தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil  MusicPapanasam Sivan > Songs 1.1-1.101> Songs 2.1 - 2.100 > Songs 3.1 - 3.101 > Songs 4.1 - 4.101

Papanasam Sivan - Songs


1.1. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
உண்டு குலதெய்வராமன் நமக்குண்டு
உயிர் யாவும் புரக்கும் ஐயன் (உண்டு)
அனுபல்லவி
தொண்டு செய்து ராமராமவென்று
துதிப்போர் குடி தாங்கும் கருணை நிதி (உண்டு)
சரணம்
பண்டு பொறுக் கொணாப்பிழை பொறுத்துக்
கொண்டு சரணமென்று கதறிய
மிண்டன் காகாஸ¤ரனுக்கு அருள்
கோதண்ட பாணி எனும் தீனசரண்யன் (உண்டு)

1.2. ராகம் தோடி தாளம் மிச்ர ஏகம்
பல்லவி
கங்கையணி செஞ்சடையானைக்-கண்டுகளியாத
கண்படைத்து மென்பயன்பெற்றாய்-பேதை நெஞ்சமே (கங்கை)

அனுபல்லவி
செங்கமலச் சேவடியும் செங்கை வரதாபயமும்
செம்பவளவாயும் தயை சிந்து மருட்கண்ணுந்திகழ் (கங்கை)

சரணம்
கொங்கைகுலுக்கி வெவ்விடக் கண்கள் சுழற்றி மஞ்சளா
லங்கம்னுக் கித்திரிய மங்கையர் மயக்கில்
உழன்றங்க வர்தமல் குற்றடப் புன்குழியில் வீழ்ந்தவமே
கங்குல் பகலும் சுழலும் மங்கு தொழில் விட்டுமதி (கங்கை)

செங்கமலை நீலோத்பல மங்கை உருவவொரு
சிங்கவணை மேயவனை கங்குலிடை அன்பர் பொருட்டு
இங்கிதமாய்ப் பண்புரைத்த துங்கவிடை வாஹனனை
அங்கஜனுடல் அழியக் கண்கனலைச் சிந்தும்மதி (கங்கை)

வாஸவனஹந்தையினால் மோசமுறவன்பு செயும்
ராஜன் முசுகுந்தனுடன் காசினியில் வந்தவனைத்
தேசம் புகழாருர் நகர் வாஸனை ஈசனை ராம
தாஸன் பணியும் ஸ்ரீத்யாகராஜனை மெய்யன்புடனே (கங்கை)

1.3. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
கடைக்கண் நோக்கி காவாதது மேனோ.
கருணாகரனே. ஹரனே. கபாலி நின்

அனுபல்லவி
அடைக்கலம் என்று அடியேன் உனை நம்பி
அலறுவது உன் செவி புகவிலையோ கருணைக் (கடைக்)

சரணம்
ஆவா வறுமை எனும் பாவி எனைப் பிடித்து
ஆட்டி தினம் தினமும் வாட்டி உயிர் வளர்க்கத்
தேவா யாவரேனும் காவாருண்டோ சீ என்றெங்கும்
திரியச் செய்ததன்றி யான் புரியும் பிழை ஏதையா (கடைக்)

மயிலாய் உனை பூஜித்த சயிலேந்திரன் புதல்வி
மாதா கற்பகாம்பிகை நாதா. கடற்கரையின்
மயிலாபுரிக்கிறைவா. கயிலாசத்துறைவோய்.
மகிமை குறைந்திடுமோ? தகுமோ? அகதியென்னைக்(கடைக்)

தொல்லைத் துன்பங்களுக்கோர் எல்லையின்றி எந்நாளும்
சோதனை செய்தால் நாஸதிவாதிகள் நகையாரோ
கல்லோ உனது மனம்? கல்லும் கரைய நின் முன்
கதறும் ராமதாஸனை உதறித் தளாமல் அருட்(கடைக்)

1.4. ராகம் தோடி தாளம் தேசாதி

பல்லவி
கலி தீருமோ கருணை வருமோ
கலியுக தைவதமே எனது (கலி தீருமோ)

அனுபல்லவி
பல கோடி ஜன்மம் எடுத்தே இளைத்தேன்
பாவிக்கிது போதாதோ இன்னும் வாதோ என்றன்(கலி தீருமோ)

சரணம்
பன்னிரு கையனே ஆறுமுகையனே
பங்கஜ நயனன் மருகய்யனே
என்னிரு கண்ணே முருகையனே மெய்யனே
இன்னும் சோதனையோ ஸ¥ரர் கோவே என்றன்(கலி தீருமோ)

1.5. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
கார்த்திகேய காங்கேய கெளரீ தனய
கருணாலய அருள் திருக் (கார்த்தி)

அனுபல்லவி
சீர்த்திமேய தென்பரங்குன்று திருச்
செந்தில் பழனி ஸவாமிமலை மேலும் வளர் (கார்த்தி)

சரணம்
குன்றுதோறும் அழகர் கோயில் தனிலும்
குஞ்ஜரியும் குறக்கொடியும் தழுவுதிண்
குன்றம் அனைய ஈராறு தோள்களோடு
குஞ்ஜரமென உலவும் சரவணபவ (கார்த்தி)

மால்மருக ஷண்முக முருக குஹா
மகபதியும் விதியும் தொழும்
மாதங்க வதன ஸஹோதர அழகா
வேல் மருவும் அமலகர கமலா
குறுனகை தவிழ் ஆறுமுகா
விரைவுகொள் மயூரபரி
மேல்வரு குமரா சூரறு ஸமரக் (கார்த்தி)

காமரிபுவின் அபிராம சுத நின் திரு
நாமம் மறவேன் குறை தாமதமின்றித் தவிர்
கலியுக தேவதையே - திருவடி
கைதொழுவார் நிதியே - அடிமையின்
காமம் முதல் பகைவரைச் சிதைத்துக்
கடாக்ஷ¢ ஷடக்ஷர ராமதாஸன் தொழும் (கார்த்தி)

1.6. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
குன்றம் குடி கொண்ட வேலவா
குன்றமாது மருவு பரம் (குன்றம்)

அனுபல்லவி
மன்றம் குலவிய நடனசிகா
மணி புதல்வனே மயில்மிசை வரும் திருப்பரம் (குன்றம்)

சரணம்
உன்றன் புகழ் கனவிலும் ஒரு கணமும்
மறந்திருந்து அறியேனே
உன்றன் கருணை சிறிதும் வரவிலையே
என்றன் துயர் சிறிதும் ஒழியவிலை
இறைவனே அருமறை ஒலி மிகு திருப்பரம் (குன்றம்)

1.7. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
தாமஸம் ஏன் ஸவாமி தமியேனுக்கருள் செய்ய
தாரகம் வேறு யாரய்ய ஸவாமிநாதா (தாமஸம்)

அனுபல்லவி
பூமி மணவாளனும் பூவில் வளர் அயனும்
புரந்தரனும் பணி அரவிந்தச் சரண் பணிந்தும் (தாமஸம்)

சரணம்
பாவையர் மையல் மேவி பஞ்சுபடு
பாடு பட்டு மதி கேடு அடைந்து-மா
பாவ வினை உடல் மேவி நின் அருள்
பற்றிழந்து இதயம் நொந்ததே
ஆவலோடு உன் அருள் மேவ வென்று மனம்
ஆசை கொண்டு மிக வாடுதே
சாவலோடு கதிர் வேலணிந்து என் உளம்
சால மகிழ மயில் மேலில் வர இன்னமும் (தாமஸம்)

போதும் போதும் இந்தப் புழு மலப் பிறவி
போதும் போதும் அரி பிரமன் வாழ்வும் இனி
போதும் உன் திரு விளையாட்டும் அன்னை கரு
வாஸம் எனது திண்டாட்டம்
ஏது இனிமேல் பொறுக்க முடி-
யாது கருணை புரியாது என்னுடனே இவ்-
வாது உனக்கு உதவாது ஸொகுஸ¤டனே
மாது இருவர் மருவும் மால்மருகனே இன்னும் (தாமஸம்)

சந்த்ர பிம்பமுகம் ஆறும் ஆறிரு
கடாக்ஷமும் வரை மார்பமும் மிளிர்
சக்தியும் அபய வரத அங்கைகளும்
சரண அம்புஜமும் காணவென்
பந்தம் நீறுபட வந்து காட்சியது
தந்தருள் பரமன் மைந்தனே
சந்தம் இலது எனினும் ராமதாஸன் கவி
சொந்தமெனவே செவியேற்கும் குஹனே இன்னும் (தாமஸம்)

1.8. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
தேவி பாதம் பணிந்தேன் - அனவரதம் வரதே பர (தேவி)

அனுபல்லவி
காவியார் நிலங்கள் சூழும் நாகைக்
காயரோஹணெசன் நேயமொடு மகிழ் தூயவடிவு கொள் (தேவி)

சரணம்
ஆர் துணைப்பாரம்பா இந்த உலகினில் -
ஆதரவாய் உனது அடியவரலதனைப்
பார்ப்பவர் எவர் பசி தீர்ப்பவர் எவர் கொடும்
பாவி என்று நீயும் தள்ளி விடாதே
பாதி மதி நன்முடி மீதில் ஒளிரவணி
பார்வதி அடியவர் ஆர்வமொடு பணியும்
பாத மலரை ஒரு போதும் இதய
மறவாத வரமருள் புராரி யிடமமரும் (தேவி)

1.9 ராகம் தோடி தாளம் ஆதி
(ஸம்ஸருதம்)

பல்லவி
பதித பாவன ராம பசுபதினுத நாம
பரிபூர்ண ஸத்ய காம பரம் ஜோதி பரந்தாம

பங்கஜோபம சரண பக்தாபீஷட விதரண
சங்கட ராசிஹரண ஸம்ஸாரார்ணவோத்தரண

ஸாமஜாபயதாயக ஸர்வ புவன நாயக
ராம ஸாகேத நாயக ராமதாஸ ஹருன்னாயக

1.10. ராகம் தோடி தாளம் ருபகம்

பல்லவி
ராஜகோபால தேவாதி தேவனே ஸ்ரீ (ராஜகோபால)

அனுபல்லவி
ஸ்ரீ ஜகதீச ஜகமெல்லாம் ஈன்ற
செங்கமல நாயகி மருவும் மணவாள (ராஜகோபால)

சரணம்
தேவர்கள் பணிந்து என்றும் வசித்திடும்
தக்ஷ¢ண த்வாரகை என்று புகழ் பெறும்
பாவன சம்பகாரண்ய புர வாஸ
பாலகோபால பக்தமனோ ஹம்ஸ - நின்
சேவை ஒருதரமே - செய்தால்
ஆதரித்தாளும் ராமதாஸன் பணிந்திடும் (ராஜகோபால)

1.11. ராகம் தன்யாஸி தாளம் த்ரிபுடை

பல்லவி
திருவழுந்தூர் வாழ் மாதவா - ஸ்ரீ வாஸ¤தேவா (திருவழு)

அனுபல்லவி
பரிவாய் ரங்கநாயகி மருவும் ஜகன்னாயக
பரிவாய் ரங்கநாத ஸரஸிஜ மலர்ப்பாதா (திருவழு)

சரணம்
கலியின் கொடுமையால் நின் கருணைத் திறம் மறந்து
கலக விழியார் காமக் கடல் வீழ்வேனை ஆட்கொள்ளு
உலகு புகழ் காவேரி - நதியின் வட பால் ஈரேழ்
உலகை அளந்து வெண்ணை உண்டு தொண்டர் பரவத் (திருவழு)

1.12. ராகம் தன்யாஸி தாளம் ஆதி

பல்லவி
மரியாதை தானோ அய்யனே -தேவாதி தேவ இது (மரியா)

அனுபல்லவி
தெரியாத பருவத்தே திருப்பாதம் தனைக் காட்டித்
திரையால் உருமயக்கித் தெருவில் திரியவிடுவதும் உனது (மரியா)

சரணம்
பிறவிக் கடலில் அமிழ்ந்து அழும் தருணமதில்
பிரமன் மால் பரவும் நின் திருனாம சுவை கண்டும்
பிறவிடைய மயக்கால் பிணி கொண்ட பிண நெஞ்சால்
பிறவிக் குருடன் கண் பெற்றிழந்தால் என மன முழல விடுதல் (மரியா)

இளம் சேய் மறந்திடினும் ஈன்றாள் மறப்பதுண்டொ
எளியோர் ஆயினும் பிச்சை எடுத்தும் பாலித்திடாரோ
பளிங்கிமொளி போல் தன்னுள் பல பூதங்கள் தோற்றப்
பரதத்வமான பரம் பொருளே தந்தையே நின் விந்தை இது (மரியா)

இனிமேல் முடியாது இந்த இருளில் புலம்பி அழ
இறக்கமில்லையோ ஐயோ இனி என் செய்வேன் ஈதென்ன
அனியாயமோ அமரா பெருமானே பிறவி தீர்த்து
அருள் வாரயோ எந்தன் அப்பனே பவப்பிணி பிணித்திடுதல் (மரியா)

1.13. ராகம் புன்னாக வராளி தாளம் ஆதி

பல்லவி
உன் பாதமே சரணமல்லால் உறுதுணையிலை இறைவனே (உன்)

அனுபல்லவி
என்பாதகம் தொலைத்து இன்பங்கொடுக்க ஆதி
கும்பேசா உன் போல் க்ருபை
கொண்டோர்கள் கண்டிலேன் இங்குன்....

சரணம்
சீரார் குடந்தை நகர் வாஸா
திருவும் பணியென்ன என்னை
ஸ்ரீ மங்கள நாயகி நேசா
வாராய் என் துயர் யாவும் தீராய்
க்ருபைக் கடைக்கண்
பாராய் அன்பரோடென்னை நேராய்
வைத்தருள் புரி (உன்)

சிந்தை விழி குளிரச்செய்யும்
திருவடி முடி யளவு
மணிந்த நவமணிப் பணியும்

1.14. ராகம் புன்னாக்வராளி தாளம் ஆதி

பல்லவி
¢வகங்கா நகர நிவாஸினி - ஸ்ரீராஜராஜேவரி மாமவ

சரணம்
அபயவரதே அம்ப மாயே நிக -
மாகணித விபவே - பரமிவ ஜாயே

வதனருசி விஜித கமலே - உபய
பார்வவிராஜித வாணீ கமலே

ஸதா ராம தாஸனுதே ரணா-கத
ஜன பாலன சண¤பசரிதே

1.15. ராகம் மாயாமாளவகெளள தாளம் ருபகம்

பல்லவி பதமலரே கதியென நம்பினேனய்யா - நின்

அனுபல்லவி
சதமலவே நிதமுறுதுயர் பலவே - தரணியில்
தனஜனகன மெனுமொடும்
உறவு கனவு நிகருமெனும் நினைவொடு வனஜ (பத)

சரணம்
தவமறியேன் ஞான் அனுபவமறியேன்
வேதாந்ததத்துவமறியேன்
பக்தியின் இலக்கணமறியேன்
மெத்தக்கை தவமுடையேன் பேராணவமுடையேன்
ஆயினும் நின்னாதரவு தந்தருளி
என்றனுக்காதரவு தீர்த்தருளு முர்த்தியென்றுன் (பத)

1.16. ராகம் பரசு தாளம் ஆதி

பல்லவி
அடிமலரிணையல்லால் மருகதி அவனியில் அறியேனே

அனுபல்லவி
இடருறும் பவமெனும் கடலிடைப் படுமுழு
மடையினை ஈசா நீ கைவிட நினையாதே உனதுதிரு(வடி)

சரணம்
அஞ்சுபல வேடராற்றுஞ்சு நெஞ்சாலிப்பிர
பஞ்சமிதில் மிஞ்சியது சஞ்சலமே சம்புவே
கஞ்சனெழுத்தின் உன் கொடும் சினமொடு வரும்
வெஞ்சமதூதருக்கு அஞ்சினேனுக்கு உனது திரு (வடி)

1.17. ராகம் ஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
கல்லாத ஏழையல்லவோ-எவ்வாறு உன்றன்
கருணை பெறுவேன் சொல்லம்மா (கல்லாத)

அனுபல்லவி
கொல்லாத மா தவம்
கொண்டோர் தொழும் நின்றிருக்
கோமளச் சேவடித்
தாமரையில்-மடமந-மடங்கவே (கல்லாத)

சரணம்
பொய்யன் கொலை செய்யும் குடிகேடன்
புன்மொழியாடி பெரும் களவாடி
வெய்யன் கொடியன் குடியன் கேடி
விடர்களில் முன்னாடி
மெய் அன்பு என்பது சிறிதும் இல்லாத
வேடமிட்ட ஆஷாடபூதி என

வையகத்துள்ளோர் வசைமொழி சொல்ல
மாதேவி நின்னுள்ளமும் எனையெள்ள
வருத்தமுறுபவ பந்தமுனோய்களும்
தரித்திரமும் மனவன்மை அழிக்கக்
கருத்தின் ப்ரிபுர நிர்மலபத
கமலங்களை என்-மலங்கெட-வணங்கிடக் (கல்லாத)

1.18. ராகம் பூபாளம் தாளம் ஆதி

பல்லவி
தினமீதே நற்றினமே சிவபரனை
பஜனை செய்யும் (தின)

அனுபல்லவி
கனமோக இருள்சூழும் பவசாஹரத்தைத் தாண்டிக்
கரைசேர்விக்கும் அரன் அருளைப் புகழ்ந்து பாடும் (தின)

சரணம்
பகலும் இரவும் வயிற்றிரை தேடவும் காமப்
பசி தீர்க்கவும் திரிந்து இளைத்தோம் பாரினில் அற்ப
சுகத்தில் களித்தும் பெரும் துயரிற்றிளைத்தும் அரனைத்
தொழவும் மறந்து பாழுக்கிறைத்து என்ன
-பேறுபெற்றோம் (தின)

1.19. ராகம் கெளளை தாளம் ஆதி

பல்லவி
மருந்தளித்தருள்-வாய்-என்றன்
மதன ரோகமற-எனக்கு-ஒருதிரு (மருந்தளி)

அனுபல்லவி
வருந்துமன்பர்-மனமும்-வாழ்வும்
மதுரிக்க உருப்பெற்றவனே ஒரு (மருந்தளி)

சரணம்
புரந்தரனும் முகுந்தனும் திசைமுகனும்
போற்றிசெயப் புள்ளிருக்கும் வேளுர்
பொருந்திவாழ் மயிலூர்தியை ஈன்ற
புண்ணியனே முக்கண்ணுடையா ஒரு (மருந்தளி)

மலையை காமுகமாக்கியவா ஒரு
மலைமாதொரு பாகம் மருவ வெள்ளி
மலைவாழ் மாதேவா எனது மன
மலையைக் கனியச் செய்யுமாறு ஒருதிரு (மருந்தளி)

காமதாசர்கட்கு அரியவ எனதுடல்
காமனோய்க்கு இரையாகியதே
ராமதாஸனுக்கினியவ அமரா
ராதிதனே வைத்ய நாதனே ஒரு (மருந்தளி)

1.20. ராகம் சக்ரவாகம் தாளம் ருபகம்

பல்லவி
ஈசனே இந்த ஏழைக்கிரங்க இன்னும் தாமஸமா
ஸமான ரஹிதனான (ஈசனே)

அனுபல்லவி
ஸ்ரீ சிதம்பர வாஸனே ஜகதீசனே
கனக ஸபேசனே நடராஜனே (ஈசனே)

சரணம்
ஈ எறும்போடு மனிதனீறா
யெடுத்த பிறைவிக்களவுமிலையே
ஓய்வில்லாமல் ஊணுறக்கத்திற்கு
உழைக்கும் கவலை ஒழியவிலையே
மாயமண்ணிலும் பெண்ணிலும் பொன்னிலும்
வளரும் ஆசை ஒழியவில்லையே (ஈசனே)

காயுமறலிதூதர் வந்தால் மனக்
கலக்கம் அற்றிருக்க வழியுமிலையே
காமனை எரித்த விழியோய்.
காலனை உதைத்த கழலோய்.
ஸொமனை அணிந்த முடியோய்.
ஸ¤ந்தரனடமிடும் குஞ்ஜிதபத (ஈசனே)

1.21. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
தாயே ஏழைபால் தயை செய்வையே
தயாபரி சங்கரி - சகல லோக நாயகி (தாயே)

அனுபல்லவி
நாயேனுன் பாலன்றி எங்கே செல்வேன்
நளின ம்ருதுள ஸ¤குமார மனோஹர
சரணயுகள மருளத் தருணமிதுவே என் (தாயே)

சரணம்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசைக் கோட்டை கட்டி
புண்ணாக நெஞ்ஜம் புலம்பும் மடம்
போதும் இனி முடியாது உனதடிப்
போது அடைய இது போது வரம் அருளித் (தாயே)

1.22. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
நீ கதியலது வேரில்லை கண்டாய்-நீரஜ நயன

அனுபல்லவி
ஸாகரசுதை உறை திருமார்பா-ஸரஸிஜ ம்ருதுபதயுக
ஸ்ரீகர மனஸிஜ ஸமருபா-ஹருதஸ¤ஜன பரிதாப (நீ)

சரணம்
பாரினில் நரவுருவோடு பிறந்தும்
பயன் எதுவும் அடையவில்லை
பாமரனதிகாமுகன் மா பாதகன் காண்
ஆரும் அவனியில் எனக்கு நிகரார்
அறிவிலி எனக்கு நீ அருளாதது
தகாது யாதவ குல பாலக
பவதாரக சுகதாயக (நீ)

1.23. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீஷண்முகம் ஸ¤முகம் பாவயே
ச்ருத ஜனார்த்தி பஞ்ஜனம் நிரஞ்ஜனம் (ஸ்ரீ ஷண்)

அனுபல்லவி
ஈஷணார்த்ரய விவர்ஜிதாமல - ம-
நீஷமனோ கேஹம் குஹம் அன்வஹம் (ஸ்ரீ ஷண்)

சரணம்
வள்ளி தேவஸேனா ஹருத்தயிதம்
வரதந்திமுகா வரஜம் வரதம்
புல்லாரவிந்த தளத்ருசம் அஸத்ருசம்
பூதர துஹித்ரு ஸ¤தம் சிவ ஸ¤தம்

பூமபல ஸ¤ரதாரக காலம்
புவிஜதிவிஜ பயஹரண ஸ¤சீலம்
புஜகராஜ ஸன்னிபைரவி நிப
ப்ரஹரணோஜவல புஜை க்ருதலீலம் (ஸ்ரீ ஷண்)

1.24. ராகம் முகாரி தாளம் தேசாதி

பல்லவி
அளவில்லையே நீலாயதாக்ஷ¢
அடிமையிடம் வாதா போதாதா பட்ட துயர் (அள)

அனுபல்லவி
உளமிறங்கி அன்பர்க்கு உதவும் அருள் வெள்ளம்
என்று உலகு புகழ் தாயே உனதடியேன்
படு துயர்களு நோய்களும் (அள)

சரணம்
பதமே கதியென நம்பி வந்தும்
பவ நோய் மிகுந்தால் நின்பெருமைக் கழலோ
நிதமும் உடை தாரும் உண்டி தாரும் என்று
நீசரிடம் சென்று யாசகத்திற்கு நின்றது (அள)

1.25. ராகம் முகாரி தாளம் ஜம்பை

பல்லவி
எந்த விதமும் உந்தனருள் வந்திடுமையே-எனக்(கெந்த)

அனுபல்லவி
ஸந்ததமும் உந்தனடி சிந்தனை செய்யாதவென(கெந்த)

சரணம்
மனமத கரியைவென்று மலரடியில் நிலை நின்று
உனது பெருமை புகழ்ந்து உலகசுகமதி நொந்து
நினைவினோடு கனவினுலும் நின் நாமம் மறவாத
அனககுவணர்க் கலாது அன்பிலாதவெனக்(கெந்த)

1.26. ராகம் முகாரி தாளம் ஆதி

பாப்பா கண்ணி
சொல்லு பாப்பா. சொல்லு பாப்பா.
ஸ¤ப்ரமண்யம் என்று சொல்லு பாப்பா.
அல்லும் பகலும் நமதல்லற்பிணி ஒழிய
அமுதன் பெயரை முலையமுதருந்தும் நாள் முதல் (சொ)

நில்லு பாப்பா. நில்லு பாப்பா.
நீதி நெறியில் நிலை நில்லு பாப்பா.
தில்லையாடி புதல்வன் வல்லியம் மையோடெழில்
தெய்வயானையும் புல்லும் செல்வன் திருவடியில் (நில்லு)

கொல்லு பாப்பா. கொல்லு பாப்பா.
கொடிய காமனை குல்லு பாப்பா.
கல்லினுள்ளும் புகுவான் காற்றிற்கடு நடையான்
கள்வனையே முளையிற் கிள்ளி எறிந்தவனை (கொ)

ஆரு பாப்பா. ஆரு பாப்பா.
ஆறுமுகவன் இவன் ஆரு பாப்பா.
வேரி மலர்ப் பதமும் வேலும் அயிலும் மின்ன
வெற்றி மயிலான் நிகர் அற்ற அழகன் இவன் (ஆரு)

பாரு பாப்பா. பாரு பாப்பா.
பவப்பசி தீர நின்று பாரு பாப்பா.
போரு மலைந்து கானல் நீரை அருந்தி தாகம்
தீருமோ மெல்லடியில் சோரி வருமே வேண்டாம் (பா)

ஆடு பாப்பா. ஆடு பாப்பா.
அவனும் நீயுமாய் விளையாடு பாப்பா.
கூடிப் பிரியான் குகன் கோழிக் கொடியுடையான்
வீடு தருவான் தனி வெட்ட வெளியில் குதித்(தாடு)

1.27. ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

பல்லவி
சிங்காரவேலன் வந்தான் எந்தனை யாள
சிங்காரவேலன் வந்தான் (சிங்கார)

அனுபல்லவி
பொங்காதரவோடு மடங்கா மகிழ்வோடும்
பொ-ருங்காதலோடும் அய்யன் தங்கும் மயிலினியடை
துங்கவடிவினொடு (சிங்கார)

சரணம்
ஸகந்தன் பணியும் அன்பர் ஸொந்தன் கருணை கொள்
மு-குந்தன் மருகன் முருகன்
முந்தன் வினை பயந்த பந்தந்தொலைத் தருளை
இந்தா இந்தா என்று ஏழை குடிமுழுதும் வாழ
அருள்புரிய (சிங்கார)

1.28. ராகம் ஆனந்த பைரவி தாளம் ருபகம்

பல்லவி
நினை மனமே ஸகந்தனை
நினை மனமே என்றும் (நினை)

அனுபல்லவி
தனையே நிகரிலனா யொளிர்
அனை நேர் தயை உடையான் தனை (நினை)

சரணம்
அறம் தானமும் துறந்தாய் தவம்
மறந்தாய் நீ ஏன் பிறந்தாய்
அறிவும் பொருள் நிறைவும் பர
நெறியும் பெற முருகன் தனை (நினை)

சிட்டஸவர ஸாகித்யம்
ஐந்தலையன் தரு மைந்தனை ஆறுதலைப் பரமன் தனை
ஐந்தற நினைந்தவர்க்க பயந்தருபதாரவிந்தனை
(நினை).. மனையே தரண்மனையே தனை
தந்தையா ரேமாந்தனையே
வின்னையால்விளை வேதனையே பவ யாதனையே
பெரும் சோதனையே
வெயிலேறி அயில்பயில் புயமொடு மயிலிலுலவும் அழகன்
கயிலையானு மயனுமாலும் கருதுமடிகொள் சுருதிமுடிவை

கணனாத நற்றுணைவன் வரகுண ஸ¤ந்தர தீரன்
ரணரங்க வாரண கேசரி ரமணீய குமாரன்
ராமதாஸனுக்கிறங்கி வந்தருள் தரும் ப்ரபாவன்
தாமதம் செய்யாமலச்சிங்காரகம் பீர ஒய்யாரனை(நினை)

1.29. ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

பல்லவி
வானோர் வணங்கு மனையே-பஜிக்க அருள்
வாக்குத் தந்தாள் என்றனையே மனமிரங்கி (வானோர்)

அனுபல்லவி
கானம் செய்து உன் அருள் ஸம்மானம் விழையும் இந்த
தீனன் எனதபீஷட-தானம் செய்தருள் வந்து (வானோர்)

சரணம்
வாணீ மணமலர்க்கொள் வேணீ குயில் பழிக்கும்
வாணீ மஞ்ஜுள சுக பாணீ சதுர்முகன் தன்
ராணீ நயனமதி லேணீ ஸமானையாம் கல்-
யாணீ வேதபுஸதக பாணீ இந்திரன் முதல் (வானோர்)

தேனும் கசக்க வீணா கானம் செய்யும் ஞான-வி
ஞான தன சுக நிதானி அன்னவாகனி
நானினத்தில் நீ தரும் ஞானக் கண்ணாலல திவ்
வூனக்கண்ணால் மனிதர்க் கான பயன் உளதோ (வானோர்)

அம்பா அகிலஜக தம்பா உனை இதயம்
நம்பாத உன்னருள் விரும்பாத எனது பெ-
ரும்பாதகம் தொலைக்கச் செம்பாகமாய்த் துதி தொ-
ழும்பார் ராமதாஸன் தொழும் பாவன சரித்ரி (வானோர்)

1.30. ராகம் ஹ¤ஸஸேனி தாளம் ஆதி

பல்லவி
வந்ததெல்லாம் வரட்டும் அந்த
கந்தன் க்ருபை மட்டும் இருக்கட்டும் (வந்த)

அனுபல்லவி
மந்த மனது பவ வினையுலுழன்று
எந்த வேளையிலும் வருந்தச் செய்யட்டுமன்றி (வந்த)

சரணம்
உலகமெல்லாம் நம்மை பழிக்கட்டும்-கன
ஊழ்வினையால் துயர் செழிக்கடும்
பல கவலைகளோடு சில நிமிஷம் முருகன்
பரமக்ருபையை நினைந்துருகி பஜனை செய்வோம் (வந்த)

1.31. ராகம் கீரவாணி தாளம் த்ரிபுடை

பல்லவி
நீ அருள் புரிய வேண்டும் எனதன்னையே.- நீலாயதாக்ஷ¢.
நீ அருள் புரிய வேண்டும் எனதன்னையே. (நீ)

அனுபல்லவி
காயும் வெவ்வினை நோயும் எல்லையில்
கவலையும் நிறைந்த அவலப் பிறப்பற (நீ)

சரணம்
சீலமிலன் அறம் செய்திலன் என்றுளம்
சினந்து கருவிழி சிவந்துடல் பிளந்து
காலன் உயிர் கவர் வேளையில் உனது
கமலப் பதம் மறவாத வரமதை (நீ)

முளை சுழல ஐயறிவு சிதறவும்
மோஹ அழல் வளர்ந்தாகமதை உயிர்
தாள வகையிலதாக உயிருடன்
தஹிப்பதை கடைக்கண் மழைத்துளி தணிக்க (நீ)

தரையில் ஸகல மாதரையும் எனையீன்ற
தாயென மதித்துத் தொழவும் திசை திசை
திரியும் மன மதக் கரியை அடக்கி உன்
திருவடித் தறியில் பிணிக்கவும் சிறிது (நீ)

1.32. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
பராமுகமேனையா அடிமையின் (பராமுக)

அனுபல்லவி
அராவணை துயிலும் முராரி பணி-திரி
புராரியே அருள் தராமலின்னும் (பராமுக)

சரணம்
தாரணியில் பிறவாவரம் அர்ளும்
காரண விராட் புருஷனதுமுலா
தார§க்ஷத்ரமெனும் திருவாருரானே
ராமதாஸன் பணிஹரனே (பராமுக)

1.33. ராகம் கஹரப்ரியா தாளம் ருபகம்

பல்லவி
ஸ்ரீநிவாஸ தவ சரணெள
சிந்தயாமி ஸந்ததம் (ஸ்ரீநிவாஸ)

அனுபல்லவி
தீன ஜனாவன துரீண ஸ்ரீவேங்கடகிரி ரமண (ஸ்ரீநிவாஸ)

சரணம்
கமலஜா மனோஹர ஸ்ரீகரகருணா ஜலதர நத
சமலதமோ பாஸகரசுரேச ராமதாசனுத (ஸ்ரீநிவாஸ)

1.34. ராகம் ரீதிகெளளை தாளம் ஆதி

பல்லவி
தத்வமறியத் தரமா-முலா
தார கணபதியே ஸ¤ரபதே உனது (தத்வ)

அனுபல்லவி
ஸத்வகுணமும் ஜீவதயையும்-ஞானமும்
சற்றுமிலாத கிரானுக்குளது (தத்வ)

சரணம்
மதுர பரிபூர்ண மோதக கரனே
மஹா விக்ன வனகுடார வரனே
நிதியொன்பதும் அன்பர்க்கருள் பரனே
நிகில சராசர பீஜாகுரனே
மதிசேகரன் மகனே ஸ¤முகனே
மத வாரண முகனே
ச்ருதி முடிவிணர்வரு சித்ர பரனே-குஹ
ஸோதரனே ராமதாஸக்குனது (தத்வ)

1.35. ராகம் ரீதிகெளளை தாளம் ருபகம்

பல்லவி
மலரிணை துணையே மஹாதேவ நின் சரண (மலர்)

அனுபல்லவி
அலகில்ஸகல உலகவகையும் அமரரும் அன்பர்க்குழாமும்
அலரயனும் முராரியும் புரந்தரனும் பணிந்திடும் ப (மலர்)

சரணம்
திருமாலயனறியாத திருவடிமுடி காணவன்று
திருவாருரன்பர் பொருட்டுவங்கொண்டு
திருவீதிதனில் நடந்தோர் தெரிவையிடம் பண்பெனனச்
சென்றவனே நீலோத்பல மாது மருவந்த்யாகேசனே
சிங்காதன நாயகா புஜங்கபரணா வீதி விடங்கா
ராமதாஸன் உளங்காதல் கொண்ட திருவடி (மலர்)

1.36. ராகம் கானடா தாளம் ஆதி

பல்லவி
இன்பமென்பதிலையே உலகினில்
இன்பமென்பதிலையே உலகினில் (இன்ப)

அனுபல்லவி
இன்பமின்ப என நினைந்து பின் வரு
துன்பமிருமடம் கடைந்திடுவதல (தின்ப)

சரணம்
வாக்கு மனம் காயமெனும் முன்றிலும்
ஜாக்கிர ஸவப்ன ஸ¤ஷப்தியிலும்
சூக்கும காரண தூல முன்றிலும்
நீக்கமற உனது அன்பிலாமையால் (இன்ப)

ஆக்கை எடுத்தது முதல் உனதன்பர்
சேர்க்கை சிறிதுமிலையே
காக்கை விரும்பும் வேம்பே என் என்
நாக்கு விரும்பும் புன்மொழி யாதலின் (இன்ப)

ஈக்கும் ஒரு சிறிதுமீகிலேனறிவி-
னாய்க்கும் கடையானேன்
வாகினில் இன்பமிலை மனதிலன்புமிலை
பேய்க்குரங்கு போலுழலும் எனதுளத்து (இன்ப)

வித்துவான் பரம பத்தன் என
மெத்த வேடமிட்டதன்றி
சித்தம் உருகி விஷயத்தை வெறுத்துனைச்
சிந்தையில் கணமும் சிந்தியாமையா (இன்ப)

பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை உன
தருளிலார்க்கு அங்கிலை
இருளடைந்த நெஞ்ஜனேற்கய்ய இவ்
விரு வகையும் இலாமையால் இருமையிலும் (இன்ப)

வாஸவனோ மதனோவென எண்ணி
மனத்திருமாப்பிருவேன்
தாஸரினத்தில் சேர்த்தருள்வாய் ராம
தாஸன் தொழும் கைலாஸ வாஸனே (இன்ப)

1.37. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி

பல்லவி
கற்பகமே கடைக்கண் பாராய் (கற்ப)

அனுபல்லவி
சிற்பரயோகியர் சித்தர்கள் ஞானியர்
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
திருமகளும் கலைமகளும் பரவு திருமயிலைக் (கற்ப)

சரணம்
ஸத்து சிதானந்தமதாய் ஸகல
உயிர்க்குயிரயவள் நீ
தத்துவ மஸயாதி மஹாவாக்கிய
தத்பர வஸதுவும் நீ

ஸத்துவ குணமோடு பத்தி செய்பவர் பவ
தாபமும் பாபமும் அற இம்மையில் வர
ஸந்தான ஸெளபாக்ய ஸம்பத்தொடு
மறுமையில் நிரதிசய இன்பமும் தரும் (கற்ப)

1.38. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி
(சம்ஸருதம்)

பல்லவி
ஸாமஜ வர கமன-ஸாகேதாவாஸ (ஸாமஜ)

அனுபல்லவி
காம ஜனக கலிகலுஷ விபஞ்ஜன
நாமதேய ராமசந்த்ர மாமவ
கோடிமதன ஸமான ஸெளந்தர்ய
காமினி குலதிலக விதேஹாத்ம-
ஜா ஸெளதாமினியுத நீலாப்ருத்த ஞூலாவண்ய (ஸாமஜ)

சரணம்
தசரத சுத கோஸலதுஹித்ரு ஸ¤க்ருத
தரணி குலதிலக லக்ஷமண பூர்வஜ
குசிகதனுஜானுஸரண கின்னபத
குஹ சன்னுத கருணாரஸ ஜலதர (ஸாமஜ)

1.39. ராகம் ஸ்ரீராகம் தாளம் ஆதி
(சம்ஸருதம்)

பல்லவி
ராமம் பஜத மனுஜா.-ரவிகுல திலகம் ஸ்ரீ (ராமம்)

அனுபல்லவி
காமம்-கலிகலுஷ தளனசண
நாமம் கல ரஜனிசர நிகர
பீமம்-அபினவ ஜலதரஸ¤
ச்யாமம்- சகல சேதனாதமா (ராமம்)

சரணம்
தீரம்-ஜனகஜா ஹ¤தய ச்ருங்காரம்
பரிக்ருஹீத மனுஜாகாரம்
ஆச்ரித சஜஜனமந்தாரம்
அனு வாரம் வாரம்

1.40. ராகம் தர்பார் தாளம் ஆதி

பல்லவி
நாமமுறவு கொள்ளும் நரரும் வருந்தலானால் நின்
நாம வைபவம் குன்றாதோ (நாம)

அனுபல்லவி
பூமகள் கொழுனனும் நாமகள் கணவனும்
புகழ்ந்துரைக்கும் வைபவம் பொருந்தும் உனதுதிரு (நாம)

சரணம்
காசினியிலென்போல் ஏழை கண்டதுண்டோ, காமப்
பிசாசு பிடித்த சுத்த பித்தருண்டோ
ஈசனே உனக்கிரக்கம் வல்லையோ அன்பர் செய்
பாபனாசனில்லையோ உன்னை நம்பினவன்
ஆனல்லவோ (நாம)

1.41. ராகம் ஹிந்துஸதானி காபி தாளம் ஆதி
(சம்ஸருதம்)

பல்லவி
ராதா முககமல மது ரசிகம் (ராதா)

அனுபல்லவி
சேதோ பஜ ஸதா யதுத்லகம் (ராதா)

சரணம்
ஸாது ஜனாவன த்ருதசிசூபம்
ஸமரண மாத்ர ஹருத ஸம்ருதி தாபம் (ராதா)

மாயா ப்ரபஞ்ச நாடக ஸ¥த்ர தாரம்
வ்ரஜகோ தூளி தூஸரித சரீரம் (ராதா)

விதிமுக வினுதம் ச்ருதிபிரகணிதம்
ததி நவனீத ஸ¤ரபி வதனம் தம் (ராதா)

1.42. ராகம் ஹரிகாம்போதி தாளம் ருபகம்

பல்லவி
உண்டென்று உறுதி கொள்வாய் மனமே
தெய்வமொன்று (உண்டெ)

அனுபல்லவி
அண்ட பிண்டம் எதிலுனிறைந்து
அங்கும் இங்கும் தங்குமொருவன் (உண்டெ)

சரணம்
பலகோடி உயிரினங்கள்
படைத்தாட்டும் வித்தை காட்டி
பலகோடி ஸமயம் நாட்டிப் பல நாமருபமோடு
விளங்கும் ஒரே தெய்வம் (உண்டெ)

எம்மதத்தும் உண்மை உண்டு
அ·திலையேல் நிலை பெறுவதென்று
பன்மதங்கள் ஆய்ந்து தெய்வப்பழி
பொழிந்து விழித்தெழுந்து (உண்டெ)

காமனையும் ஏமனையும்
கடிந்து ஆலவாயில் வாழும்
சோமசேகரன் மீனாக்ஷ¢
ஸ¤ந்தரம் என்று உந