|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Selected
Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம்,
அவுஸ்திரேலியா
சுனாமி அனர்த்தமும் கொபி அனான் போக முடியாமல் போன தேசமும்
"ஞாயங்கள் என்ன சொல்கிறது? விழ விழ எழும் உறுதிகள் என்ன சொல்கிறது? பதியொடு படரா மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த அனர்தத்தால் மேலும் உறுதி கொண்டு நிற்கும் செயல்பாடுகள் எதைக் கூறுகின்றது? இன்றோ இந்த பிணைப்பில் புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறையும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளமை எதைக் காட்டுகிறது? இதுதான் தமிழ் தேசியம்... ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் நாயகத்தை நாம் வரவேற்க அந்த சபையில் தமிழர் தேசம் தொங்கிக்கொண்டு இருப்பதால் முடியாது. அவர் அடுத்தமுறை வரும்போது தமிழர் தாயகத்திற்கு வருவதை யாரும் தடுக்காது அவராக வரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும். அந்த வருகை அழிவைப் பார்வையிட அல்ல. அழிவில் இருந்து கட்டப்பட்ட ஆக்கத்தை பார்த்து வாழ்த்துவதாக இருக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் சங்கல்பமாகும். ஏனெனில்......
" இலட்சியத்தால் ஒன்றுபட்டஇ எழுச்சி கொண்ட மக்களை, எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது " தமிழ் ஈழ தேசிய தலைவர் திரு வே. பிரபாகரன். "
|
சுனாமி அனர்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், பாதிக்கப்பட்ட
மக்களையும் நேரில் பார்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்
கொபி அனான் இலங்கை தீவிற்கு வந்திருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட
பிரதேசங்கள் எல்லாவற்றையும் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரையும் பார்க்க
முடியாமல் ஏமாற்றத்துடன் அவர் திரும்பியுள்ளார். இவரால் சுதந்திரமாக
முடிவு எடுக்க முடியவில்லை. இவருக்கு அந்த வாய்ப்பைத் தமிழ் மக்கள்தான்
ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற உண்மையையும் இவர்
விட்டுச்சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும், மக்களையும் பார்க்கும் வழியில் இவற்றையும் கொபி அனான் பார்த்து விடுவார் என்ற பயம் சிங்களதேசத்தை பற்றியுள்ளது. அந்த பயத்தால் சிங்கள அரசும்இ சிங்கள பத்திரிகையாளர்களும் ஒருவரையொருவர் கட்டிதழுவுகின்றனர். இயற்கையின் அனர்தத்தை எவ்வாறு சிங்கள தேசமும் தமிழர் தேசமும் இதுவரை
அணுகியுள்ளனர் என்பதை இன்று சர்வதேச சமூகம் அறிந்துகொண்டுள்ளது. விழ விழ எழும் உறுதிகள் என்ன சொல்கிறது? பதியொடு படரா மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த
அனர்தத்தால் மேலும் உறுதி கொண்டு நிற்கும் செயல்பாடுகள் எதைக்
கூறுகின்றது?
|