தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home   > Tamil National ForumArugan - Italy > வழுக்கி விட்டவாழ்க்கைகளின் வார்த்தைகள்

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM
Selected Writings
- அருகன் (இத்தாலி)

வழுக்கி விட்டவாழ்க்கைகளின் வார்த்தைகள்

12 June 2006


அதிகாலை அழகாகத்ததான் மலர்கிறது
ஆதவனும் அமைதியாத்தான் ஆதிக்கம் செலுத்துகின்றான்
அற்புதமும் ஆனந்தமும் நிறைந்த காலைப்பொழுதில்
கண்களின் கதவுகளைத்திறந்து என்னையே பார்த்தேன்
அனத்துலகும் அழகாய் இருந்த போதும்
படுபாவி நான்மட்டும் அழுக்குhய் இருந்தேன்

புழுதிபட்டுப் பழுதான இடத்தையெல்லாம் தூசிதட்டும்
துடைப்பானால் என்னைப் பாசி தட்டினேன்
துடைப்பான் என்னிலும் அதிகம் அழுக்கானது
நான் கொஞ்சங்கூடத் தூய்மையாகவில்லை

கறைநீக்கி குறைதீர்க்கும் புனலால்
என் சுமை தீர்க்க என்னை நீராட்டினேன்
என்மீது பட்டபின் அவை சேறாய் வழிந்தோடின
என் தேகத்தீட்டு தேக்கத்திலே நின்றது

ஓடினேன் தேடினேன் என்கறைபோக்க வேண்டினேன்
என்கறையிலும் பார்க்க அதிகம் கறை அனைவரிலும் படிந்திருந்தது
யாரை கேட்பேன் துணையாய் தூபங்காட்ட
பாரை கேட்டேன் அது எனைப்பார்த்து ஏழனஞ்செய்தது

கதறிக் கதறிக் கண்ணீர்விட்டேன்
கண்ணீரிலும் கலங்கம் தெரிந்தது
பெரும் பாரத்தால் மூச்சு விட்டேன்
அந்த சீற்றத்திலும் நாற்றம் தெரிந்தது

நடந்து சென்று கடந்தபின் திரும்பிப்பார்த்தேன்
கடந்தபாதையில் எல்லாம் படிந்த பாசிதெரிந்தது
வருடிச்சென்ற விரல்களின் தடையம் பார்த்தேன்
கருகிவிட்ட சருகுகளின் வர்ணம் தெரிந்தது???

ஓ... நான் வழுக்கி விட்டேன்!!!.


 

Mail Us up- truth is a pathless land - Home