|
ஆகுமே நயன பாவ மபிநய முப்பத் தாறாம் தோகையே சமமாந் திர்ஷ்டி
தொகுத்தவா லோகி தக்கண் வேகமாஞ் சாசி யும்பி ராலோகி தக்கண்
மீது பாசஞ்சேர் நிமீலி தக்கண் பகருமுல் லோகி தக்கண் ...77 |
|
கண்ணவ லோகி தத்தோ டநுவிர்த்தந் துரிதக் கண்ணும் நண்ணுமே
நயனஞ் சூச னாதிஷ்டி யுக்கி ரக்கண் திண்ணிய தூர திஷ்டி சீர்காந்தைக் கண்ணி
னோடே உண்ணும்ப யாக கக்கண் ணுடன்கரு ணைக்கண் ணாமே.
|
...78 |
|
மேனிமூ டாம்ப கக்கண் மீதிலா மற்பு தக்கண் பானுநேர் வீரக்
கண்ணும் பகிர்ந்திடு விகற்பக் கண்ணும் தேனே விப்பி ராந்தக்கண் செப்பும்வி
ஷாணக் கண்ணும் மானேவிப் புலுதாக் கண்ணும் வளர்விதர்க் கிதாக்கண் ணாமே.
|
...79 |
|
ஆமேதீ னாக்கண் ணோடு மருள்திரஸ் தாக்கண் கிருஸ்து நேமமா
மிருட்டாக் கண்ணும் நீதிசேர் மலினி யென்னும் சேமமா லளிதக் கண்ணுஞ்
செப்புங்குஞ் சிதக்கண் ணென்றும் காமியே ஆசி யாக்கண் காணச்சு தாக்க ணென்றே.
|
...80 |
|
தாக்குசங் கிதக் கண்ணாய்ச் சாற்றிமேல் மதக்கண்
ணிற்கும் பார்மூ விதப்பே ராகும் பகர்கரு ணாம தக்கண் ணாக்குமத் திமமதக்
கண்ண தருமம தக்கண் ணென்று நோக்குமிக் கண்கள் போய் நுவலும் விநியோ கங்கேள்.
|
...81 |
|
1. சம திருஷ்டி
இமையவர் போலே கண்க ளிரண்டுமூ டாமற்
பார்த்தல் சமதிஷ்டி விநியோ கங்கேள் தராசுநன் னாட்டியா ரம்பம் அமலவிண்
டேவ ரூப மாச்சரி யங்க ளுக்கும் விமலியே வேறோர் காரிய மேவு சிந்தைக்கு
மாமே.
|
...82 |
|
2.ஆலோகிக திருஷ்டி
நிகழ்சாடை யாய்ப்பிர மித்துத்
திறத்துடன் சுழற்றிப்பார்த்தல் பகருமா லோகி தக்கண் பற்றிய விநியோ
கங்கேள் சகலமும் பார்க்க வுங்குய வன்றிரிக் கைக்கு மிச்சை மிகவா
னதற்குஞ் சிந்தை மேவிய பிரமைக்குந் தானே.
|
...83 |
|
3.சாசி திருஷ்டி
பாரிசங் களிற்கு றுக்கே பார்ப்பது
சாசி திஷ்டி நேருறும் விநியோ கங்கேள் நீட்டிய பார்வை கிள்ளை ஏறுவீ சையை
முறுக்க லிங்கிதஞ் சூச னைக்கும் பாரவி சாரிக் கூத்து பாணவிலக் குக்குந்
தானே.
|
...84 |
|
4. பிரலோகித திருஷ்டி பக்கமி ரண்டும் பார்த்தல் பிராலோ
கிதந்தா னாகும் மிக்கவை விநியோ கங்கேள் வெகுசம்பாத் தியமி
ரண்டு பக்கஞ்சேர் பொருள்க ளெல்லாம் பார்க்கவு மசைவ தற்கு மிக்க நேர்
மொழியாய்ப் புத்தி யீனங்க ளுக்கு மாமே.
|
...85 |
|
5. திமீலித திருஷ்டி
அரைவிழி யாய்வி ழித்தாி
லாகுநி மீலி தந்தான் உரைவிநி யோகங் கேளா யுற்றிடு நமக்கா ரங்கள் பரவசஞ்
செபந் தியானம் பைத்தியங் கொஞ்சப் பார்வை இருடிவே டங்களுக்கு மீயல்நிமீ
லிதமே யாமே.
|
...86 |
|
6.உல்லோகித திருஷ்டி
உயரவே பார்த்த திஷ்டி
யுல்லோகி தந்தா னாகும் சயமுறு விநியோ கங்கேள் தேவமண் டலங்கள்
சந்திரன் நயமுறு சிகிரி கட்கும் நற்கொடி நுனிக ளுக்கும் உயர்பாலிற்
பொருட்கும் பூர்வ முறுஜன்மங் கட்குந் தானே.
|
...87 |
|
7.அனுவிருத்த திருஷ்டி
மேலிடங் கீழி டத்தும்
மிகவிரைந் தேகண் ணாற்பார்த் தாலனு விர்த்த திஷ்டி யதற்கினி விநியோ
கங்கேள் கோலியே மேவு பொல்லாக் கோபங்கட் காகு மப்பால் சாலவே மந்தி
ரிக்கும் பலவேலை களிலு மாமே.
|
...88 |
|
8. அவலோகித திருஷ்டி
அவனியைப் பார்த்த திஷ்டி
யவலோகி தந்தா னாகும் நவில்விநி யோகங் கேளாய் நடக்கநன் னீழற்
பார்க்கப் புவியினில் விசாரஞ் சூரம் புராணங்கள் படிப்ப தற்கும் கவனம
தாகத் தன்றே கம்பார்க்க வுந்தா னாமே.
|
... 89 |
|
9. துரித திருஷ்டி
கேளுநீ பிரபன் தத்துங் கீதத்து
மீதிற் பூசும் பாழிலாச் சந்த னத்தும் பகர்வீர ரசத்து மற்ற வேழம்போ லேக
றுத்த விழிகளை யுருட்டி நோக்கல் ஆழவே துரித திஷ்டி யாகுமென் றுரைப்பர்
மாதே.
|
...90 |
|
10. சூசனா திருஷ்டி. 11. உக்கிர திருஷ்டி
மேலுந்தே
சங்கள் பார்ப்ப திலுநாட் டியத்தும் பாணம் சாலவே தொடுக்கும் போதும் பதிவிர
தைதன் னீதிப் பாலிலு மனங்க னுற்ற கலவியி லும்பார்க் குள்ளே கோலுஞ்சிங்
கார மாதி ரசங்களைக் குறிக்கும் போதே.
|
...91 |
|
போதுநேர் நயனந் தன்னை பொருந்தவே சுழித்து மூடி ஏதமில் சூச
னாக்கண் ணென்ற னருக்கி ரக்கண் ஓதுமே பைத்தி யம்மே லுற்றவன் கோபம்
வேகம் தீதிலாப் பயர சத்தி லிருகடை சிவந்து பாரே.
|
...92 |
|
12. தூரதிருஷ்டி
சுகமுறுந் தூர திஷ்டி சொலுஞ்சிறி
துயர நோக்கல் அகவிநி யோகங் கள்ளுஞ் சாராய மருந்து வோனும் தகுங்கைகா
னீட்ட லீதிற் றானாகு மென்றே முன்னாள் தகைமைசேர் பரத நூலோர் சாற்றின
ரிதுவென் றோதே.
|
...93 |
|
13. காந்தக்கண்
கல்லெனுங் காந்தைக் கண்ணாங்
கருவிழி பெரிதாய்ப் பார்த்தல் வல்லப வினியோ கந்தான் வளர்பிரமை யதிச
யித்தும் நல்லபெண் வதனம் பார்த்தல் நாடுஞ்சித் திரவு றுப்பும் புல்லிய
சிங்கா ரத்தும் பொருமதி ரவியி டத்தும்.
|
...94 |
|
இடமாகு மிரதத் தோடு மிணங்குபாய் மாவி டத்தும் கொடுமுடி
கோபு ரத்துங் கூடுங்கண் ணாடி பார்த்தல் மடமயிற் பலபொ ருட்கள் பார்ப்பதி
லாகு மற்றும் திடமதாய் முகத்தில் வீர ரசமது சனிக்குந் தானே.
|
...95 |
|
14. பயாநகதிருஷ்டி
காட்டியே கண்கண் மூடிக் கருவிழி
பார்ப்ப தாகச் சூட்டும்ப யாந கக்கண் சொல்லும்வி நியோக
மையல் கூட்டும்லரஞ் சனையும் வாஞ்சை கொளுமூக்குக்
கண்ணாடிக்கும் ஈட்டமாம் புத்த கத்து மெழும்சலிப் பிலுமுண் டாமே.
|
...96 |
|
15. கருணாதிருஷ்டி
பார்க்குமாங் கருணா திஷ்டி
படர்கடை நடுவி ரித்து ஏற்கவே யிடையி ரண்டு மிடுக்கியே பார்ப்ப
தாகும் தீர்க்கமாம் விநியோ கங்கள் செப்பக்கே ளிரவி தன்னை மார்க்கமாய்ப்
பார்க்கும் போதும் மந்திரத் தியானஞ் சேவை.
|
...97 |
|
சேவையாம் பகைவ ரோடெ திர்மொழி செப்புங் காலும் கோவைநேர்
விழியி னோவால் கூசிக்கண் பார்க்கும் போதும் பூவையே சிந்தை யன்பு
பொருந்தமெய்ச் சிலுப்பும் போதும் மேவிய தவத்தோர் நாசி னுனிபார்த்த லசதி
யென்பேன்.
|
...98 |
|
நுனிபார்க் குங்கல் யரணப் பெண்ணறுந் தலைக விழ்ந்து
நாணல் அணியதாய்த் திரிவா யில்வைத் ததன்குறி பார்க்கும் போதும் இணையிலா
மைய லாசை யிருகண்டூள் விழுந்த போதும் துணிவதா மருந்த ருந்தற் சூழ்புகை
தனிலு மாமே
|
...99 |
|
16. மூடாம்பகக்கண்
தொய்யுமூ டாம்பகக் கண்ணி
மைகள்சூட் சித்துப் பார்த்தல் மெய்யிதின் விநியோ கங்கேள் விரைந்திடுஞ்
சிந்தை நோயும் தையலே மயக்கந் தியானந் தன்னிலுந் துக்க மாகும் ஐயமில்
லாத நித்திரை யறைந்ததை யறிந்து கொள்ளே.
|
...100 |
|
17. அத்புததிருஷ்டி
தேடிய வற்பு தக்கண் சீரதைச்
செப்பக் கேண்மின் வாடியே சோம்பி நோக்கல் தன்னிலே நிமைகள் சற்றே நாடியே
துடிது டிக்க நயம்பெறு நயனத் துள்ளே கூடியே கருவி ழிச்சஞ் சலமத கொளவே
நோக்கும்.
|
...101 |
|
நோக்கயே விநியோ கங்கே ளொருவரை நோகச் சொன்னோம் தாக்கவே
யென்ற போதுஞ் சரீரநோய் கொண்ட போதும் தேக்கியே யதுவுண் டாகு மெனப்பர தச்சீ
ருற்றோர் ஆக்கமா யபிந யிக்கு மடவுரை செய்தா ரன்றே.
|
...102 |
|
18. வீரதிருஷ்டி
செய்யவே யிமையுங் கண்ணுஞ் சீரசை
யாதி ருத்திப் பையவே புருவந் தன்னை நெரித்துக்கண் சிவப்ப
தாக்கி நொய்யவே பொரும லாக நோக்குதல் வீரக் கண்ணாம் மெய்யிது வினியோ
கந்தான் வீரர்மேற் பாய்வ தாமே.
|
...103 |
|
19. விகற்பதிருஷ்டி
கேளுநீ யிருகண் டன்னைக்
கெம்பீர மாய்த் திறந்து ஆழியாங் கடைக்கண் சற்றே குவித்தசை யாமற்
சீராய்த் தோழியே கருவி ழிக்காற் றுலங்கவே பார்ப்ப தாகும் நீழுறும்
விப்பி ராந்தம்; விஷாணமு நிகழ்த்து நூலே.
|
...104 |
|
20. விப்பிராந்ததிருஷ்டி 21.
விஷாணதிருஷ்டி
யோகமாம் விழிதி றந்து ஒக்கவே பரப ரப்பாய் வேகமாய்ப்
பார்ப்ப தென்றே விள்ளுவர் விஷாண திஷ்டிக் காருமாங் கடைக்கண் சொக்கி
யிமைகளைத் திறந்து கண்ணைப் பாகுமாய் நிமையைக் கொட்டிப் பார்ப்பது மாகும்
பேரே.
|
...105 |
|
22. விப்புலுததிருஷ்டி
பாருவிப் புலுதா திஷ்டி
பயன்விழித் திருக்கும் போது கோரிய துண்டு இல்லை யெனநிமை கொட்ட
லாகும் மாறிய துக்கத் தும்முன் மத்தத்தும் பொருந்து மென்றே நாரியே பரத
நூலோர் நயம்பட வுரைத்த வாறே.
|
...106 |
|
23. விதர்க்கிததிருஷ்டி 24. தீனா
திருஷ்டி
உரைக்கும்வி தர்க்கி தாக்கண் ணுறுமிமை யுந்து
டித்துப் பொருக்கவே பரப ரப்பாய்ப் பொருந்த நாற்றிசையு
நோக்கும் வெருக்கத்தீ னாதிஷ் டிக்கு மேலிமை சிறுக்கக்
கொட்டிக் கருவிழிச் சற்ற மைத்துக் கண்ணீர்த தும்பப் பார்த்தல்.
|
...107 |
|
25. திரஸ்தா திருஷ்டீ 26. கிரஸ்தா
திருஷ்டி
பார்த்திடுந் திரஸ்தா திஷ்டி பகருவோ முண்ண
டுக்கச் சேர்த்திடு மிமைது டிக்கத் திருவிழி சலிக்க நோக்கும் ஆர்த்திடு
மிமைச லித்து அணிபுரு வம்நெ ரித்துக் கோர்த்திடும் விழியை யேறப்
பார்க்குங் கிரஸ்தாக் கணென்றே.
|
...108 |
|
27. இருட்டாக்கண்
காலத்து மிருட்டாக் கண்ணிற்
காங்கரு விழியைச் சற்றே ஏலவே சொருகி யோய நிமைகொட் டியேக போலம் சாலவுன்
னதமாய்ப் பார்ப்ப தாமெனப் பரத நூலோர் நீலவேல் விழியி னாளே நிலையறிந்
துரைசெய் தாரே.
|
...109 |
|
28. மலிநீ திருஷ்டி 29. லவித திருஷ்டி
செய்யவே
வொன்றைத் பார்த்துத் திரும்பிபோ குவது போலப் பையவே யிமையைச் சற்றே பணியமூ
டுவதாந் திஷ்டிக் கையுறு மலிநீ யாகுங் கடைமூடிப் புருவஞ்
சேர்த்து மெய்யுறு கண்டி றந்து பார்ப்பது லளித மென்னே.
|
...110 |
|
30. குஞ்சித திருஷ்டி 31. ஆசியாக்கண்
மேவிய குஞ்சி
தக்க ணிமைபாதி மூடிப் பக்கம் தாவிச்சஞ் சலமாய்ப் பார்ப்ப தாகுமே யாசி
யாக்கண் பாவையே விழியைச் சற்றே சுருங்கவாச் சரியம் பார்த்துக் கூவியே
சிரித்த லென்றே குறித்ததை விண்டார் மானே.
|
...111 |
|
32. அச்சுதா திருஷ்டி
விள்ளவே யச்சு தாக்கண்
ணாமதின் விவரங் கேண்மின் உள்ளுடன் புறம்புந் தோற்ற வொளியது நிறக்கக்
காட்டும் வெள்ளையாம் விழிபொ ருந்தி மேலிடப் பார்ப்ப தன்றே வள்ளிதாய்ப்
பரத நூலோர் வகுத்தனர் புலன றிந்தே.
|
...112 |
|
33. சங்கித திருஷ்டி. 34. மதக்கண்
தெரிவையே சங்கி
தக்கண் திறமதாய் விழித்துப் பார்த்து மறுபடி யிமையை மூடி வளர்கடைக்
கண்ணாற் பார்த்தல் முருகாகு மதக்கண் டன்னுள் மூவகை யான
பேதம் பெருமையாம் பயன றிந்து பிணக்கற வுரைக்கு நூலே.
|
...113 |
|
34. கருணைமதக்கண். 35. மத்திம மதக்கண்
மின்னாங்
கருணை மதக்கண் விழித்தோரஞ் சரித்து நன்றாய்ப் பன்னிய விகார முற்றுப்
பார்க்குமத் திமம தக்கண் நின்னய மாகச் சற்றே நிமைதனை விழித்து
மூடி உன்னியே யசைத்துப் பார்ப்ப தொக்குமென றுரைசெய் தாரே.
|
...114 |
|
36. அதருமமதக்கண்
வாரிசூழ்ந் திடும தர்ம
மதக்கண்ணின் விபரங் கேண்மோ நேரதாம் விழியைக் கீழே நிலைபார்த்துப் பிரயா
சத்தில் கோரியே நிமையைச் சேர்த்துக் கொட்டுத லாகு மென்றே கூறினார்
பரதங் கற்ற குருபரம் பரையி னாரே.
|
...115 |