P.I. Arasu, Toronto, ON, Canada; Ms. Suhitha Arasu, Toronto, ON, Canada
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source Acknowledgement: Pandiyan Parisu by Bharathidasan, Published by
M/s Senthamil Nilaiyam, Ramachandrapuram, Trichy District, Tamilnadu (8th edition, 1967)

This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.To view the Tamil text correctly you need to set up the following:
    i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
    ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
    © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
    electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

 
பாவேந்தர் முன்னுரை
இவர்கள் யார்?

பாண்டியன் பரிசு
இயல் 1
கதிர்நாட்டை நோக்கி வேழநாட்டுப் படை.

சீர்மிகுத்த கதிர்நாட்டின் மேலே, அந்தத்
திறல்மிகுத்த வேழநாட் டுப்ப டைகள்,
போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே!
பொன்னொளியைப் பாய்ச்சுகின்ற தேர்ப்ப டைகள்,
கார்மிகுத்தாற் போலேயா னைப்ப டைகள்,
கழுத்துமயிர் ஆடுகுதி ரைப்ப டைகள்,
நேர்மிகுத்த வில், வேல், வாள் துாக்கி வந்த
நெடியகா லாட்படைகள் இவைகள் யாவும்,

மண்ணதிர விரைந்தனவாம்! முரசு, "வெற்றி
வாய்க" என முழங்கினவாம்! சங்கும் மற்றும்
பண்ணதிரும் கருவிபலப் பலவும் கூடிப்
பாரதிரச் செய்தனவாம்! கொடியின் கூட்டம்
விண்ணதிரப் பறந்தனவாம்! ஆயு தங்கள்
விழியதிர மின்னினவாம்! படைத்தலைவர்,
கண்ணதிரும் கனல்சிந்திப் படைந டத்தக்
கழறுமொழி ஒவ்வொன்றும் அதிர்வேட் டேயாம்!

கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது
கைகாட்டி "வாபகையே" எனஅ ழைக்கும்
புதுமைபோல் கொடிபறக்கக் கண்டார் அன்னோர்!
"போவீர்கள் விரைவாகப் பகைவர் கோட்டை
அதோபாரீர்!" எனஉரைத்தார் படைத்த லைவர்;
ஆம் என்று குதித்தார்கள் மறவ ரெல்லாம்;
அதிரும்நடை யாற்புழுதி விண்ணில் ஏற
ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடிச் சென்றார்!


இயல் 2
கதிர்நாட்டின் வேவு பார்ப்போர் பகைப்படை வருவதைப் பார்த்தார்கள்!

அழகிய அக்கதிர்நாட்டுக் கோர்கா தத்தில்
அவ்வேழப் படைநெருங்கும் காட்சி தன்னை,
விழிஇமைத்தல் இல்லாமல் வேவு பார்ப்போர்
விண்ணுயர்ந்த மதிலின்மேல் நின்று பார்த்தார்.
மொழிஅதிர்த்தார், பறை அதிர்த்தார்; "வேழ நாட்டான்
முழுப்படையும் எழுப்பிவந்தான்" என்று தங்கள்
பழியற்ற தாய்நாட்டார் அறியச் செய்தார்.
கதிர்நாட்டின் படைமறவர் கொதித்தெ ழுந்தார்.

அமைதிகுடி கொண்டிருந்த கதிர்நா டந்தோ
அலறிற்று! முதியோர்கள் கலங்கி னார்கள்!
தமக்காக அன்றித் தம் கணவர், மக்கள்
தமைஎண்ணி மகளிரெலாம் நடுங்கி னார்கள்!
"நமக்குரிய நாட்டினிலே பகைவர் கால்கள்
நாட்டுவதை நாம்ஒப்ப லாமோ?" என்று
சிமிழ்க்காத விழியினராய் வாளைத் துாக்கிச்
சினத்தோடு வௌிப்போந்தார் இளைஞர் எல்லாம்.


இயல் 3
சதிராடு கூடத்தில் அரசன், அரசி.

கதிர்நாட்டின் கதிரைவேல் மன்னன் தானும்,
காதல்மனை யாம்கண்ணுக் கினியாள் தானும்
சதிராடு கூடத்தில் தவிச மர்ந்து
தமிழ்ப்பூவால் இசைப்பாக்கள் புனைந்தி ருந்தார்.
"அதிர்படைகள் கூட்டிவந்தான் வேழ நாட்டான்
அதோஒருகா தத்தில்" என்றான் படைத்த லைவன்!
"எதிர்த்தானா வேழமன்னன்? நரிகண் ணன்தான்
எமைநோக்கிப் படைநடத்த ஒப்பி னானா?

என்கண்ணுக் கினியாளே, அன்பே! உன்றன்
எழில்அண்ணன் நரிக்கண்ணன், வேழ நாட்டின்
வன்மையுறு படைத்தலைவ னாய்இ ருந்தும்
வேழர்படை வருவதை, ஏன் என்னிடத்தில்
முன்னமே சொல்லவில்லை? வேழ நாட்டான்
முழுதும்நமை ஆதரிப்ப தாக அன்றோ
சொன்னான்?இந் நாட்டினிலே நம்ப டைகள்
தோதில்லா திருக்கையிலே நமைஎ திர்த்தார்!

இந்நாட்டை உன்அண்ணன் பெறநி னைத்தான்!
என்படையின் தளர்நிலையை, அவனை யல்லால்
பின்எவரும் அறியாரே! உடன்பி றந்தான்
பெரும்பகைவன் எனக்கு! நெடு வைய மீதில்
என்ஆவி போன்றவள்நீ! என்ன செய்வேன்?
என்வெற்றி உன்துன்பம் அன்றோ பெண்ணே!
மன்னவன்நான் எனைநம்பி வாழு கின்ற
மக்கட்கோ என்கடமை ஆற்ற வேண்டும்."

என்றுபல வாறுரைத்து நின்றான்! அங்கே
எதிரினிலே அரசனது கட்ட ளைக்கு
நின்றிருந்தான் படைத்தலைவன்; அமைச்சன் நின்றான்!
நெடுவிழியிற் கனல்சிந்த அரசி சொல்வாள்:
"முன்ஒருநாள் என்அண்ணன் இங்கு வந்தான்
ஏதேதோ மொழிந்திட்டான், என்னிடத்தில்.
அன்னவற்றின் பொருள்இந்நாள் அறியலானேன்;
அழகியஎன் திருநாட்டை அவன்ப றிக்கத்

திட்டமிட்டான்! மணவாளா உன்றன் ஆணை!
திருநாட்டின் மீதாணை! இந்நாட் டின்கண்
மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழு கின்ற
மக்கள்மேல் எனக்குள்ள அன்பின் ஆணை!
விட்டேனா அன்னவனை! அண்ணன் அல்லன்!
விரைவினிலே போர்க்களத்தை அடைவேன்; எந்த
வட்டத்தில் அவனுண்டோ அங்கன் னோனை
மாய்த்திடுவேன் அல்லதுநான் அவனால் மாய்வேன்!

என்அண்ணன் இந்நாட்டில் நுழைவ தாயின்
என்உயிரில் நுழைந்ததன்பின் நுழைக! நானோ
அன்னவனின் உயிர்குடித்த பின்ன ரேஇவ்
அரண்மனையில் அகத்துாய்மை நிரம்பப் பெற்றே
என்கால்வைப் பேன்உறுதி" என்றாள். ஒடி
எதிரில்உறு படைவீடு சென்று மீண்டே
என்அண்ணன் எங்குள்ளான் அங்கே செல்க
என்றாள்; தேர் ஏறினாள் எரியும் கண்ணாள்!

துணையாக ஒருபடையும் அவளின் தேரைத்
தொடர்ந்ததுதன் நிழல்போலே! கதிரை வேலன்
தணல்சிந்தும் விழியாலே நாற்பு றத்தும்
தமிழ்மறவர் தமைஏவித் தெற்குக் கோட்டை
மணிவாயில் தனையடைந்தான் சிங்கத் தைப்போல்!
மன்னவன்தான் பெற்றெடுத்த அன்னம் என்பாள்,
அணிமலர்ச்சோ லைவிட்டே அரண்ம னைக்குள்
அடிவைத்தாள்; நொடிப்போதில் நிலமை கண்டாள்.


இயல் 4
கதிரைவேல் மன்னன் மகள் அன்னம் திகைத்தாள்.

கோட்டைவா யிற்புறத்தே வாள்அ திர்ப்பும்
குதிரைகளின் குளம்படியின் ஒலியும், யானைக்
கூட்டத்தின் மோதுதலும், தேர்அ திர்ப்பும்,
கொலையுண்ணும் மறவர்விழும் ஒலியும், நன்கு
கேட்டிருந்தாள் இளமங்கை வள்ளைக் காதில்.
கிளியுதடு கனல்சிந்தும், துடிக்கும்; அஞ்சும்!
வாட்போரை விரும்பும்அவள் தமிழ நெஞ்சம்
வகையறியா அவள்இளமை மறுத்து நிற்கும்.

என்ஆத்தா என்செய்வேன் என்றாள் மங்கை!
எதிர்நின்ற அக்கிழவி இயம்பு கின்றாள்:
"உன்மாமன் படைகூட்டி வந்தான் பெண்ணே
உன்பெற்றோர் வாள்துாக்கி ஓடி யுள்ளார்.
இந்நிலையில் இறக்கைமுளைக் காத அன்னம்
ஏன்பறக்க நினைக்கின்றாய்? முடிவு காண்போம்!
கன்னலின்சா றேஇங்கு வந்த மர்வாய்!
கைப்புறத்தில் வா" என்று சென்ற ணைத்தாள்.


இயல் 5
கடும்போர்.

வடக்கிருந்த வாயிலிலே கதிரை வேலன்
வந்தெதிர்த்த பெரும்படைமேற் படையை ஏவி
அடுத்துநின்ற வேழமன்னன் வாள்வீச் சுக்கள்
அத்தனைக்கும் விடைகூறித் தன்வீச் சுக்கும்
கொடுத்தவிடை பெற்றபடி இருந்தான்! சாவு
கொற்றவர்கள் இருவர்பால் மாறி மாறி
நொடிக்குநொடி நெருங்கிற்று! வெற்றி மங்கை
நுாறுமுறை ஏமாந்தாள் ஆளைத் தேடி!

கனல்நிகர்த்த வேழவனின் பெரும்ப டைமேல்
கதிரைவேல் மன்னவனின் மறவர் சில்லோர்
சினங்கொண்டு பாய்ந்தார்கள். வேழ நாட்டுத்
திறல்மறவர் நுாற்றுவர்க்குக் கதிர்நாட் டார்கள்
தனியொருவன் விழுக்காடு தோள்கொ டுத்துத்
தனித்துநின்றார் கோட்டைக்குள் பகைபு காமல்!
பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும்
பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார்.

என்செய்வார் கதிர்நாட்டார்? வேழ வர்க்கோ
இரும்படைகள் அணைகடந்த வெள்ளத் தைப்போல்
பின்னுதவி செய்தனமேல் வந்து வந்து!
கதிர்நாட்டார் பெருந்தோளும் கூர்மை வாளும்
முன்னிலும்பன் மடங்குவிரைந் தனஎன் றாலும்
முனை நடுங்கப் போராடும் கதிரை வேலன்,
இந்நிலைமை தனையுணர்ந்து வேழன் தன்னைத்
தனிப்படுத்த எண்ணினான்; இறங்கி னான்கீழ்.

ஏறிவந்தான் வேழத்தான். கோட்டைக் குள்ளே
இருவேந்தர் தனியிடத்தில் போர்புரிந்தார்!
சீறினஅங் கிருவாள்கள்; மோத லாலே
செம்பொறிகள் எழுந்தனமேல்! வெற்றி தோல்வி
கூறிடவும் வழியின்றி வலம்இ டம்போய்க்
குறிப்பொன்றும் தவறாமல் சுழன்று, வாளை
மாறிப்பின் வாங்குங்கால் பலகை துாக்கி
வாட்போருக் கிலக்கியத்தை நல்கும் போதில்,


இயல் 6
கண்ணுக்கினியாள் அண்ணனைத் தேடினாள்.

"அண்ணன்எங்கே! அன்பில்லாக் கொடிய னெங்கே
ஆட்சியினை யேவிரும்பி உடன்பிறந்த
பெண்ணாளை வஞ்சிக்க எண்ணி வந்து
பிழைசுமந்த நரிக்கண்ணன் வாள் சுமந்து
கண்ணெதிரில் வாரானோ?" என்று கூறிக்
கடிவாளம் ஒருகையில், பகைவர் பெற்ற
புண்ணினிலே குதித்தெழுந்த வாளோர் கையில்,
புதுமைசெய ஒருகுதிரை மீதி லேறி

பகைப்படையின் உட்புகுந்து தேடிக் கண்ணிற்
பட்டவரின் உடல்சாய்த்தே புறங்கள் எட்டும்,
நகைப்பாலே நெருப்பாக்கிப் புருவம் ஏற்றி
நாற்புறத்து வாயிலையும் சுற்றி வந்தாள்!
மிகப்பெரிய குதிரைமேல் கரிய ஆடை
மேற்போர்த்து முகமூடி அணிந்தே ஓர்ஆள்
புகப்பார்த்தான் வடக்கிருந்த வாயில் நோக்கி!
"போ" என்றாள். பறந்தது தன் குதிரை அங்கே!


இயல் 7
வேழமன்னனோடு போர் புரிந்திருந்த கதிரைவேல்
மன்னனைப் பின்னிருந்து கொன்றான் நரிக்கண்ணன்.

போர்செய்து கொண்டிருந்த கதிரை வேலன்
பொத்தெனவீழ்ந் தான்.அவனின் முதுகின் மீதில்
ஓர்ஈட்டி பாய்ந்தது போய்! கருந்தி ரைக்குள்
உடல்மறைத்துக்கொண்டிருந்த நரிக்கண் ணன்,தன்
பேர்மறைக்க எண்ணியே தான் அணிந்த
பெருந்திரையை, முகமூடித் துணியை அங்கு
நேர்நின்ற தன்ஆளை அணியச் செய்து
நெடிதுபோய் அரண்மனையில் நின்றி ருந்தான்.

நின்றிருந்த நரிக்கண்ணன், உடன்பிறந்த
நேரிழையாள் வரும்வழியில் விழியை வைத்தான்;
"அன்றிருந்த என்கருத்தில் பாதி தீர்த்தேன்;
அவள் ஒழிந்தால், முக்காலும் தீரும்; பின்னும்
அன்னத்தைக் கொன்றொழித்தால் முழுதும் தீரும்;
அதன்பிறகன் றோஇந்த நாட்டின் ஆட்சி,
என்றென்றும் என்கையில் நிலைத்து நிற்கும்?"
எனநினைத்தான் தினையேனும் மானம் இல்லான்.


இயல் 8
கண்ணுக்கினியாள் மன்னன் இறந்தது கண்டாள்.

கொலைவாளும் கையுமாய் அரசி வந்தாள்;
கொண்டவனைப் பிணமாகக் கண்டாள். ஆங்கே
நிலைகலங்கி நின்றிட்டாள். "வீழ்ந்த தோநின்
நெடுமேனி! வீழ்ந்ததோ கதிர்நாடிந்நாள்!
இலைநீதான் எனஅறிந்தால்அஞ்சி வாடும்
இந்நாட்டு மக்களை யார் தேற்று வார்கள்?
கலைந்ததுவோ என்காதல் ஓவியந்தான்!"
எனக்கூறிக் கட்டழகன் உடலை அள்ளி

அணைத்திட்டாள்! மலர்க்கையால் கன்னம் உச்சி
அணிமார்பு தடவினாள்! ஈட்டி யாலே
தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்;
தலைகுனிந்தாள்; அப்பிணத்தை நிலத்திற் போட்டாள்!
இணைபிரியா மானமதும் எம்மை விட்டே
ஏகிற்றோ ஐயகோ! முதுகு காட்டத்
துணிந்ததுவோ தமிழாநின் தமிழ நெஞ்சம்!
துாயநின் மூதாதை, என்மூ தாதை

அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை
அருமார்பில் முன்தோளில் ஏற்ற தன்றித்
தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற
சேதியினை இவ்வையம் கேட்ட துண்டோ?
எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற
இளவேழ நாட்டரசன், இரக்க மிஞ்ச
"மனைவிளக்கே! நின்துணைவன் கதிரை வேலன்
வாட்போரை என்னோடு நிகழ்த்துங் காலை

முகமறைத்த ஒருதீயன் எவனோ பின்னே
முடுகிவந்து நடுமுதுகில் எறிந்தான் ஈட்டி!
திகைத்தேன் நான்! சாய்ந்தான்அம் மறவோர் மன்னன்!
திகழிமய மலைபோலும் அவன்கொண் டுள்ள
புகழ்க்கென்ன? உன்குடிக்கு வாய்த்த மானம்
போனதெனப் புலம்பவதும் என்ன? பெண்ணே
அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன்
அரண்மனைக்கே" என்றுரைத்தான் சென்றாள் பெண்ணாள்.


இயல் 9
அரண்மனைக்குள் படை புகுந்தது. அன்னத்தை ஆத்தாக்கிழவி காத்தாள்.

வேழவனின் படை வீரர் அரண்ம னைக்குள்
விரிநீர்போய் மடைதோறும் பாய்வ தைப்போல்
சூழலுற்றார் பொன்னிருப்புச் சாலைக் குள்ளும்,
தொகுநெற்க ளஞ்சியத்தும் எவ்வி டத்தும்!
ஏழடுக்கும் படைவீரர் கைப்பற் றுங்கால்
இருந்தஆத் தாக்கிழவி உளம்ப தைத்துக்
கீழைவழி நிலவறையால் அன்னந் தன்னைக்
கிளியேந்தல் போலேந்தி வௌியிற் சென்றாள்.

நிலவறையால் வௌிப்புறத்தில் சென்ற ஆத்தா
நீங்கியபின் கதவுதனைச் சாத்த வில்லை.
சிலர்கண்டார் காணாத கதவு தன்னை!
சிலர்புகுந்தார்; சிலர்உள்ளே செல்ல லானார்.
சிலர்நெடிது சென்றுமே அரண்ம னைக்குள்
திறல்கொண்ட வேழநாட் டுப்ப டைகள்
அலைவதைக்கண் டையோஎன் றுரைத்து மீண்டார்.
ஆயினும்சிற் சிலர்இருந்தார்! நரிக்கண் ணன்தான்

எப்புறத்தும் திரிகின்றான்; ஓர்அ றைக்குள்
எதிர்பார்த்த ஒருபேழை தன்னைக் கண்டான்.
அப்படியே துாக்கினான்; அடுத்தி ருந்த
ஆள்ஒருவ னிடந்தந்தான்; "இதனை என்றன்
குப்பனெனும் தேரோட்டி இடம்சேர்" என்று
கொடுத்தனுப்பித் தான்நினைத்த சூழ்ச்சி தன்னை
அப்போதே தொடங்கினான், பொய்ப்பால் வாழ்வான்.
அரசிக்கு நல்லவனாய்த் தன்னைக் காட்ட

அரசர்தமைக் குடிகள்எலாம் காணு கின்ற
அழகியதோர் கூடத்தில் கீழ்க்கி டந்து
சரசரெனப் புரண்டபடி "எனக்கேன் வாழ்வு?
சாக்காடே வாராயோ? உடன்பி றந்தாள்
அரசியென வாழ்கின்றாள் எனஇ ருந்தேன்.
அத்தீயன் வேழத்தான் கதிர்நா டாளும்
பெருமைகொள் என் மைத்துனனைக் கொலைபு ரிந்து
பிடுங்கினான் நாட்டையும்"என் றழுதி ருந்தான்.


இயல் 10
கண்ணுக்கினியாள் வந்தாள். நரிக்கண்ணன் வஞ்சம் பேசினான்.

வாள்தொங்க, வாள்பெற்ற வலக்கை தொங்க,
வல்லியிடை துவள,மேல் நல்ல தோள்கள்
ஆட,எடுத் துான்றும்அடி இடறக் கண்ணில்
அழகிழந்து குழல்சரிந்து வீழ மங்கை
"நாடிழந்தேன் நலமிழந்தேன் கண்ணில் வைத்து
நாளும்எனைக் காத்துவந்த துணைஇ ழந்து
வாடுகின்றேன்" எனக்கதறி நெஞ்சம் சோர
வந்தாள்அண்ணன்புரளும் கூடந் தன்னில்.

" மைத்துனனை நானிழந்தேன் தங்கை யே! என்
மன்னன்எனைத் தள்ளிவிட்டான் அதுபோ கட்டும்;
செத்தானை இனிக்காண முடிவதுண்டோ?
திருநாட்டை நீஇழந்து, துணை இழந்து,
கைத்துாண்டிற் சிறுமீனாய்க் கலங்கு கின்ற
காட்சியினை நான்காண நேர்ந்த தேயோ!
வைத்திருந்தான் படைத்தலைவ னாக என்னை;
மைத்துனனை இகழ்ந்துரைத்தால் பொறுப்பே னோநான்?

கதிர்நாட்டைப் பிடிப்பதென வேழன் சொன்னான்
கடிந்துரைத்தேன்; மறுநொடியில் அமைச்ச னுக்குப்
புதுத்தலைமை தந்தேபின் படையெ ழுப்பிப்
பொன்னான கதிர்நாட்டின் மேல்வி டுத்தான்.
எதிர்பாராப் படைஎடுப்பை அறியீர் அன்றோ?
இதைக்கூற இங்குவந்தேன்; வருவ தற்குள்
சிதைத்தானே கதிர்நாட்டின் உரிமை தன்னைத்
தீர்த்தானே மைத்துனனை, அன்பு வேந்தை!

உயிர்போன்றாய்! உடன்பிறப்பே! என்றன் ஆவி
உடலைவிட்டுப் போவதுமெய்! வைய கத்தில்
துயர்தாங்க அட்டியில்லை; எனைஇ கழ்ந்து
சொல்லுமோர் சொல்லையும்நான் பொறுப்ப துண்டோ!
முயல்போன்றான் நரிக்கண்ணன் என்றா லுந்தன்,
முத்தான தங்கையவள் வாழ்க்கைப் பட்ட
வயவேந்தன் கதிர்நாட்டான், நரிக்கண் ணற்கு
மைத்துனன்என் றுரைத்தபெரு மைபோ யிற்றே!"


இயல் 11
நரிக்கண்ணன் வஞ்சம் பேசுகையில், இவனிடம் கரிய
உடை பெற்ற ஆள் வந்தான். அவள் அவனை எதிர்க்கிறாள். அவன், மன்னனைக் கொன்றவன் இவனே என்று
நரிக்கண்ணனைக் காட்டி விடுகிறான். அதற்குள் நரிக்கண்ணன் அரசியைக் கொன்றான்.

எனஉரைத்தான்; துடித்தழுதான். மேலும் பேச்சை
எடுக்கையிலே, கரியஉடை போர்த்த ஓர்ஆள்,
"இனிஎன்ன செய்வ" தென நரியைக் கேட்டே
எதிர்வந்தான். அவள்கண்டாள். வாளைத் துாக்கிப்
"புனையுந்தார் மன்னனின்பின் புறத்தில் ஈட்டி
புகுத்தியவன் நீதானா" என்றாள். "இல்லை
எனக்கிந்தக் கரியஉடை இவரே தந்தார்
ஈயுமுன்னே மன்னவர்மேல் ஈட்டிஎய்தார்."

என்றுரைத்தான்! அதேநொடியில் நரிக்கண்ணன்தான்
இடையினிலே மறைத்திருந்த வாளெ டுத்து
நின்றிருந்த உடன்பிறப்பை, அரசி தன்னை
நிலத்தினிலே விழுமாறு வெட்டிச் சாய்த்தே
"ஒன்றுக்கும் அஞ்சாத என்னை இந்நாள்
உயிர்நடுங்க வைத்தவளை ஒழித்தேன்" என்று
நின்றுபெரு முச்சுவிட்டான்! எங்கே அந்த
நேரிழையாள் அன்னம்என உள்ளே சென்றான்.


இயல் 12
நரிக்கண்ணன் அன்னத்தைத் தேடி உள்ளே செல்ல, அங்கிருந்த ஆள் நடந்ததைத் தன் வேழ நாட்டு மன்னனிடம் சென்று கூறினான். மன்னன் வியப்புறுகின்றான்.

கரியஉடை போர்த்துவந்த காலாள் சென்று
கண்டவற்றை அரசனிடம் நன்று சொன்னான்!
பெருவாளால், தன்கையால் உடன்பி றந்த
பெண்ணாளைக் கொன்றானா? என்று மன்னன்
உருகினான். மக்களிடை மகனாய் வாழ
ஒண்ணாத கொடுவிலங்கை இந்நாள் மட்டும்
தெரியாதேன் வைத்திருந்தேன் அரண்ம னைக்குள்!
தீருவதெந் நாள்இந்தப் பழிதான் என்றான்.

அரசனிது கூறுங்கால் அங்கி ருந்த
அழிவொன்றே தொழிலான மறவர் தாமும்
இரக்கமுற லானார்கள்! நரைத்த தாடி
இளைத்தஉடல், களைத்தவிழிக் கிழவன்," வேந்தே
கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பார்?
காயின்றேல் கனியருமை யாரே காண்பார்?
நரிக்கண்ணர் இலைஎனில்நும் அருமை தன்னை
நானிலந்தான், அறிந்திடுமோ நவில்க." என்றான்.


இயல் 13
அன்னத்தைக் காணாது திரியும் நரிக்கண்ணன் எதிரில் தேரோட்டியான குப்பன் வந்தான்.

அன்னத்தை அரண்மனையில் காண வில்லை!
ஆத்தாவைக் காணவில்லை! நரிக்கண் ணன்தான்
என்னத்தைச் செய்வதென ஏங்கி நின்றான்;
எதிரினிலே தேரோட்டும் குப்பன் வந்தான்.
"பொன்னான பேழையினைப் பெற்றா யோ?என்
புகழுக்கும் ஆட்சிக்கும் ஆணி வேரை
உன்னிடத்தில் தந்துள்ளேன்; அதனைக் காப்பாய்
ஒருத்தரிடம் சொல்லாதே!" என்று ரைத்தான்.

"நானறியேன் பேழையினை!" எனறான் குப்பன்.
நடுங்கினான் நரிக்கண்ணன் "ஐயோ ஐயோ
போனதோ? இங்கிருந்த ஆளி டத்தில்
போயிதனைக் குப்பனிடம் கொடுஎன் றேனே,
ஊனமிலா நம்மறவர் போலே அன்றோ
உடையுடுத்து நின்றிருந்தான்; ஏய்த்தான் போலும்.
ஏனிந்தப் பிழைசெய்தேன்? என்வாழ் வுக்கே
இடையூறு சூழ்ந்தேனே!" எனத்து டித்தே.

அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும்;
ஆவிநிகர் பேழையினை அடைதல் வேண்டும்;
என்னுமொரு கருத்தோடும் அரண்ம னைக்குள்
இட்டிருந்த ஓர்தவிசில் சென்றுட் கார்ந்தான்.
மன்னவனை ஏமாற்றிக் கதிர்நாட் டாட்சி
வாங்குவதில் சிறிதேனும் தொல்லை யில்லை;
அன்னத்தை ஆத்தாவைத் தேட வேண்டும்;
அரும்பேழை வேண்டும்எனப் பெருந்துன் புற்றான்.


இயல் 14
அவன் எதிர் வேழநாட்டு மன்னன் வருகிறான்.
அவனிடம் தொடங்குகிறான் பொய்மூட்டைகளை நரிக்கண்ணன்.

ஆத்தாவை, அன்னத்தைப் பேழை தன்னை
அடையாளப் படிஎங்கும் படையா ளர்கள்
போய்த்தேட வகைசெய்து கொண்டி ருந்த
பொல்லாத நரியானின் எதிரில், மன்னன்
கோத்தான முத்துலவு மார்பி னோடு
குன்றுநடை கொண்டதுபோல் சென்று நின்றான்!
சாய்த்தானே நரிக்கண்ணன் மன்ன வன்பால்
சரசரெனச் சொற்பெருக்கை, எழுந்து நின்றே.

"நாளும்எனைக் காப்பாற்றி ஆளாக் கிப்பின்
நாற்படைக்கும் தலைவனென ஏற்ப டுத்திக்
கோளும்பொய் சூதுமிலான் எனஉணர்ந்து
கொண்டு,பெருந் தொண்டெல்லாம் எனக்கே தந்து
நீளிஎனும் மன்னனைநான் போரில் வென்ற
நினைவாகப் பரிசீந்த கனியே! உன்றன்
தோளைஇகழ்ந் தாளிவள்;என் வாளால் வெட்டித்
தொடுகழற்குக் காணிக்கை இட்டேன் காண்க.

'வஞ்சகத்தால் கதிரைவேல் மன்னன் தன்னை
மறவேந்தே நீகொன்றாய்' என்றுதீய
நெஞ்சத்தால் நினைத்தாளே! 'நின்தோள், மானம்
நீத்ததோள்' என்றாளே! ஐயோ! அன்னாள்
கொஞ்சத்தால் மாண்டாளே, நாள டைவில்
கொடுவாளால் சிறிதுசிறி தாய ருத்துக்
கெஞ்சத்தான் வைத்தேனா! உன்பால் அன்பு
கெட்டேனே கெட்டேனே கெட்டேன் ஐயா.

'உடன்பிறந்தேன்' என்றுரைத்தாள். ஆமாம் என்றேன்
'உன்னரசை இந்நொடியில் சூழ்ச்சி யாலே
மடியும்வகை செய்துவிடு; முடியும் உன்னால்!
மன்னவனைப் பழிவாங்கி விட்டே இந்தக்
கடல்நிகர்த்த கதிர்நாட்டை ஆள்' என் றாள்என்
காதுபெற்ற துன்பத்தை என்ன சொல்வேன்!
கொடியாளின் உடன்பிறந்த பழியுந் தாளேன்
கொடைமன்னா அருள்புரிக தருக வாளை.

நல்லாரின்பெருநிலையும் இந்த வையம்!
நான்தீயா ளொடுபிறந்த தாலே தீயன்!
எல்லாரும் போலேநான் இன்னும் இங்கே
இருக்கின்றேன் சாகாமல்! ஒன்று மட்டும்
சொல்லுவேன் நானண்டி வாழ்ந்தி ருந்த
துாயோய்நின் புகழுக்கும் அறத்தி னுக்கும்
முல்லைமுனை அளவென்னால் பழிநேராமல்
முழுதுண்மை யாய்நடந்தேன் இதன்பொருட்டு

நான்செத்த பின்அடையும் வானாட் டின்கண்
நானுாறு சிற்றுார்கொள் ஒருபேரூரும்
தேனுாறும் சோலைசூழ் அப்பே ருரில்
செப்பரிய அரண்மனையும் அரண்ம னைக்குள்
பால்நேரில் காய்ச்சி, அதில் சீனி இட்டுப்
பத்துவகைச் சிற்றுணவும் ஒத்த பெண்ணும்
ஊனின்பம் நுகர்கின்ற அறைஇ ருந்தால்
ஒருத்தருக்கும் இல்லைஅது எனக்கே" என்றான்.


இயல் 15
நரிக்கண்ணன் பேச்சை நம்பிவிட்ட வேழ மன்னன் நரிக் கண்ணனுக்கு இரங்கினான். இந்தநாடு உன்னுடையமுன்னோருடையது என்பதற்குப் பட்டயம் உண்டா என்றான்.

அரசனுரைத் திடுகின்றான் "அப்ப னேஉன்
அன்பினையும் பண்பிணையும் அறியார் யாவர்?
ஒருகுலையில் ஒருகாயில் தீமை காணில்
உயர்காய்கள் அத்தனையும் வெறுப்ப துண்டோ?
அரசியவள் தீயவள்தான்; உடன்பி றந்த
அறம்பிழையா மறவன்நீ! அழுதல் வேண்டாம்.
நரிக்கண்ணா பழநாளில் இதுஉன் பாட்டன்
நாடென்றாய்! அதற்குள்ள சான்று முண்டோ?

அதுவிருந்தால் காட்டுகநீ! இந்த நாட்டின்
ஆட்சியினை உனக்களித்து விடுவேன்" என்றான்.
"பதிவிருந்தால் ஏனுனைநான் நத்த வேண்டும்?
பாட்டனுக்குப் பாட்டனாம் பறைக்கண் ணற்குக்
குதிரைதிரை கொண்டநெடு முடியான் என்னும்
கொடுநாட்டு மன்னன்அளித் தான்இந் நாட்டைப்
பதினா யிரம்பேரை வென்ற தாலே
பரிசாகத் தந்ததன்றி வேறொன் றில்லை!

அந்நாளில் மன்னவனால் கொடுக்கப் பெற்ற
அருஞ்செப்புப் பட்டயத்தைக் கதிரை வேலன்
முன்னோனாம் முத்தப்பன் மறைத்த தோடு
மூன்றாநாள் துாங்கையிலே கொலையும் செய்தான்!
தன்னிடத்தில் படையிருந்த தாலே அன்றோ
சழக்கனவன் குடிகளிடம் தப்பி வாழ்ந்தான்?
என்னையுமிக் கதிர்நாட்டான் விட்ட தில்லை;
இங்கிரா தேஎன்றான் அங்கு வந்தேன்.

இந்நாட்டை நானாள வேண்டு மென்ற
எண்ணமே எனக்கில்லை; என்றன் தந்தை
அந்நாளில் சாகுங்கால் எனைஅ ழைத்தே
அங்கையினைத் தன்மார்பில் அழுத்தி, 'அப்பா
உன்னைநான் ஓருறுதி கேட்கின் றேன்நீ
ஒப்பிடுக, உன்னாளில் வேழ நாட்டின்
மன்னவரின் அருள்பெற்றுக் கதிர்நாட் டுக்கு
மன்னவனாய் இரு! நமது மானங் காப்பாய்.'

எனக்கூறி உயிர்நீத்தான்; அதனா லன்றோ
எழில்வேழ நாட்டினில்நான் அடைந்தி ருக்கும்
தனிப்பெருமை, தனிமகிழ்ச்சி இவற்றை யெல்லாம்
தவிர்ப்பதற்கும் துணிகின்றேன்; ஐய னேநீ
எனைத்தமிழில் 'படைத்தலைவா' என்ற ழைக்கும்
இன்பத்துக் கீடாக இந்த வையம்
தனைத்தரினும் ஒப்பேனே! ஒருசொல் சொல்க;
'தாளடைந்த நரிக்கண்ணன் ஆள்க' என்றே!

வணங்குகின்றேன் எனக்கூறி வணங்கி நிற்க
மன்னவனும் மனமிரங்கி "அஞ்சேல்! அஞ்சேல்!
இணங்ககின்றேன். நீ ஆள்க" எனஉ ரைத்தான்
"இன்றைக்கே முடிசூட்டிக் கொள்க" என்றான்!
பிணங்குவித்தும் மைத்துனனை உடன் பிறப்பைப்
பெருவஞ்ச கத்தாலே சாகச் செய்தும்
அணியுமொரு மணிமுடிக்கே நரிக்கண் ணன்தான்
அன்பில்லாத் தன்னுளத்தால் மகிழ்ந்து நின்றான்.


இயல் 16
வீரப்பன் என்னும் திருடர் தலைவன் தோழர்களிடம் தன் வரலாறு கூறுகிறான்.

கதிர்நாடு சார்ந்திருக்கும் தென்ம லைமேல்
கருநொச்சிக் காட்டினிலோர் பாறை மீதில்
மிதியடிக்கால் மீதிலோர் காலைப் போட்டு
வீரப்பன் எனும்திருடர் தலைவன் குந்தி
எதிர்நிற்கும் தோழர்கள்பால் இதனைச் சொன்னான்:
எல்லோரும் கேட்டிருந்தார் கைகள் கட்டி!
"முதுமையினை அடைந்துவிட்டேன். வாழ்நாள் எல்லாம்
முட்டின்றிக் கழித்துவந்தேன். ஆனால் கேளீர்

ஒருபிள்ளை கொடிவேங்கை போல்வான்; கண்போல்
ஒருமனைவி! இருவரையும் பிரிந்தேன். ஆண்டும்
இருபதுஆ யினஎன்றன் தீயொ ழுக்கம்
என்மனைவி யாம்ஆத்தா வெறுத்தாள்! நீயோ
திருடுவதைவிடவேண்டும்!அன்றி என்னைத்
தீண்டுவதை விடவேண்டும்!என்றாள்; என்பால்
வரவேண்டாம் இவ்விடத்தில் என்றாள்; என்றன்
மகனைநான் நல்வழியில் வளர்ப்பேன் என்றாள்.

ஒருவனிடம் ஏற்பட்ட தீயொ ழுக்கம்
உடன்வளர்ந்தே, பின்னதுதான் நீக்க ஒண்ணாப்
பெருநோயாய் மாறுவது மெய்யே; நானும்
பெண்டாட்டி பிள்ளைகளை விட்ட தன்றி
ஒருநாளும் தீத்தொழிலை விடுவ தென்றே
உள்ளத்தால் நினைத்ததுவும் இல்லை! ஐயோ
அருமையுறு பெண்டுபிள்ளை நினைவே யாக
அகன்றநாள் ஒவ்வொன்றும் துன்ப நாளே.

நானும்என் மனையாளும் வாழ்ந்தி ருந்த
நல்லுாரை அவள்அகன்றாள்; புல்லுார் ஏகித்
தானங்குக் கைப்பாடு பட்டாள்; சின்னத்
தனிக்குடிசை ஒன்றினையும் கட்டிக் கொண்டாள்;
தேனடையும் ஈயும்போல் மகனும் தானும்
வறுமையிலும் செம்மையினைக் காண்பா ராகிச்
சீனி எனும் கணக்காயர் இடத்தில் அன்பின்
சிறுவனையும் படிக்கவிட்டாள். சிலநாள் செல்ல

கணக்காயர் முயற்சியினால் அரண்ம னைக்குள்
கால்வைத்தாள்; பணிச்சியாய் இருந்தாள்; பின்னர்த்
துணையானாள் கதிர்நாட்டின் அரசி யார்க்கே!
துாயதன் மகன்இன்னும் கணக்கா யர்பால்
இணக்கமுறக் கலைபலவும் பயில்கின்றான். நான்
இவையனைத்தும் அறிந்துள்ளேன்; எனினும் அங்கே
அணுகினேன் இல்லை. எனை அவள்கண் டாலும்
அகம்வெறுத்துத் தலைகுனிந்து மறைந்து போவாள்.

'அப்பையன் வேலனுக்கு நான்தான் தந்தை
ஆத்தாதான் என்மனைவி' என்ற உண்மை
இப்பெரிய நாட்டினிலே இந்த நாளில்
யானறிவேன்; அவளறிவாள்; அறியார் மற்றோர்!
செப்பினேன் இன்றுதான் உம்மி டத்தில்!
செப்பாதீர் யாரிடத்தும்! இன்று நானோ
எப்பாடும் படவில்லை; காலாள் போலே
எதிர்நின்றேன் நரிக்கண்ணன் பேழை தந்தான்.

இடுகாட்டில் நரிக்கூட்டம் உலாவல் போலே
எவ்விடத்தும் அரண்மனையில் வேழ நாட்டின்
படைவீரர் உலாவினார்! எலிகள் ஓடிப்
பண்டங்கள் உருட்டுதல்போல் பொருளை யெல்லாம்
தடதடென உருட்டினார். அவர வர்கள்
சலிப்பின்றிக் கவர்ந்தார்கள் கலைப்பொ ருள்கள்!
இடையிடையே நரிக்கண்ணன் செல்வான், மீள்வான்;
எதையோதான் மிகக்கருத்தாய்த் தேட லானான்.


இயல் 17
வீரப்பன் அன்று நரிக்கண்ணன் தந்த பாண்டியன் பரிசு
என்னும் பேழையைத் திருடர்களிடம் காட்டினான்.

ஓர்அறையில் பேழையினை அரிதிற் கண்டான்
உண்டான மகிழ்ச்சிக்கோர் அளவே இல்லை.
யாருக்கும் தெரியாமல், அதைத்தே ரோட்டி
இடம்சேர்க்க எண்ணினான். அங்கு நான்தான்
நேரினிலே நின்றிருந்தேன். தன்ஆள் என்றே
நினைத்திட்டான்! 'தேரோட்டி இடம்சேர்' என்றான்;
பாராட்டினேன் அவனை! எடுத்து வந்தேன்
பாருங்கள்!" எனப்பேழை தனைக்காட் டிட்டான்.

சிரித்திட்ட திருடர்களில் ஒருவன் சொல்வான்:
"திருடர்களைக் குறைவாகச் சொல்வார் மக்கள்;
இருக்கின்ற பேழையினைத் தேடித் துாக்கி
'எடுத்துப்போ' என்றானே அவனை யாரும்
ஒருபேச்சும் பேசார்கள்; சும்மா நின்ற
உம்மைஅவன் திருடனென்று சொன்னா னன்றோ?
பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான்
பொதுவுடைமை யோன்திருட்டைக் களைவிக் கின்றான்"

என்றுரைத்தான். மற்றொருவன் இயம்பு கின்றான்
"என்னெண்ணம் அதுவல்ல; வேண்டு மென்றே
பொன்னையோ காசினையோ நாமெ டுத்துப்
போம்படிசெய் கின்றார்கள். அதன்பின் நம்மை
வன்சிறையில் அடைப்பார்கள். திருட ரென்று
மக்களிடம் சொல்வார்கள். இவைஏன் என்றால்
மன்னர்,பழம் புலவர், வணி கர்கட் கெல்லாம்
வரும்பெயரை நமக்காக்கும் முயற்சி" என்றான்.

வீரப்பன் கூறுகின்றான் "என்தோ ழர்காள்!
வேலனுக்கு நானளித்த தொன்று மில்லை.!
ஆர்அப்பன் என்பதையும் அறியான் வேலன்!
ஆத்தாவும் அதைக்கூற விரும்ப வில்லை;
நேரிற்போய் இருவரையும் காணு தற்கும்
நெஞ்சமோ ஆவலடை கின்ற துண்டு.
சீரில்லை என்னுடம்பின் நிலையில்; என்ன
செய்வதென எண்ணுகின்றேன். பேழை தன்னை

நான்திறந்து பார்த்ததிலே விலையு யர்ந்த
நகைஆடை, அழகியவாள் முடிஇ வைகள்,
வான்திறந்த உடுக்கள்போல் கதிர்போல் கண்டேன்!
மன்னர்தரும் பட்டையமும் ஒன்று கண்டேன்!
ஈன்றானின் சொத்தாக அதனை என்றன்
எழில்மகனுக் குச்சேர்க்க இங்கு யார்க்கும்
தோன்றாத இடத்தினிலே புதைப்பேன். பின்பு
சொல்லுவேன் இருக்குமிடம்" என்று சொன்னான்.

"ஆண்டவரே, நும்மனைவி எங்க ளன்னை
அடியேங்கள் உடன்பிறந்த வேலன் ஆன
ஈண்டுள்ள இருவரையும் அறியோம் யாமும்!
இன்பமுறும் மனைவியார் உமைவி லக்கிப்
பூண்டுள்ள உறுதியோ பெரிது! தாங்கள்
போகாமல் இருந்ததுவும் புதுமை ஆகும்!
ஊன்தளர்ந்தீர், உடல்தளர்ந்தீர், இனியும் செல்ல
ஒப்பீரோ" என்றுரைத்தார் நட்புக் கொண்டோர்.

"நீங்களெலாம் இங்கிருப்பீர், பேழை தன்னை
நிலையாக ஓரிடத்தில் மறைத்து வைத்துத்
தாங்காத ஆவலினைத் தணிப்ப தற்குத்
தனியாகப் புல்லுார்போய் வருவேன்" என்று
வாங்கியதோர் வில்லைப்போல் வளைந்த மேனி
வானுயர்ந்த குன்றுபோல் நிமிர்ந்து நின்றான்.
ஓங்கியதோள் மீதினிலே பேழை தன்னை
உம்மென்று துாக்கினான்; உடன்ந டந்தான்!


இயல் 18
வேலன் முதலியவர்க்குச் சீனி என்னும் கணக்காயர் நாட்டின் உண்மை செப்பினார்.

சீனியெனும் கணக்காயர் வீற்றி ருந்தார்
சேணுயர்ந்த ஆலடியில்! எதிரில் சிங்கம்
போனிமிர்ந்த பார்வையினான் வேலன், மற்றும்
புலியிளைஞர் அமர்ந்திருந்தார்! கணக்கா யர்தாம்
தேனிகர்த்த தமிழாலே புதிய செய்தி
செப்பினார்: "இளைஞர்களே! அன்புள் ளாரே!
ஏனிந்த நாட்டின்மேல் வேழ நாட்டான்
எழுப்பினான் தன்படையை? அதுவு மின்றி

பெருமைமிகு கதிரைவேல் மன்னன் மீது
பின்னிருந்தே எவன்ஈட்டி தன்னை எய்தான்?
அரசியினைக் கொன்றவன்யார்? அரசர் பெற்ற
அன்னத்தைக் கொலைசெய்ய நினைப்போன் யாவன்?
திருநிறைந்த கதிர்நாட்டின் அரச னென்று
திகழுமுடி தனைச்சூட இந்த நேரம்
அரண்மனையின் நடுவினிலே வேழ நாட்டின்
அரசனெதிர் நின்றிருப்போன் எவன்கண் டீரோ?

கதிர்நாட்டின் மேலந்த வேழ நாட்டான்
கடும்பகைகொள் ளச்செய்தோன் நரிக்கண் ணன்தான்!
முதுகினிலே பின்னின்று ஈட்டி எய்தோன்,
மொய்குழலைக் கொலைசெய்தோன், அன்னந் தன்னை
எதிர்ப்பட்டால் கொலைசெய்ய இருப்போன் அன்னோன்
இப்போது மணிமுடியும் பெறப்போ கின்றான்.
மதியுடையாய் வேலனே, உன்அன் னைக்கும்
மாக்கொடுமை நரிக்கண்ணன் ஆக்கக் கூடும்.


இயல் 19
வேலா உன்அன்னை ஆத்தாக்கிழவியைக் காப்பாற்ற
நீ உடனே போ என்றார் கணக்காயர்.

உன்அன்னை ஆத்தாவைக் காப்பதற்கோ
உடனேபோ! இந்தாவாள்! குதிரை தந்தேன்!
என்கலைகள் உன்னுயிரைக் காக்க! நாட்டின்
இகழ்ச்சியினைப் போக்குக! நீ புகழ்ச்சி கொள்க!
பின்உனக்கு வேண்டுமெனில் இங்கி ருக்கும்
பிறதோழர் துணைபுரிவார்; விடைபெற் றுக்கொள்"
என்றுரைத்தார். வாள்எடுத்துக் குதிரை ஏறி
எதிர்வணங்கிப் புல்லுாரே அதிரச் சென்றான்.

ஐயாவே வேலனுக்குத் துணையாய்ச் செல்ல
ஐந்தாறு குதிரைகளை எமக்கிப் போதே
கையாலே இவைஎன்று காட்டி விட்டால்
கண்ணாலே பார்த்திடுவோம்; அவன ழைத்தால்
நெய்யாலே முண்டெழுந்த நெருப்பைப் போலே
நெஞ்சாலே கொள்கின்ற விசையி னோடு
வையாலே ஆனதொரு பகைமேற் செல்வோம்
வாளாலே தங்கள்புகழ் வளர்ப்போம்" என்றே

இருகைகூப் பிச்சொன்னான் ஒருசேய். அங்கே
இருக்கைவிட் டெழுந்தொருசேய் அறிக்கை செய்வான்:
"வருகைக்குக் காத்திருப்பான் ஐயா; வேலன்
வாழ்க்கைக்கும் உதவாது தாழ்க்கை செய்தால்!
பருகைக்கு நஞ்சளித்த பழிக்கை ஏற்பேன்;
பதைக்கையிலே தடுப்பீரோ? இதைக்கை விட்டால்
அருள்கைக்கு நாளெதுதான்? என்மேல் வேலன்
அன்புகைக்கும்; அவன்பகைக்கும் கைவ லுக்கும்.

போமாறு தலையசைப்பீர்!" என்று சொன்னான்.
புதுமாறு தலைவேண்டும் ஒருவன் நின்றே,
"ஆமாறு நாமுணர்ந்தோம். வேலன் அங்கே
அழுமாறு தலையிடா திருந்து விட்டால்
ஏமாறு தலையடைந்த இந்த நாட்டின்
எழில்மாறும்! நிலைமாறும்! ஆட்சி மாறும்!
நாம்ஆறு தலையடைய நரியின் நோக்கம்
நகுமாறு தலையிடுவோம், நவில்க!" என்றான்.

"பொறுத்திருப்பார் வாழ்ந்திருப்பார்! இந்த நாட்டில்
புகுந்திருப்பார், இங்கிருப்பார் தம்மை யெல்லாம்
நிறுத்திருப்பார்; இலேசென்று நினைத்தி ருப்போர்
நிகழ்வதைக்கண் திருப்பாது பார்த்தி ருப்பார்!
குறித்திருப்பார் ஆத்தாவைத் தீயோள் என்று
குளிர்ந்திருப்பார் அவளிறந்தால்! செம்மல் வேலன்
மறந்திருப்பார் வைகாணா திருப்பார்; காண்பார்
மறைந்திருப்பார், கையிருப்பார் அறிவார்!" என்றான்.


இயல் 20
புல்லுார்ச் சிறுகுடிசையில் ஆத்தாவும் அன்னமும்.

புல்லுாரிற் சிறுகுடிசை தனில்இ ரண்டு
புண்பட்ட நெஞ்சங்கள் ஒன்றை யொன்று
நல்லுரையில் தேற்றியிருந் தன.அ வற்றில்
நரைபட்ட ஆத்தாளின் நெஞ்ச மொன்று!
வல்லுாறு குறிவைத்த புறாப்போல் வாழும்
மலர்க்கொடியாள் அன்னத்தின் உள்ள மொன்று!
சொல்லிஅழு தாள்ஆத்தா; ஆற்றாள் கண்ணீர்
சொரிந்தழுகின் றாளின்னும் பெண்ணை நோக்கி.

"அன்னத்தின் கண்ணி னிக்கும் மகனைத் தேடி
ஆவணியில் மணமுடித்துத் தைப்பி றப்பில்
மன்னியசிங் கஞ்சுமந்த தவிசில் ஏற்றிக்
கதிர்நாட்டின் மணிமுடியை அவளுக் காக்கி
என்கண்ணால் பார்த்துள்ளம் மகிழ்வே னென்ற
எழில்மன்னன் மொழிஎண்ணிஅழுவே னாநான்?
அன்னவனின் திருத்தோளும் அகன்ற மார்பும்
அழிவுற்ற தைஎண்ணி அழுவே னாநான்?

அருமைமகள் தனக்கேற்ற அன்ப னோடும்
ஆணிப்பொன் கட்டில்எனும் சேற்றி னுள்ளே
எருமைஎனக் கிடந்தின்பம் நுகரு கின்ற
எழில்நாளை நான்காணப் பெறேனோ என்ற
பெருமாட்டி மொழிஎண்ணி அழுவே னாநான்?
பிள்ளைக்கு நஞ்சூட்டும் தாய்போல் அந்த
நரிக்கண்ணன் வஞ்சித்துக் கொன்ற போது
நாளற்றுப் போனதெண்ணி அழுவே னாநான்?

எதிரெதிரே இருதழற்பந் துகள் சுழன்றே
இருப்பதுபோல் கதிர்நாட்டான் வேழ நாட்டான்
அதிர்கின்ற மெய்ப்பாடும் சுழற்றும் வாளும்
கட்புலனுக் கப்பாலாய் விசைகொள் ளுங்கால்
முதியஓர் காலாள்போல் தாடி மீசை
முடித்துநான் அங்கிருந்தேன்; நரிக்கண் ணன்தான்
பதுங்குகறுப் புடைபூண்டு வேந்தை மாய்த்தான்
பதைத்தேனே அதைஎண்ணி அழுவே னாநான்?

நானிருந்தேன் காலாட்கள் பலரி ருந்தார்
நடுவினிலே வேழநாட் டரசன் நின்றான்.
மேனிமிர்ந்த கரியஉடைக் காலாள் வந்து
மெல்லிதனை நரிக்கண்ணன் வெட்டிச் சாய்த்த
ஊன்நடுங்கும் செய்தியினைச் சொன்னான். மன்னன்
உளம்நடுங்க மற்றவர்கள் உடல்ந டுங்க
நானிருந்து மன்னவனைத் தேற்றுங் கால்என்
நல்லுயிர் ஒடுங்கியதற் கழுவே னாநான்?

பழநாள்பாண் டியன்உன்றன் மூதா தைக்குப்
பரிசளித்தான் இந்நாட்டை! அதைக்கு றிக்கும்
முழுநீளப் பட்டயமும் உடைபூண் வாளும்
மூடியஅப் பேழையும்போ யிற்றே அந்தோ!
இழந்ததனால் பேழையினை, அழகு மிக்க
இந்நாடு நின்உரிமை என்ற உண்மை
ஒழிந்திடுமே! அதைஎண்ணி அழுவே னோநான்?"
இவ்வண்ணம் உரைத்தழுது கொண்டி ருந்தாள்.


இயல் 21
கிழவி, இவ்வாறு நடந்தவை கூறி நையும்போது, வீரப்பன் அக்குடிசை நோக்கி வந்தவன் இவைகளை ஒளிந்து கேட்டிருந்தான்; உண்மை உணர்ந்தான்.

வௌியினிலே பேழையொடு நின்றி ருந்த
வீரப்பன் இவற்றையெல்லாம் கேட்டி ருந்தான்.
களிகொண்டான்! தன்முதுகில் உள்ள பேழை
கதிர்நாடு கவின்அன்னம் உடைமை என்று
வௌிப்படுத்தத் தக்கதோர் பேழை என்று
விளங்கிற்று. தன்மனைவி ஆத்தா, அங்குக்
கிளிமொழியாள் அன்னத்தைக் காப்ப தற்கும்
கேடுதனை நீக்கற்கும் முயலு கின்ற

நிலையாவும் விளங்கிற்று! வீரப் பன்தான்
நீள்பேழை தனைஆத்தா விடம்இப் போதே
குலையாமல் தந்திடவும் நினைத்தான். நாட்டின்
கொந்தளிப்பில் பேழையினை அவள்காப் பாற்றும்
வலிஏது? பொறுத்திருப்பேன் எனமு டித்து
மற்றும்அவர் பேசுவதைக் கேட்டி ருந்தான்.
தலைமீது கைவைத்துத் "தாயே! அப்பா!
தனிவிட்டுச் சென்றீரோ இனிவாழ் வேனோ?


இயல் 22
அன்னத்தின் துன்பம்.

ஐயகோ என்ஆத்தா! வைய கத்தில்
அன்னைமடிந் தாளென்று சொன்ன சொல்லைத்
தையலென துளம்பொறுத்த துண்டு;பின்பு
தந்தையிறந் ததுபொறுத்த துண்டு; மேலும்
துய்யகதிர் நாட்டுரிமை பேழை யோடு
தொலைந்ததையும் பொறுத்ததுண்டு; பொறாத தீமை
செய்துவந்தான் என்மாமன் எனறால் இந்தச்
சிறியஉளம் பெருந்துயரைப் பொறுப்ப துண்டோ?

உடன்பிறந்தா ளைவெட்டி, அன்னோள் ஆவி
ஒப்பானி ன் உடல்சாய்த்தே இப்பால் என்னைத்
தொடர்ந்தழிக்க எண்ணினவன் மாமன் என்றால்,
சுரந்தபால் இருந்தருந்திப் பரந்து லாவும்
நெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும்
நிறையன்பால் உடன்பிறந்தார் என்று ணர்த்தக்
கிடந்துதவம் புரிகின்ற உலகில் இந்நாள்
கேடிழைக்கும் உறவெனும்சொல் கேட்ப தேயோ?

ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
ஒருக்கணித்து மார்பணைத்து மேனி யெல்லாம்
கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன்
கண்மறைக்கும் சுரிகுழலை மேலொ துக்கி
மைப்புருவ விழிமீது விழிய மைத்து
மலர்வாயால் குளிர்தமிழால் கண்ணே என்று
செப்பிமுத்த மிட்டாளே! அன்புள் ளாளின்
செந்தாமரை முகத்தை மறப்பே னோநான்?

இம்மாநி லம்புகழும் தந்தை, முந்தை
ஈட்டிவைத்த மாணிக்கம் கூட்டி அள்ளிக்
கைம்மாரி யாய்ப்பொழிந்து கணக்கா யர்பால்
கலையருள வேண்டித்தன் தலைவ ணங்கி
அம்மாஎ னக்கூவிக் கைம்மே லேந்தி
அருகமர்ந்து பருகஎன்று பாலும் தந்தே
'அ'ம்முதல் எழுத்தளித்தான்; அறிவோ அன்னோன்
அன்பான திருமுகத்தை எண்ணி வாடும்.

ஊராளும் தலைவனின்குற் றேவல் செய்வோன்
ஓட்டுவிக்கும் சிற்றாளின் கீழ்க்கி டக்கும்
ஓர்ஆளின்மகள் தன்னை உவந்து பெற்றோர்
உயிர்துறந்தால் உளந்துடிப்பாள் என்றால், இந்தப்
பாராளப் பெற்றாரை என்பெற் றோரைப்
பறிகொடுத்த என்னுயிரோ உடலில் நிற்கும்?
யாருமில்லை யான்பெற்ற பேறு பெற்றோர்;
இற்றைக்கோ என்போலக் கெட்டா ரில்லை."


இயல் 23
பதிவிருந்து கேட்டிருந்த வீரப்பன் போய் விட்டான்.
நரிக்கண்ணனுக்கு முடி சூட்டுவதை முரசறைகிறான் ஒருவன்!

எனத்துடித்தாள். வீரப்பன் எடுத்தான் ஓட்டம்!
இங்கிருந்தால் அன்னத்தைத் தேடு வோரின்
சினத்தீயில் வெந்திடுதல் அன்றி, பேழை
சிறியநரிக் கண்ணனிடம் சேரு மென்று
நினைத்தானாய், யாருமிலா இடம்பு குந்தான்.
நீங்கியபின் முரசறைவோன்," நரிக்கண் ணர்தாம்
இனிக்கதிர்நாட் டுக்கரசாய் முடிபூண் கின்றார்
இந்நாள்" என் றான்.இதனை இருவர் கேட்டார்.

அடிவைத்தான் கதிர்நாட்டில்! நெஞ்சில் வைத்தான்
அழிவைத்தான்! விழிவைத்தான் உரிமை வேரில்!
குடிவைத்தான் ஒடிவைத்தான் நாட்டில்! எங்கும்
கொலை வைத்தான்! குறைவைத்தான் எண்ணா னாகி
வெடிவைத்தான் அறம்வளர்த்த இவ்வீட் டுக்கும்!
மின்னொளியே, தன்தலையில் உன்ன தான
'முடி'வைத்தான்; முழக்குகின்றான்; அன்னோன் வாழ்வின்
முடிவைத்தான் முழக்குகின்றான் முரச றைந்தே!

இந்நேரம் நரிக்கண்ணன் நன்னீ ராடி,
எழிலுடையும் இழைபலவும் பூண்டு, வேழ
மன்னவனை எதிர்பார்த்துப் பொன்னில் மின்னும்
மணிமுடியை அணிவதற்குக் காத்தி ருப்பான்!
இந்நேரம், தான் இருக்கும் இடத்தி னின்றே
எழிலரண்ம னைநோக்கித் தேரி லேறிப்
பின்எவரும் சூழ்ந்துவர வருவான் வேழன்!
பேரவையில், மகிழ்ச்சிகொள எவர்இ ருப்பார்?


இயல் 24
முரசறைதல் கேட்ட ஆத்தா அவனைத் துாற்றுங்கால், எதிரிகள் குடிசையைச்
சூழ்ந்தார்கள்; அதேநேரத்தில் வேலனும் பகைவரை எதிர்த்தான்.

என்றுரைத்தே ஆத்தாதன் எரிவை இல்லாம்
எடுத்துரைக்கும் நேரத்தில், குடிசை நோக்கி
'அன்னம்அதில் தான்இருப்பாள், ஆத்தா என்னும்
அக்கிழவி யுடனிருப்பாள்' என்று கூவி
முன்வந்தார் சிலபகைவர் குடிசை நோக்கி!
முழங்கிற்றுக் குதிரைகளின் அடிஓ சைதான்.
பின்னொருவன் வருகின்றான் அவன்பேர் வேலன்!
பெருவாளும் குதிரையும்பாய்ந் தனப கைமேல்!

பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப்
பாய்ந்தனன்பல் ஆடுகட்குள் வேங்கை போலே!
கலங்கினர்வே ழவர் பத்துப் பேர்மாண் டார்கள்!
கத்திசுழல் ஓசைமற வர்மு ழக்கம்,
குலைநடுங்க வைத்தன! ஆத்தா, தன் வேலன்
குரல்கேட்டாள்; வேழவர்கள் அங்கு வந்த
நிலையுணர்ந்தாள். அன்னத்தை நோக்கி அங்கு
நிகழ்கின்ற போர்நோக்கம் நிகழ்த்திப் பின்னர்,


இயல் 25
வேலனும் பகைவரும் போர் நடத்துகையில், அன்னம்,
ஆத்தா உருமாறி வௌிச் சென்றார்கள்.

அன்னத்தை ஆடவனாய் உருமாற் றிட்டாள்;
அன்றுபோல் தன்னுருவம் மாற்றிக் கொண்டாள்!
கன்னமறைக் குந்தாடி யுடைய தாத்தா,
கண்ணொத்த பையனொடு செல்வ தைப்போல்
தன்மகனின் கணக்காயர் சீனி வாழும்
தனிவீட்டை நோக்கியே விரைந்து சென்றாள்!
"உன்மகனின் நிலைஎன்ன" என்றாள் அன்னம்;
"ஊர்மீட்கச் சாகட்டும்" என்றாள் ஆத்தா!

"கண்ணெடுத்தும் பார்த்தோமா கைவா ளோடு
கடும்போரில் தனியாகக் கிடந்த சேயை?
பெண்ணெடுத்து வளர்த்திட்டாள்; அதனா லேதன்
பிள்ளைஉயிர் போவதையும் பெற்ற தாய்தான்
எண்ணவில்லை என்றுலகம் உனைப் பழிக்கும்;
என்னால்தான் இப்பழியென் றெனைப்ப ழிக்கும்!
மண்ணெடுத்துச் சுட்டிடுசெங் கல்லோ, அன்றி
மலைக்கல்லோ உன்னெஞ்சம்" என்றாள் அன்னம்.


இயல் 26
ஆத்தாவும் அன்னமும் சீனிக்கணக்காயர் வீடு நோக்கிப் போனார்கள்.
எதிரில் வேலனின் துணைவர் குதிரைமேல் ஏறிக் குடிசை நோக்கிப் போவதைக் கண்டார்கள்.

"வேலவனைக் காப்பதற்கு நம்மா லாமா?
வீண்கவலை கொள்ளுவதில் ஆவதென்ன?
ஞாலத்தில் என்பிள்ளை யின்தி றத்தை
நானறியக் கணக்காயர் சொன்ன துண்டு!
சோலைஅதோ! அதையடுத்த சிற்றுார் காண்பாய்!
தொடர்ந்துவா விரைவாக!" என்றாள் ஆத்தா.
நாலைந்து குதிரைகளில் வாள் பிடித்த
நல்லிளைஞர் எதிர்வருதல் இருவர் கண்டார்.

"எங்கிருந்து வருகின்றீர்?" என்றான் ஓர்சேய்.
"எழில்வேலன் அவ்விடத்தில் வேழ வர்பால்
வெங்குருதிப் போர்செய்து கொண்டி ருக்கும்
விழற்குடிசைப் புறமாக வந்தோம்" என்று
தங்குதடை இல்லாமல் ஆத்தா சொன்னாள்.
தாவினார் இளைஞரெல்லாம் குதிரை ஏவி!
மங்கையிரு கைகொட்டி மகிழ்ந்தாள் "உன்றன்
மகன்முகமும் பார்த்தறியேன் ஆத்தா" என்றாள்.


இயல் 27
ஆலடியில் கணக்காயர் எதிரில் சென்று மாற்றுடை களைகிறார்கள்.
பின் அனைவரும் மாற்றுருவத்தோடு அரண்மனை நோக்கி நடந்தார்கள்.

ஆலடியில் அமர்ந்திருந்த கணக்கா யர்பால்
ஆத்தாவும் மங்கையும்போய்ப் போர்த்தி ருந்த
மேலுடையும் தாம்விலக்கி நின்று செய்தி
விளக்கிடவே, கணக்காயர் கிளத்த லானர்:
"வேலவனோ உமைக்காக்க அங்கு வந்தான்
வேழவரை எதிர்த்துப்போ ரிடவு மானான்;
நாலைந்து பேர்இளைஞர் துணைக்கும் சென்றார்;
நரிக்கண்ணன் தெரிந்துகொள்வான் இனிஎன் நோக்கம்.

என்னையவன் சிறைப்படுத்த எண்ணு முன்னம்
யாமெல்லாம் மாற்றுருவத் தோடு சென்று
மன்னவனாம் வேழவனைத் தனியே கண்டு
மங்கைநிலை கூறுவது நல்ல" தென்றார்.
நன்றென்றார் இருவருமே! உருவம் மாற்றி
நடந்தார்கள் மூவருமாய் அரண் மனைக்குத்
தென்புறத்தே வேழவனார் தங்கி யுள்ள
திருமன்று தனைநோக்கி மிகவி ரைந்தே!


இயல் 28
வேழமன்னன் திருமன்றில் அமைந்து நரிக்குக் கதிர் நாட்டைப் பட்டம் கட்டினேன்
என்று மகிழ்ந்தான். அதை ஒரு முதியோன் மறுத்தான்.

ஒளிவிளக்குப் பத்தாயி ரத்தின் நாப்பண்
உயிர்விளக்காய் வீற்றிருந்தான் வேழ மன்னன்!
தௌிவிளக்கும் அறிவுடைய அமைச்சன் தானும்,
சிறியபடைத் தலைவர்களும் சூழ்ந்தி ருந்தார்.
களிமிகுக்க வேழத்தான் உரைக்க லுற்றான்
கண்ணெதிரில் இருக்கின்ற தன்னாட் டார்பால்:
"குளிர்புனல்சேர் கதிர்நாட்டை நரிக்கண் ணற்குக்
கொடுத்துவிட்டேன்; அவன்குறையை முடித்து விட்டேன்.

என்னருமைப் படைத்தலைவன் மகிழும் வண்ணம்
யான்புரியத் தக்கதுபு ரிந்து விட்டேன்;
தன்னருமை உழைப்பாலே என்னி டத்தில்
தான்பெறத்த குந்ததைத்தான் பெற்று விட்டான்;
பொன்முடியை அவன்தலையிற் சூட்டும் போது
பொதுமக்கள் இந்நாட்டார் முகத்தி லெல்லாம்
துன்பத்தை நான்கண்டேன் ஏனோ?" என்றான்
"சொல்வேன்"என் றொருமுதியோன் வணங்கிச் சொல்வான்.

"நரிக்கண்ணன் கதிர்நாட்டை அடைவ தற்கு
நல்லதொரு சூழ்ச்சியினைத் தேட லானான்;
எரிவுதனைக் கதிரைவேல் மன்னன் மேலே
ஏற்றினான் தங்கட்கு; நம்பி னீர்கள்!
ஒருநாளும் தங்களைஅக் கதிரை வேலன்
உள்ளத்தால் பேச்சாலே இகழ்ந்த தில்லை;
பெரும்படையும் கொண்டுவந்தீர்! நடந்த போரில்
மறவர்நெறி பிழைத்ததுவும் அறமோ ஐயா?

இருவேந்தர் வாட்போரை நிகழ்த்தும் போதே
ஈட்டியினைப் பின் வந்து கதிர்நாட் டான்மேல்
நரிக்கண்ணன்செலுத்தினான்; நானும் கண்டேன்
நகைத்ததுவான்! நாணிற்று நல்ல றந்தான்!
இருக்கட்டும்; பெருவேந்தே, அரசி யாரை
எதிர்பாரா வகையாக வஞ்சத் தாலே
பெருங்கொலைசெய் தான்அந்தோ! இப்பெண் ணாளைப்
பிறரறியா வகையில்நான் காத்தேன் அன்றே.

இவ்விளைய பூங்கொடியின் வேர றுக்க
என்னவெலாம் செய்கின்றான்? என்னைக் கொல்ல
ஒவ்வாத முறையெல்லாம் சூழு கின்றான்;
உங்களிடம் நீதிகேட் கின்றேன்" என்று
செவ்விதழாள் அன்னத்தை முகிலின் மீண்ட
திங்களென மாற்றுருவம் களைந்து காட்டி
அவ்வகையே தானும்தன் உண்மை காட்டி
"ஆத்தாஎன்பேர்; அரசின் பணிப்பெண்" என்றாள்.


இயல் 29
ஆத்தா, அன்னம் என அறிந்த வேழ மன்னன்
வியப்புற்றதோடு, பழி என் மேலல்ல என்றான்.

வியப்புற்றான்; முகநிறையக் கண்தி றந்து
மெல்லியினை, ஆத்தாவைப் பார்த்தான்; மிக்க
துயருற்றான். "ஒருநாட்டைப் பிடித்த பின்னர்
தொடர்புடையார் தமைக்கொல்ல ஒப்பு வேனோ?
செயப்பட்ட போர்நடுவில் பகையை நானோ
பின்னிருந்து கொலைபுரியச் செய்வேன்?" என்று
வியர்த்திட்டான் உடலெல்லாம்! "அந்தத் தீயன்
விளைத்திட்டான்; நானல்லேன்" என்ற சொன்னான்.

"அப்போதே நானினைத்தேன்; கேள்வி யுற்றேன்.
அவற்றையெல்லாம் நரிக்கண்ணன் மறுத்துக் கூறித்
தப்பேதும் இல்லான்போல் ஆடல் செய்தான்.
கதிர்நாட்டின் தனியரசாய் நரிக்கண் ணற்கும்
இப்போது தான்முடியைச் சூட்டி வந்தேன்;
என்செய்வேன் பழிசுமந்தேன்! பழிசு மந்தேன்!
எப்போதும் உமக்கேஓர் தீமை யின்றி
யான்காப்பேன் அஞ்சாதீர்" என்றான் மன்னன்.


இயல் 30
அன்னம் முதலியவரைக் காக்கும் வழியை அரசன் ஆராய்ந்தான்.

பின்னும்அவன் அமைச்சனையே நோக்கி, "இந்தப்
பெண்ணரசி இனிஉய்யும் வண்ணம் யாது?
சின்னநடை நரிக்கண்ணன் இடம்வி டுத்தால்
தீங்கிழைப்பான்; நல்லஉளப் பாங்கொன் றில்லான்;
அன்னையினைக் கொலைசெய்தான்; தந்தை தன்னை
அழித்திட்டான்; அன்னத்தை ஒழிப்ப தற்கும்
முன்னின்று காத்தாளை ஆத்தா என்னும்
முதியாளைத் தீர்த்திடவும் குதியா நின்றான்.

கூறுகநின் கருத்"தென்றான். அமைச்சன் சொல்வான்:
"கொடியோனைக் கதிர்நாட்டை ஆள விட்டீர்!
சீறுகின்ற பாம்புக்குத் தவளை யூரில்
திருமுடியோ சூட்டுவது? பின்பு காண்பீர்!
வீறுடைய கதிரைவேல் மன்னன் ஈன்ற
வெண்நிலவு முகத்தாளின் எண்ணங் கேட்டு
வேறுநாட் டிளவரசை மணக்கச் செய்து
மேலுமொரு தீங்கின்றிக் காக்க வேண்டும்.


இயல் 31
"அன்னம் முதலியவரைக் காப்பாற்ற வேழ நாட்டிலிருந்து
ஒருவரை அனுப்பிக் கதிர்நாட்டை ஆண்டு வரச்செய்க" என்றான் அமைச்சன்.

கதிர்நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி
கடுகளவும் தீங்கின்றி இருப்ப தற்குப்
பொதுநாட்டம் உடையஓர் அறிஞன் தன்னைப்
போயிங்கு நீர்அனுப்ப வேண்டும்" என்றான்.
"எதுநாட்டம்? அன்னமே சொல்வாய்" என்றான்.
ஏந்தல்மொழி கேட்டமலர்க் கூந்தல் சொல்வாள்:
"சதுர்நாட்டிப் பகைமுடிமேல் தாளை நாட்டும்
தமிழ் நாட்டுப் பெருவேந்தே! அவையில் உள்ளீர்!

பழநாளிற் பாண்டியனின் படைந டத்திப்
பகைகொண்ட சோழனையும் வெற்றி கொண்ட
அழல்வேலான் என்னருமை மூதா தைக்கே
அளித்தான்ஓர் பேழையினைப் பரிசாய்; அந்த
எழிலான பேழையிலே ஞாலம் மெச்சும்
இழைஆடை, வாள்பலவும் இருக்கும்; மேலும்
அழகான கதிர்நாட்டின் வரலா றெல்லாம்
அப்பேழை சொல்லிவிடும். ஆத லாலே,


இயல் 32
அன்னம் கூறுவாள் : என்பேழை அரண்மனையில்
இருக்கும்; அதைக் காட்டச் செய்வீர் மன்னரே!

வேழமா நாடுடைய வேந்தே! என்றன்
மேனாளின் நற்புகழை விளக்கும் அந்தப்
பேழைமா றாமல்அதைக் காட்டும் வண்ணம்
பெரியதோர் கட்டளையும் இடுதல் வேண்டும்!
ஏழையரின் குறைதீர்த்தல் கடமை யன்றோ?"
என்றுரைத்தாள். "நன்றுரைத்தாய் பெண்ணே! அந்தப்
பேழைமாற் றம்சிறிதும் இன்றி இங்கே
பெரும்படையால் வரும்படிசெய் கின்றே னென்று

ஆளியெனும் படைத்தலைவா செல்க என்றான்
ஆயிரவர் உடன்செல்க என்றான்! இந்த
நாளில் இதே நேரத்தில் அரண்ம னைக்கு
நாற்புறமும் காப்பமைத்தும் உட்பு குந்தும்
ஆளிருவர் மூவர்விழுக் காடு நீடும்
அறைதோறும் தேடிடுக எங்கும் பார்ப்பீர்;
கேளிர்இதை; அப்பேழை அடையா ளத்தைக்
கிளிமொழியாள் சொல்லிடுவாள்" என்றான் மன்னன்.


இயல் 33
பேழையின் அடையாளம் கூறினாள் அன்னம்.

இளவஞ்சி அன்னம்உரைத் திடுவாள்: "ஐயா
என்பேழை மன்னவரின் வாளின் நீளம்!
உள்அகலம் மூன்றுசாண்! உயரம் நாற்சாண்!
ஒளிதிகழும் கிளிச்சிறைப்பொன் தகடு தன்னால்
வௌிப்புறமும், பொதிகைமலைச் சந்த னத்தின்
வெண்பலகை உட்புறமும் காணும்; மேலே
உளிஅழுந்தும் எழுத்தாலே உள்ளி ருக்கும்
உயர்பொருள்கள் அத்தனைக்கும் பெயர்கள் காணும்.

வாள், நகைகள், ஆடைவகை முழுநீ ளத்தில்
வைத்திடுபொற் பட்டயம்பே ழைக்கு ளுண்டு!
காணுகநீர்" என்றுரைத்துத் தான ணிந்த
கழுத்தணியைக் கழற்றிஅதில் அமைத்தி ருந்த
ஆணிப்பொற் பேழையதன் அடையா ளத்தை
அரசருக்கும் படையாட்சி தனக்கும் காட்டிச்
சேணுயர்ந்த அரண்மனைக்குள் ஆடற் கட்டின்
தென்அறையில் அப்பேழை இருக்கும்" என்றாள்.


இயல் 34
அன்னம் முதலியவர்களுடன் படையை அணுப்பி
அரண்மனையில் பேழையைத் தேடச் செய்தான் மன்னன்.

ஓடுக,பாண் டியன்பரிசை நோக்கி நீவீர்!
உமைத்தடுத்தால் நமதாணை அவர்க்குச் சொல்க!
தேடுக வென் றான்மன்னன்! சென்றிட் டார்கள்!
திருநாட்டை வென்றேன்நான் எனினும் அந்த
நாடுதனை உடையவர்க்கே நான ளித்து
நாளடைவில் அவரிடத்தில் கப்பம் கொள்ளல்
பீடுடைய அறமாகும்! இந்த நாட்டின்
பேருரிமை ஆராய்வேன் என்றான் மன்னன்.

அந்நேரம் எண்ணத்தில் ஆழ்ந்தி ருந்த
அமைச்சன்இது கூறுகின்றான் மன்ன வன்பால்:
"மன்னவரே ஆளியினைப் போகச் சொன்னீர்
மற்றந்தப் படைத்தலைவன் நரிக்கண் ணற்குச்
சின்னவனே ஆதலினால் பேழை தேடும்
திறத்தினிலே குறைச்சல்வந்து சேரக் கூடும்;
இந்நிலையில் பொறுப்புள்ள ஆள னுப்பி
எழிற்பேழை தனைத்தேடச் செய்க" என்றான்.

ஆத்தாவும் உரைத்திடுவாள்: " ஆம்ஆம் நானே
அவ்விடத்தில் போகின்றேன் துணைய ளிப்பீர்!
தீத்தாவும் கண்ணாலே நரிக்கண் ணன்தான்
சிறியபடைத் தலைவனையே அஞ்ச வைத்துக்
காத்தாளும் அரண்மனையில் பேழை தன்னைக்
கைப்பற்றிக் கொள்வானே" என்று கூறத்
"தாத்தாவைப் போலுருவை மாற்றிக் கொள்க,
தக்கப்படை யொடுசெல்க" என்றான் மன்னன்.


இயல் 35
அன்னம் முதலியவர் அரண்மனையடைந்தார்கள்.
ஆளி அரண்மனையில் தேடியதில் பேழை இல்லை என்றான்.

முன்போல ஆணுருவம் பூண்டாள் ஆத்தா,
முழுநீள வாள்ஒன்றும் இடையில் சேர்த்தாள்!
பின்தொடர்ந்தார் கணக்காயர்; வாளும் ஏந்திப்
பிற காலாட் படைதொடர அரண்ம னைக்கு
முன்வாயில் தனையடைந்தார்; மேலும் உள்ளே
மொய்த்தபடை மேல்சென்று மொய்த்து நிற்கச்
சின்னதொரு படைத்தலைவன் ஆளி என்பான்
"தேடியதில் பேழையினைக் காணோம்" எனறான்.


திடுக்கிட்டார் கணக்காயர்! நரிக்கண் ணையா
தெருக்கதவின் அருகினிலும் போக வேண்டாம்;
படைமறவர் யாவருமே வௌிச்செல் லாதீர்!
பகரும்இது வேழவரின் ஆணை யாகும்;
அடுக்களையோ ஆடரங்கோ எவ்வி டத்தும்
அணுவணுவாய்ப் பேழையினைத் தேட வேண்டும்;
நடுவிலுள்ள உமையும் ஆராய வேண்டும்
நகராதீர் என்றுரைத்தார்; நன்றென்றார்கள்.


இயல் 36
கணக்காயர் முதலியவர்கள் தேடினார்கள். அங்கிருந்த மற்றவர்கள் அவ்விடம் விட்டு
வௌியிற்செல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால் ஒருவன் மட்டும் வௌியில் ஓடுகிறான்.
ஆத்தா பின்தொடர்கின்றாள்.

கணக்காயர் எவ்விடத்தும் துணைவ ரோடு
கடிதாகத் தேடுகையில், ஆட்கள் தம்முள்
இணைப்பாக நின்றிருக்கும் ஒருவன் கண்ணை
இமைக்காமல் நாற்றிசையும் செலுத்து வோனாய்
அணித்தான தெருவாயில் நோக்கி மெல்ல
அகலுவதைக் கருத்தாக ஆத்தா பார்த்தே,
"கணுக்காலை வெட்டுவேன். செல்லேல்" என்றாள்;
கடிதுபறந் தான்; பறந்தாள் வாளை ஓச்சி.


இயல் 37
ஓடியவன் கணுக்காலை ஆத்தா வெட்ட, அதே போதில்
அவன் அவளின் இடது கையை வெட்ட, இருவரும் ஓரிடத்தில் வீழ்ந்தார்கள்.

அரசநெடுந் தெருநீங்கிப் பல்க லைகள்
ஆய்கூடம், நோய்நீக்கும் மருத்து வத்தின்
பெருநிலையம் நீங்கிப்பின், குறுக்கே ஓடிப்
பிறைக்கோட்டு யானைபல நிறத்தும் கூடத்
தருகினிலோர் இருள்கிடக்கும் பொதுமன் றத்தில்
அவன்புகுந்தான். கணுக்காலை வெட்டி னாள்;தன்
அரிதான இடக்கையை இழந்தாள் ஆத்தா
இருமுதியார் அருகருகு துடித்து விழ்ந்தார்.

செந்நீரில் புரளுகின்ற இரண்டு டம்பும்
தெண்ணீரின் கரைமீனாய்த் துடிக்கும்! ஆவி
இந்நிலையில் ஆயிற்றா என்னும் வாய்கள்!
இரண்டுள்ளம் சுரப்பற்ற பசுக்காம் பைப்போல்
எந்நினைவும் இல்லாமல் துன்ப மேயாம்!
'இம்' மென்னும் இருகுரல்கள் வைய வாழ்க்கை
சின்னேரம் சின்னேரம் என்ப தெண்ணத்
திடுக்கிடும் அவ் விருமுதுமைப் பருவம் ஆங்கே.

தனக்குந்தன் கணவனுக்கும் இடையில் வாய்த்த
தடை,பிரிவு, கசப்பனைத்தும் பல்லாண் டாகப்
புனத்திலுறும் புதல்போலே வளர்ந்த தாலே
புறத்தொடர்பே இல்லாத முதிய ஆத்தா
அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில்
'அம்மா'என் பதுபோலே துணைவன் தன்னை
நினைத்தவளாய்த் தாழ்குரலில் "அத்தான்" என்றாள்;
நிறைவியப்பால் வீரப்பன் "ஆத்தா" என்றான்.


இயல் 38
வீரப்பன் தன் மனைவியான ஆத்தாவைப் புரண்டணைத்தான். அவளும் அவ்வாறே!

ஆண்என்று வாள்சுமந்தும் எனைத்தொ டர்ந்தும்
ஆள்என்றும் மரமென்றும் தெரியாப் போதில்
காண்என்று கணுக்காலைத் தீர்த்தாய் என்உள்
கனிஎன்றும் கரும்பென்றும் கிடந்த நீதான்;
வீண்என்று கருதுகிலேன்! என்செய் கைக்கு
விளைவென்று கருதுகின்றேன்! கொடிய சாவைப்
பூண்என்று புகன்றாலும் மகிழ்வேன் என்று
புரண்டணைத்துப் பொன்னே என் றழுதான் கூவி!

படையாளிற் பகைஆள்போல் இருந்தாய் அத்தான்!
பாண்டியனார் பரிசென்னும் நீண்ட பேழைக்
குடையாளின் பணியாள்நான்! நரிக்கண் ணற்கே
உளவாளாய் நீயங்கே ஓடி னாய் என்
றடையாளம் தெரியாமல் இழைத்த குற்றம்
அறிவாளா பொறுத்திடுக! என்று நெஞ்சம்
உடைவாளாய் இருகையால் அணைத்த மெய்யை
ஒருகையால் அணைத்தன்பில் உயர்வா ளானாள்.

பிள்ளையெங்கே எனக்கேட்டான் வீரப் பன்தான்!
பெருங்குடிசை தனிலெனையும் வேந்தன் பெற்ற
கிள்ளையையும் சிறைசெய்ய நரிக்கண் தீயன்
கிளப்பிவிட்ட கொடுமறவர் உயிரை அங்கே
கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான்; அன்னம் என்னும்
கோவையிட்ட செவ்விதழாள் உள்ளத் துள்ளே
முள்ளையிட்டாற் போல்அச்ச மேமே லிட்டு
முறையிட்டாள்; இட்டுவந்தேன் என்றாள் ஆத்தா.

மண்காண முகில்கிழித்து நிலவு வந்து
மற்றவர்கள் நமைக்காண வைத்தல் காண்பாய்!
புண்காண இடருற்றுக் கிடக்கின் றோமே!
புறஞ்சென்று நலங்காண வகையு மில்லை!
பண்காணும் மொழிஅன்னம் தனையும், பெற்ற
படிகண்ட பிள்ளையையும் இந்நாள் என்றன்
கண்காணு மோஎன்றான்! துன்பத் துக்கோர்
கரைகாணா மற்கிடந்தார் இருவர் அங்கே.


இயல் 39
நரிக்கண்ணனை வேழ மன்னன் சீறினான்.

திகழ்வேழ மன்னனுடன் அமைச்சன், அன்னம்,
செயலுடையார் திருமன்றில் அமர்ந்திருந்தார்!
அகம்வேறு பட்டநரிக் கண்ணன் அங்கே
அழைத்தபடி வந்துநின்றான்; வணக்கம் செய்தான்!
"இகழ்ச்சிமுடி பூண்டவனே என்செய் தாய்நீ?
இந்நாட்டு மன்னவனைப் பின்னி ருந்து
நகைபுரியக் கொலைசெய்தாய்; அடடே நாட்டின்
நங்கையினைத் தங்கையென்றும் பாராய்; கொன்றாய்.

நாடிழந்தாள்; நற்றந்தை, தாயி ழந்தாள்.
நலமிழந்தாள், கலமிழந்தாள்; கொடி பறந்த
வீடிழந்தாள்; புகழ்இழந்தாள்; ம