தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Classical Dance of the Ancient Tamils >  mahAparata cUTAmaNi

BHARATA NATYAM
CLASSICAL DANCE OF THE ANCIENT TAMILS


mahAparata cUTAmaNi
(author not known)

மஹாபரத சூடாமணி என்னும்
பாவ ராக தாள சிங்காராதி அபிநயதர்ப்பண விலாசம்

முதல் மூன்று அத்தியாயங்கள்
[also in pdf ]

Acknowledgments

Etext preparation & Proof-reading: Mr. V. Devarajan, Durham, NC, USA. PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


This work is one of the treasures collected by the late Dr.U.V. Swaminatha Aiyar who is revered as "தமிழ்த் தாத்தா". It was first published in print by Dr.U.V. Swaminatha Aiyar library in 1955. It is not known who is the author of this work and when it was produced. It has been recommended by Dr. Rukmini Devi to all students of dance and music.The second edition of the same published in 1994 is the source for this file. The following text contains only the verses (moolam) and not the meanings, commentaries and notes included in the printed book.

The original composition மஹாபரத சூடாமணி comprised five chapters;

    1. நாட்டியோபயோக அவயவபேத விநியோக லக்ஷணம்.
    2. முகூர்த்தாதி எழுவகைத் தோற்ற அபிநய லக்ஷணம்.
    3. சபாநாயகாதி சர்வ வாத்திய பாத்திர லக்ஷணம்.
    4. சங்கீதாதி ராக மேள லக்ஷணம்.
    5. தாளாதி மாத்திர கணித லக்ஷணம்.

As indicated above, the first three chapters form the present work. The fourth chapter was published separately in print by S.V.S. library in 1955. The fifth chapter has been lost.

முதல் அத்தியாயம்
நாட்டிய உபயோக அவயவபேத விநியோக லக்ஷணம்

முகவுரை

1. கடவுள் வாழ்த்து

கணபதி தோத்திரம்

ஆதிநா ளீசன் அருளும் பரதநூல்
மேதினியி லன்புடன்யான் விள்ளவே - மோதமுடன்
மாங்கனியை வாங்க வரனைவல மாகவந்த
காங்கயன்முன் றோன்றுமிபங் காப்பு.

..1

சுப்ரமண்ணியர் துதி

வேழமுகத் தோன்றனுக்கு மெய்த்துணையா மெய்ப்பொருளே
ஆழிபுனை யும்மாலுக் காமருகா - நீள்புவிமேல்
ஆதிமூ லப்பரத மன்புடன்யா னோதுதற்கு
ஆதரவு செய்தாள்கு கா.

...2

சரசுவதி

நாவு தவறாமல் நற்சொற்கள் மாறாமல்
மேவு பரதவிதம் விள்ளவே - பூவுலகை
ஆளுகின்ற மாவாணி யம்மையே நாயடியேன்
வாழும் படிக்கிசைந்து வா.

...3

மதுரை மீனாட்சிசுந்தரேசுரர் துதி

ஆதிமூ லப்பரத மையமிலா தோதுதற்குச்
சாதனையா யென்னாவிற் றானிருந்து - ஓதவருள்
தேனார் கடம்பவனத் தேதோன்றி வாழ்மதுரை
மீனாட்சி சொக்கலிங்க மே.

...4

திருநடன வணக்கம்

பிரமன்றா ளம்போட மால்படகந்
தனைமுழக்கப் பேராம் வாணி
அருமையாம் வீணைகொளச் சீங்குழலி
ரவிசசியு மடைவா யூதக்
கிருபையுடன் தேவரொலி செய்யநந்தி
மத்தளம்சங் கீதத் தைத்தும்
புருமுழங்க ரசம்பிறக்கச் சிவனாடு
நடனத்தைப் போற்று வேனே.

..5


2. அவையடக்கம்

இந்துபா லிரவி தீப மீசனாட் டியமி ரத்னம்
சிந்துகற் பகம்பூ தங்கச் சிகரிதட் சணையும் பத்தர்
தந்ததை யேற்றாற் போலத் தகைமைசேர் நூல்வல் லோர்கள்
எந்தன்மேற் கருணை கூர்ந்து ஏற்பரிந் நூலை மாதோ.

...6


3. நூலின் வரலாறு

ஆதியாம் பொருளில் முக்குணஞ் சேரவம் பரமெனுஞ் சத்தப் பிரமம்
ஆயதிற் றோன்று நாதம் தேவானாத் மகந்தொன் னியாத்து மிகமென்
றோதிய விரண்டு வகையுடன் றனித்த வுமையொரு பாகன்முன் னாளில்
உலகெனுங் கலைக ளீரெட்டை மேவி யொப்பிலா வானந்த முதலா
ஏதமிற் றாண்டவம் பதினாறு மேற்கையா யாடிடு மப்போ தேந்திய
வுடுக்குக் கிண்கிணி கெச்ச மிவற்றுள் வியகரண சூத்தி ரங்கள்
மீதுறுங் கணமுத லாகிய நூல்கள் விளங்குறு மவற்றுளிப் பரதம்
விண்ணவர் புகழ வாடியிப் பயனை விரிஞ்சனுக் கோதின னரனே.

...7

விரிஞ்சனம் முறையை மறையுளா ராய்ந்து விதிகளைப் பயன்படும் போது
வேதமா மிருக்கு தன்னுள் வாத்தியமு மேன்மையா மெசுர்வேதந் தன்னுள்
அரிதென விளங்கு மபிநய மும்பே ராகிய சாமவேதத் துளகி லங்கொண் டாடுங் கீதமு மற்று மதர்வண வேதந் துள்ரசமு
முறைகொளக் கண்டு சாத்திரந் திரட்டி முப்பத் திரண்டு லட்ச மதாய்மு ழங்கிய கிரந்தந் தர்மார்த்த (காம) மோக்ஷமீந் திடுமெனப் பின்னும்
திரைகொளுந் துக்கம் பயம்சோகம் வெறுப்புத் தீங்குறு பேதங்க டீர்த்துத்
திறம்பெறு மானந் தந்தரு மெனவே செப்பியே வாழ்த்தி னன்மலரோன்.

...8

அம்முறை தன்னை நந்திகண் டேநா லாயிரங் கிரந்த மதாக
அருளிய வதனைப் பரதமா முனிவன் அறிந்தர னோக்கியே நடிக்க
இம்முறை பெண்பா லாயில்நன் றென்றே ஈசனார் நினைந்திட வுமையாள்
இன்பமே பயக்க வீசன்முன் னாடி யெழில்பெற இவ்விரு முறையைத்
தம்மிலே வாணா சுரன்மகட் குரைக்கத் தையலுடன் சார்ஞி தேவன்
தஷிண கும்பமுனி பாட்டன் பிருங்கி சார்ந்தநாதன் பிரகற் பதியும்
செம்மைசேர் சுங்கன் தத்தில லனுமன் சிறந்தகோ களனருச் சுனனும்
திறமைசேர் * * *

...9

காசிபன் வியாசன் வாணி கம்பளன் வாயு தேவன்
பேசிய யாஞ்ஞ வல்கன் வசிட்டனுஞ் சேடன் பின்னும்
மாசிலா தோங்கு விச்சு வாவசு வுடனே பேராந்
தேசம தாளும் ராஜ சேகர வழுதி மற்றும்.

..10

திறமான ராவணனும் வாணா சூரன்
சீராகு மரசர்களில் விக்ர மார்க்கன்
மருவிலா வரம்பையரும் போஜ னோடு
வாசுகியும் சத்திமுனி யுலகில் மற்றும்
வருசோம நாதன் கோரட்சகன் பேர்வா
னதியைப் புனைந்தோனும் வகைக டேர்ந்து
முறையாக நூல்களை யுண்டாக்கித் தாமுமுன்
நடித்துமுல கோர்க்கு முரைத்திட்டானே.

. ..11

நாந்தி

நந்தியே நட்டுவனாம் நாட்டியனே யீச்சுரனாம்
சிந்தைமகிழ்ந் தந்திரத் தேயிருந்து - முந்த
நடனந் தொடங்கினது நாந்தியா மென்பர்
மடமயிலே நாந்தி வகை.

...12


4. பாயிரம்

ஆதியா யெங்குந் தானா யனாதியாய் நிறைந்து நின்ற
சோதியாம் பரம னாடுந் தொழிலது வாணி முன்னாள்
நீதியாய் வடம னூலால் நிகழ்த்தின ளெவருங் காண்
மேதினி தனிலே யானும் விளம்பினேன் பரத நூலை.

...13

நூலதைத் தமிழாற் பாடு நுணுக்கத்தை யறிந்து கொள்வீர்
மேலங்க முபாங்கம் பிரத்தி யாங்கத்தின் விவர பேதம்
கோலமா மங்க மேழு குறித்திடு பிரத்தி யாங்கம்
சாலவே யொன்ப தாகச் சாற்றுபாங் கமுமீ ராறே.

...14

சீராறு நயன பேதஞ் செப்பக்கேள் முப்பத் தாறும்
ஈராறு மேழுஞ் சென்னிக் கிசைத்ததோர் பேத மாகும்
ஓராறு முன்று மேசு வாற்பநிட் டையென வோதும்
வேறாரு மறிய வெண்ணா வெகுநிட்டை யெட்ட தாமே.

...15

எட்டதா மிமையின் பேத மிசைந்திடு புருவ மேழாம்
வட்டமாம் நாசி யாறும் வளம்பெறு மிதழு மாறாம்
ஓட்டிடுந் தந்த நாலா முருசிகாட்டிடுநா வைந்தும்
கட்டிடாச் சுவாசம் நாலு கதுப்பாறு பேதஞ் சொல்லே.

...16

சொல்லிய வதன மாறாஞ் சுமுகமு மேழ தாகும்
மெல்லிய கண்ட மொன்பான் விளங்கிய புயமீ ரைந்தாம்
நல்லமா தாந்திரத்தோள் நாலுட னிரண்ட தாகும்
அல்லலொன் றில்லா மேனிக் கமைத்த பேதங்க ளைந்தாம்.

...17

ஆமணிக் கட்ட தாறா மூவகை யைவி ரற்கே
நாமினி யொருகை பேத நவிலுவோ முத்த மிழ்க்கை
நேமமூ வெட்டாங் கைகள் நிறைந்தமா தாந்தி ரக்கை
ஓமென விருப தாகு முலகப்பிர சித்தக் கைகேள்.

...18

கைமூன்று பத்தொன் றேதான் காட்டினோம் பிரவர்த்த மானஞ்
செய்யொத்த கையீ ராறு செப்புமா தாந்தி ரத்தில்
எய்யும்பூ லோகக் கைக ளீரைந்தா மென்றி சைப்பாய்
பொய்யிலாத் தேசி யான பொதுக்கையும் பத்தே யாகும்.

...19

ஆகிய வகைக ளாறுக் கமைத்த கைநூற் றாறு
வாகுசே ரிருகைப் பேதம் வளர்த்திடு நாற்ப தாகும்
சேகர முத்தி ரைக்கை சேர்ப்பது முப்பத் தொன்றாம்
மோகமா நிருத்தக் கைகள் முப்பத் திரண்டென் பாரே.

...20

பார்த்திடு வயிறி டுப்புப் பாரிச முதுகு நான்கும்
சேர்த்திடு நந்நான் காகச் சிறந்திடு தொடையோ ரைந்து
நேர்த்தியா முழந்தா ளைந்து நேர்கணைக் காலு மைந்து
சாத்திய பாத பேதம் தனைப்பத்தா யுரைக்கு நூலே.

...21

உரைத்திடு மங்க மூன்றி லுதித்திடு மவய வங்கள்
நிரைத்திடு மிருபத் தெட்டாய் நிகழ்த்திடுந் தேசிச் சாரி
விரித்தது முப்பத் தைந்து விளங்குமா காசச் சாரி
குறித்தபத் தொன்ப தென்றே கூறுதே சிகமீ ரேழே.

...22

ஈரெட் டதாம்பூ சாரித் திழிதலிற் கேற்கை யாகும்
ஓரெட்டிற் பாதி சுத்த மண்டல மென்றே யோது
நீரெட்டும் பாரும் விண்ணு நேர்ந்த மண்டல மிரண்டும்
பாரெட்டும் நூறும் பத்தும் பதினான்கு பேத மாமே.

...23

கரணம்

ஆமெனு முற்புலி தக்கர ணங்கள் முப்பத் தாறாம்
தாமென்னு மடிப்புத் தொண்ணூற் றாறுமாங் கரண நாலாம்
சோமப் பாலுண்டு கண்டு சொன்னதாம் பாணித் தானம்
நாமிப்பால் பதின்மூன் றென்று நாட்டுநூல் நவர சங்கேள்.

...24

நவரச மொன்ப தாகு நடனதாண் டவநூற் றெட்டாம்
தவமிகு மேகக் கூத்தைச் சார்ந்திடி லாற தாகும்
பவமறு பிரமக் கூத்தின் பேதமோ பதின்மூன் றாகும்
கவனமாம் பலகோ லங்க ளெட்டெனக் கருது நூலே.

...25

கருதுநூ லகமார்க் கங்கள் கட்டளை விதம னேகம்
சுருதியா லறிந்த தாதித் தொழிலதும் பலவ தாகும்
மறுதொழில் முகிந்து நின்ற துத்தீப னமதே யாகும்
பருதியாம் பரத நூலின் பாயிர முரைத்த தின்றே.

...26


5. நாட்டிய விவரம்

உரைத்திட்ட நாட்டியந்தா னுயரதி ரசசிங் காரம்
இருத்திட்ட மாமதிற் றௌிந்தநிர்த் தனம னேகம்
விரித்திட்ட நிர்த்த னந்தான் அபிநய மெனவிளம்பும்
குறித்திட்ட வபிநயங்க ளாவது கூறத் கேளே. .

..27


6. அபிநய விவரம்

கூறக்கேள் பிறந்த கீதப் பிரபந்தங்க ளின்கு றிப்பின்
சாரத்தைச் சபையோர்க் கெல்லாந் தருணம கிழ்ச்சி யாகப்
பேரொத்த பாத்தி ரந்தான் பிரியமா யபின யித்துச்
சீரொத்துக் காட்டு கின்ற செழிப்பபி நயம தாமே.

...28

நான்கு வித அபிநயம்

ஆமபி நயங்கள் நான்கா மதின்வகை யேதென் றோதில்
சேமமாங் கீத மென்றும், செப்புவா சீக மென்றும்,
பூமதா காரிய மென்றும், பொருந்துஞ்சாத் வீக மென்றும்,
நாமங்க ளின்னும் வேறாய் நவின்றது நூலின் பாங்கே.

...29

பாங்காகு மபிந யத்தின் பான்மையாய் விளங்கு மந்த
ஆங்கீக மதுவே சாயி அமைத்தவா சிகசஞ் சாயி
ஓங்குமா காரி யந்தா னுயரனு சாயி யாகும்
சாங்கமாஞ் சாத்வி கந்தான் விபசாயி யெனவே சாற்றும்.

...30

சாற்றுமாங் கீக மென்ற சரீரத்தி னபிந யங்கள்
ஏற்றிடு வாசி சுந்தரன் வாக்கபி நயமென் றேற்கும்
தோற்று மாகாரி யந்தான் அலங்காரஞ் சாத்வீ கஞ்சொல்
தேற்றமா நடன பாவல யமபி நயமாஞ் சாற்றும்.

...31

ஆங்கிநாபிநயம்

ஆங்கிகா வபிநயம் மீரா றாகும் பேதங் கேளாய்
பாங்கதா மங்க காரம் சிரோபேதம் பாத சாரி
தாங்குதாண் டவத்தி னோடே தானப் பிரமணஞ் சேர்ந்து
தீங்கிலாக் கரண மஸ்தம் நேத்திர பேத மற்றும்.

...32

ஓதுமே பேத மின்னும் உருசர சக்தி யோடே
மாதுடை சப்த நாட்யம் மண்டல மாகும் பின்னும்
தீதிலாப் பேத மாகும் தேசிக கதியா மென்றும்
பேதத்தி லாங்கி கநான் காம்விதம் பேசும் பாரே.

...33

இவ்வாங்கிநாபியத்தின் நான்குவகை

ஆனசூ சிகம தென்றும், பாவாபி நயமி தென்றும்,
ஞானஞ்சேர் தொந்தமென்றும், லாட்சணி கமதா மென்றும்
தேனுறு மொழியி நாளே செப்புமிவ் வகையாம் நாவில்
பூணவே முதலிற் சூசி கத்திற்குப் புகலு நூலே.

...34

சூசிகாபிநயம்

சாருமே சூசி கந்தான் தாவர சங்க மத்தில்
பேருறு மெவற்றை யேனும் பிசகாமற் கைகால் தன்னால்
நேரதா யபிந யத்து நிச்சய மாகக் காட்டித்
தேரிய வாக்கி னாலே சொல்லிக்காட் டுவதாய்ச் செப்பே.

...35

பாவாபிநயம்; தொந்தாபிநயம்

பாவாபி நயமே யாகுந் தலைகண்ணாற் பாவங் காட்டும்
நீலிய தொந்தஞ் சென்னி நேத்திரம் பாதங் கையால்
யாவருந் தெரியக் காட்ட லாமதன் விதங்கள் மூன்று
ஆவாக்ய பாவி கத்தோ டனுபாவிக தொந்த மொன்றே.

...36

ஆவாக்ய தொந்தாபிநயம்

சொல்லுமா வாக்கி யத்துத் தொந்தமாம் பாட கன்தான்
மெல்லவே பாடும் போது மெல்லிய ருசிதமாகச்
சில்லெனப் புளகங் கொள்ளத் திறமாக நடிப்ப தென்றே
வில்லெனும் புருவ மாதே ! விண்டனர் நூல்வல் லோரே.

...37

பாவிகதொந்தாபிநயம்

பாவிக தொந்த மென்னப் படுவது சென்னி யுங்கண்
மேவுமற் றெதனா லேனு மெல்லியர் பாடிக் கொண்டு
பாவலர் மகிழ வாடும் பயனென வோதும் நூலில்
கூவிளங் கனியை யொத்துக் குவிந்தநற் றனத்தி னாளே.

...38

அநுபாவிக தொந்தநாபிநயம்

அனுபா விகத்தொந் தந்தா மாவது பாடு வானும்
வனிதையுள் சேர்ந்து பாடி வளர்சிரங் கண்கை கால்கள்
எனுமங்கங் களினால் நன்றா யிணங்கவே யபிந யித்தல்
வினவிய பரத நூலில் விணடன ரறிந்து கொள்ளே.

...39

இலாட்சணிகாபிநயம்

இயல்புலாட் சணிக மாவ தேதெனி லுலகி லுள்ள
சுயமதாம் வஸ்து நாமம் சொல்லாம லிதுதா னென்று
பயனதை யாருங் கண்டு பாவனை கொள்வ தாக
நியமமா முருவங் காட்டி நேர்பிடித் திடலா மென்னே.

...40

சுத்தலாட்சணிகாபிநயம்

சுத்தலாட் சணிக மேலே சொல்லும்வஸ் துக்க ளுக்கு
வைத்திடு நாமஞ் சொல்லி வளம்படப் பிடித்துக் காட்டல்
நித்தம தாகு மென்று நேர்படப் பரத நூலோர்
வித்தக மொழியி னாளே விண்டனர் கண்டு தேறே.

...41

வாசிகாபிநயம் நான்கு வகை
சுகீத வாசிகம்

ஓதுக கீத வாச்ய முபகீத வாச்ய முஞ்சேர்க்
கோதுக சப்த வாச்ய முபசப்த வாசிகம்மென்
றீதிற்க கீத வாச்ய மாகு மினிதரம் பாத்திரம்
கீதத்தைத் தானே பாடிக் கொண்டபி நயத்தற் கென்னே.

...42

உபகீத வாசிகம் கசப்த வாசிகம்

உபகீத வாசி கந்தான் ஓதுமே பாட கன்தான்
சபைமெய்க்கப் பாடும் போது தையல ரபிந யித்தல்
விபுலமாம் கசப்த வாச்ய மெல்லியர் கணிப்பித் தேதான்
சுபமதாய் நடனஞ் செய்வ தாமெனச் சொல்லு நூலே. ...43

உபாப்த வாசிகாபிநயம்

வருமுத சப்த வாச்ய மாவது நட்டு வன்றான்
திறமதாய்க் கணிப்பப் பாத்ர மாடியே யபிந யித்தல்
தருமெனப் பரத நூலோர் தரணியி லறிய முன்னாள்
மருவிய முலையி னாளே வகுத்தன தறிந்து கூறே.

...44

ஆகாரியாபிநயம் மூன்று வகை

நிஜாகாரியாபிநயம்

ஆகாரி யபிந யந்தான் அங்கத முடியு மார்ப
தாகையாந் தட்டிச் சல்ல டம்முலைக் கச்சு மற்றும்
வாகுள அரைஞா ணென்னுந் திகழ்பணி சிறந்த வாடற்
காகுமே யிதற்குச் சொல்லு நிஜாகாரிய மென்னும் பேரே.

...45

அபிசாரி ஆகாரியம்

இதிலபி சாரி யென்னு மாகாரிய விலக்க ணந்தான்
மதியெனத் துலங்கு மோரா மாயண நாடகங்கள்
முதலா னதற்கு வேடம் பூண்டாடு வதென மூட்டுங்
கதிரெனு மொழியி னாளே கருதுமிந் நூலிற் றானே.

...46

வியபிசாரி ஆகாயம்

விபசாரி யபிந யந்தான் விள்ளுமந் தந்தத் தேசச்
சபைகொளப் பலவா நாட்டி யங்கட்குச் சாதி நேராய்
உபமானத் தோடே ராமா யணமுதல் நாட கங்கள்
உபயோகப் படவே காட்டற் குற்றபூ ஷணங்க ளென்னே.

...47

சாத்விகாபிநயம் இரண்டு வகை

சாட்சுஷியசாத்விகம் வியஞ்சகசாத்விகம்

சாத்விக வபிநயஞ் சாட்சு ஷியவியஞ் சகம தென்று
போற்றிடு மிருவி தத்தி லெண்ணுஞ்சாட் சுஷந்த னக்குப்
பாத்திரங் கண்ணி னால பிநயித்தல் வியஞ்ச கந்தான்
நேத்திரந் தலைக ளாலே நேரபி நயப்ப தாமே.

...48


7. விருத்தி

சித்த விருத்தி

செப்பிய நாட்டி யந்தான் செய்வதிற் பலபே தங்கள்
அப்பெனுஞ் சித்த விர்த்தி யாமாம்பா விய விருத்தி
இப்படிக் காகுஞ் சித்த விருத்தியி னியல்பா முற்றும்
ஒப்பிய ரசத்தைக் காட்டு முயர்முகந் தனிலென் பாரே.

...49

பாரேநீ சிங்கா ரத்தை மனதுட்பா விக்கும் போது
சீரான முகத்திற் றோன்றுஞ் சிறந்தவீ ரத்தை யென்றும்
நேராரும் வதன பாவம் நினைத்திடல் சோகந் தன்னை
வேறாகா ததுபோ லாகுஞ் சித்தத்தின் விருத்தி தானே.

...50

பாவிய விருத்தி

விருத்தியாம் பாவி யத்தை விளம்புநூ லெவருங் காணத்
திருத்தமாம் வார்த்தை யாலே சிறந்திடும் பொருளை யெல்லாம்
உறுப்பெனு மபிந யத்தா லுகந்ததைப் பிரித்துக் காட்டி
எருத்தின்மீ தேறு மீச னியற்றும்பா வியமி தாமே.

...51


8. நாடகம், நிருத்தம், நிருத்தியம்

நாட்டியம் நிருத்தம் நிர்த்தியம் நவிலுமூ விதமாம்
பூட்டிய நாட கத்தில் பூருவ கதைக டன்னைக்
காட்டியே யபிந யித்தற் காமெனப் பரத நூலோர்
வாட்டமில் லாமற் சொன்ன வகையிதை யறிந்து கொள்ளே.

...52

நிருத்தமாம் ரசபா வத்தை நீக்கிய வடைவி னாலே
பொருத்தவின் யாசந் தாள லயந்தனைப் பொருந்தக் காட்டல்
நிருத்தியம் ரசபாவங்கள் நேர்கூட்டி விநியோகித்தல்
திருத்தம தாகு மென்று செப்புமிம் மூண்றுஞ் சேர்ந்தே.

...53


9. தாண்டவம் லாஸ்யம்

தாண்டவம் லாஸ்ய மென்ன விருவகை யாகச் சாற்றும்
தாண்டவந் தன்னிலு தான தாண்டவ மெனவோர் கூறாம்
தூண்டிய லாசி யத்திற் சுகுமார லாசிய மென்றும்
வீண்டறி தற்காய்ச் சொன்ன விவரத்தை யறிந்து கொள்ளே.

...54

உத்தானதாண்டவம் சுகுமாரலாஸ்யம்

நிரையுமுத் தான தாண்ட வமதாநின் றபிந யித்தல்
உரைசுகு மார லாசிய முட்கார்ந் தபிந யித்தல்
முறையாகு மென்று ரைத்தார் மூதறி வுடைய மேலோர்
திறைகொளு முததி தன்னிற் செழித்தசெங் கமல மாதே

...55


10. வெகுவான அபிநயம், அற்பமான அபிநயம்

ஆங்கிகா வபிந யத்தில் வெகுவென்று மற்ப மென்றும்
பாங்காகும் வெகுவே தென்னில் பண்பாஞ்சா ளையக்கை ரண்டும்
நீங்காமற் காட்டும் போது நேர்வாணா சூரன் கைபோல்
தாங்கா தனேக மாகத் தான்காட்டல் வெகுவாம் பாரே.

...56

என்றதோ ரற்பந் தன்னை யியம்புநூ லெவருங் காணச்
சென்றதோர் பொருளு மின்னஞ் சேர்பொரு டனையு மாங்கே
நின்றதோர் வர்த்த மான பொருளையு நேர்மை யீதென்
றொன்றிச்சூ சனைய தாக வுகந்திதைக் காட்டு மற்பம்.

...57


11. திரியாங்கம்

அங்கங்கள்

காட்டிய திரியாங் கத்தின் தொகை பேதங் காண முன்னம்
தேட்டமா மொவ்வொன் றிற்கே சேரவ யவங்கள் சொல்லும்
நாட்டமா மங்கத் திற்கு நவில்சிரம் விரல்கை மார்பு
கூட்டிடைப் பக்கம் பாத மேழெனப் பிரித்து நூலே.

...58

பிரத்தியாங்கங்கள்

கூறுமே பிரத்தி யாங்கங் குறிப்பதாம் புயங்க ழுத்து
தேறிய வயிறு மணிக்கட் டிருதுடை முழங்தாள் செப்பும்
மாறுகேள் கணைக்கா லோடு முதுகின்பா கத்தைச் சேர்த்துக்
கோரிய பூஷ ணாதி கூட்டிய தொன்பான் பாரே.

...59

உபாங்கங்கள்

மேன்மையா முபாங்கந் தன்னை விளம்புமே விழிக போலம்
தானிமை புருவத் தோடு நாசியுஞ் சுவாசந் தந்தம்
தேன்பயி லதர நாக்கு மோவாயுஞ் சோதி சேர்ந்த
வான்பயி லரிநே ரான வதனத்தோ டீரா றென்றே.

...60


முகவுரை முற்றும்.


அவயவபேத நிரூபணம்

1. சிரோபேதப் பிரகரணம்

சிரமுதற் சமமா முத்வா கிதமதோ முகஞ்சி றந்த
தரமாலோ ளிதமாங் கம்பி தம்துதம் பராவி ருத்தம்
திரமாமுட் சிப்த மோடு பரிவா கிதம்நிகஞ் சிதம்சே
கரமாமஞ் சிதவி தூத மாதூதமாங் கருது நூலே.

...61

கருதும வதுதத் தோட கம்பித மிசுகாந் தானம்
திரியக்க தான னந்தான் சிறந்திடு மராதி கம்பார்
மருவிய பார்சு வாபி முகம்சிரம் பதினெட் டொன்று
சருதியாம் பேத மென்னு மதின்வினி யோகஞ் சொல்லும்.

...62


1.சமசிரசு


சொல்லிய சமசி ரத்தின் றொகுப்பசை யாது நிற்றல்
நல்லதோர் விநியோ கந்தான் நடத்திடுந் தொழிலா ரம்பம்
எல்லையிற் பிரணய கோபத் திலுந்தம்பா காரந் தன்னில்
வல்லவ கருவத் தோடு நிராசையில் வருமென் பாரே.

...63


2. உத்வாகிதச்சிரசு

பாருத்வா கிதஞ் சிரமேற் பார்ப்பது விநியோ கங்கேள்
மேருவின் முடியுஞ் சந்திரன் விண்ணுறு முடுக்க ளோடு
தேருரை கலசம் பட்சி சிறந்தெழுந் துவசத் தம்பம்
நேர்படப் பார்க்கும் போதாம் நிகழதோ முகஞ்சொல் லாரே. .

..64


3.அதோமுகச்சிரசு

அதோமுகங் கீழே பார்ப்ப ததன்விநி யோகங் கேளு
இதமிகு மோகந் துக்க மிலச்சையு மூர்ச்சை மற்றும்
உதகத்தில் நானஞ் செய்யி லுண்மையாய் வணங்கும் போதும்
பதந்தொடல் பொருளைத் தேட லாமுதற் பகரு நூலே.

...65


4.ஆலோளிதச்சிரசு

ஆலோ ளிதமதாய்ச் சுற்ற லதின்விநி யோகந் தூக்கம்
மேலுறல் சிரிப்புக் கூட்ட மிகுத்திடும் போது மூச்சு
சாலவே யடங்கி நிற்குந் தருணமு போது பள்ளம்
ஞாலமீ தலகை சுற்றல் நலமதாங் கம்பிதங் கேள்

....66


5.கம்பிதச்சிரசு

கம்பித மேலுங் கீழுங் காட்டுதல் விநியோ கங்கேள்
என்பதே தென்னில் வாரு மிருமென வழைத்தல் கேள்வி
வெம்பியே கேட்கும் போது மிரட்டியே தட்டும் போதும்
அன்புள சயிக்கி னைக்கே யாகுமாம் துதஞ்சொல் வோமே

...67


6.துதச்சிரசு

துதம்வல மிடம சைத்த லுறும்விநி யோகம் பக்கம்
பதனமாய்ப பார்க்கும் போதும் பகரென்போர்க் கில்லை யென்ப
திதுவுமாச் சரியந் தன்னி லெழுந்தசந் தோஷத் தோடு
மதமுண் டிதுவல் லாம லடுத்தப ராவிர்த் தங்கேள்.

...68


7.பராவிருத்தச்சிரசு

தானென்ற பராவி ருத்தஞ் சமமுகந் திரும்பிப் பார்த்தல்
ஆனதன் விநியோ கந்தான் ஆதர வற்றுப் பார்த்தல்
மானமாந் தனத்தைப் பார்த்தல், வருவெட்கம், பராமு கத்தில்
ஏனையோர் சத்தங் கேட்கும் விதத்திலுட் சிப்தஞ் சொல்வோம்.

...69


8. உட்சிப்தச்சிரசு 9. பரிவாகிதச்சிரசு

உட்சிப்தந் தலையெ டுக்க லுவமைகா ரியங்கள் காட்டல
மெச்சு பரிவாகி தங்கேள் விளம்புவேன் றோளி ரண்டும்
பச்சத்திற் சிரசைச் சாய்த்துப் பார்க்குத லுபமா னந்தான்
இச்சையாய் மோகஞ் சோக மிசைந்தசந் தோஷ மாமே.

...70


10. திகஞ்சிதச்சிரசு

ஆசையாய்ப் பெரியோ ரைக்கண் டழைப்பதே யாகு மற்றும்
பேசுமே நிகஞ்சி தத்தோ ளிரண்டுமே லுயர்த்திப் பின்னும்
கூசிய கழுத்த மைத்தல் குறிப்பதா மயிர்க்கூச் சோடி
ராசியாய்த் தழுவி கூடில் நல்லசந் தோஷத் தென்னே.

...71


11. அஞ்சிதச் சிரசு

என்னவே முன்னோர் நூலி லியம்புவ ரஞ்சி தந்தான்
சென்னியோர் தோளிற் சாய்த்தல் சேர்விநி யோக மோகம்
தன்னிலும் விசாரஞ் சோகஞ் சஞ்சல மதிலா மேலோர்
நண்ணியே வரும்போ தாகும் நவில்விதூ தக்கூ றுகேளே.

...72


12. விதூதச் சிரசு 13. ஆதூதச் சிரசு

விதூதமே தலைந டுக்கல் விதமது மத்ய பானம்
போதையி லவிழ்த முண்ணும் போதினிற் றிறமை யாகும்
ஆதூத மிருபு றம்பார்த் தப்புறம் மேலே பார்ப்ப
தோதுமாச் சரியஞ் சந்தோ டத்திலுந் துலங்கு மென்னே.

...73


14. அவநுதச் சிரசு 15. அகம்பிதச் சிரசு

அவதுத மிருபு றம்பார்த் தண்ணாந்து கீழே பார்ப்ப
திவையெதி லென்பா யாகி லிருவெனுஞ் சைக்கி னைக்காம்
நவிலகம் பிதந்தான் சென்னி நலமுட னசைத்தல் வார்த்தை
செவையென வணக்கஞ் செய்யல் செப்புமே யிசுகாந் தானம்.

...74


16. இசுகாந்தானச் சிரசு. 17. திரியக்கதானனச் சிரசு

இசுகாந் தானஞ் சென்னி யியல்புடன் றோளில் வைத்தல்
இசைவது தூக்க மந்த மினிநேச மூர்ச்சை யாகும்
திசைபுகழ் திரியக்க தானனந் திரும்பிப் பார்த்து
விசையுடன் மேலே நோக்கல் விநியோகங் கருவ மாமே.

...75


18. அராதிகச் சிரசு. 19. பார்சுவாபிமுகச்சிரசு

கருவம்விட் டராதி கத்தைக் கேள்சற்றே தோளை நோக்கி
மருவிய சிரநே ராக்கல் வகைபிறர் மனத்தைக் காணல்
பருவமாம் பார்சு வாபி முகமது பக்கம் நோக்கல்
தருணமாச் சரியந் தன்னிற் றான்வருஞ் சிரம தாமே.

...76

சிரோபேதப் பிரகணம் முற்றும்.

2. நயன பேதப் பிரகரணம்

ஆகுமே நயன பாவ மபிநய முப்பத் தாறாம்
தோகையே சமமாந் திர்ஷ்டி தொகுத்தவா லோகி தக்கண்
வேகமாஞ் சாசி யும்பி ராலோகி தக்கண் மீது
பாசஞ்சேர் நிமீலி தக்கண் பகருமுல் லோகி தக்கண் ...77

கண்ணவ லோகி தத்தோ டநுவிர்த்தந் துரிதக் கண்ணும்
நண்ணுமே நயனஞ் சூச னாதிஷ்டி யுக்கி ரக்கண்
திண்ணிய தூர திஷ்டி சீர்காந்தைக் கண்ணி னோடே
உண்ணும்ப யாக கக்கண் ணுடன்கரு ணைக்கண் ணாமே.

...78

மேனிமூ டாம்ப கக்கண் மீதிலா மற்பு தக்கண்
பானுநேர் வீரக் கண்ணும் பகிர்ந்திடு விகற்பக் கண்ணும்
தேனே விப்பி ராந்தக்கண் செப்பும்வி ஷாணக் கண்ணும்
மானேவிப் புலுதாக் கண்ணும் வளர்விதர்க் கிதாக்கண் ணாமே.

...79

ஆமேதீ னாக்கண் ணோடு மருள்திரஸ் தாக்கண் கிருஸ்து
நேமமா மிருட்டாக் கண்ணும் நீதிசேர் மலினி யென்னும்
சேமமா லளிதக் கண்ணுஞ் செப்புங்குஞ் சிதக்கண் ணென்றும்
காமியே ஆசி யாக்கண் காணச்சு தாக்க ணென்றே.

...80

தாக்குசங் கிதக் கண்ணாய்ச் சாற்றிமேல் மதக்கண் ணிற்கும்
பார்மூ விதப்பே ராகும் பகர்கரு ணாம தக்கண்
ணாக்குமத் திமமதக் கண்ண தருமம தக்கண் ணென்று
நோக்குமிக் கண்கள் போய் நுவலும் விநியோ கங்கேள்.

...81


1. சம திருஷ்டி

இமையவர் போலே கண்க ளிரண்டுமூ டாமற் பார்த்தல்
சமதிஷ்டி விநியோ கங்கேள் தராசுநன் னாட்டியா ரம்பம்
அமலவிண் டேவ ரூப மாச்சரி யங்க ளுக்கும்
விமலியே வேறோர் காரிய மேவு சிந்தைக்கு மாமே.

...82


2.ஆலோகிக திருஷ்டி

நிகழ்சாடை யாய்ப்பிர மித்துத் திறத்துடன் சுழற்றிப்பார்த்தல்
பகருமா லோகி தக்கண் பற்றிய விநியோ கங்கேள்
சகலமும் பார்க்க வுங்குய வன்றிரிக் கைக்கு மிச்சை
மிகவா னதற்குஞ் சிந்தை மேவிய பிரமைக்குந் தானே.

...83


3.சாசி திருஷ்டி

பாரிசங் களிற்கு றுக்கே பார்ப்பது சாசி திஷ்டி
நேருறும் விநியோ கங்கேள் நீட்டிய பார்வை கிள்ளை
ஏறுவீ சையை முறுக்க லிங்கிதஞ் சூச னைக்கும்
பாரவி சாரிக் கூத்து பாணவிலக் குக்குந் தானே.

...84


4. பிரலோகித திருஷ்டி
பக்கமி ரண்டும் பார்த்தல் பிராலோ கிதந்தா னாகும்
மிக்கவை விநியோ கங்கேள் வெகுசம்பாத் தியமி ரண்டு
பக்கஞ்சேர் பொருள்க ளெல்லாம் பார்க்கவு மசைவ தற்கு
மிக்க நேர் மொழியாய்ப் புத்தி யீனங்க ளுக்கு மாமே.

...85


5. திமீலித திருஷ்டி

அரைவிழி யாய்வி ழித்தாி லாகுநி மீலி தந்தான்
உரைவிநி யோகங் கேளா யுற்றிடு நமக்கா ரங்கள்
பரவசஞ் செபந் தியானம் பைத்தியங் கொஞ்சப் பார்வை
இருடிவே டங்களுக்கு மீயல்நிமீ லிதமே யாமே.

...86


6.உல்லோகித திருஷ்டி

உயரவே பார்த்த திஷ்டி யுல்லோகி தந்தா னாகும்
சயமுறு விநியோ கங்கேள் தேவமண் டலங்கள் சந்திரன்
நயமுறு சிகிரி கட்கும் நற்கொடி நுனிக ளுக்கும்
உயர்பாலிற் பொருட்கும் பூர்வ முறுஜன்மங் கட்குந் தானே.

...87


7.அனுவிருத்த திருஷ்டி

மேலிடங் கீழி டத்தும் மிகவிரைந் தேகண் ணாற்பார்த்
தாலனு விர்த்த திஷ்டி யதற்கினி விநியோ கங்கேள்
கோலியே மேவு பொல்லாக் கோபங்கட் காகு மப்பால்
சாலவே மந்தி ரிக்கும் பலவேலை களிலு மாமே.

...88


8. அவலோகித திருஷ்டி

அவனியைப் பார்த்த திஷ்டி யவலோகி தந்தா னாகும்
நவில்விநி யோகங் கேளாய் நடக்கநன் னீழற் பார்க்கப்
புவியினில் விசாரஞ் சூரம் புராணங்கள் படிப்ப தற்கும்
கவனம தாகத் தன்றே கம்பார்க்க வுந்தா னாமே.

... 89


9. துரித திருஷ்டி

கேளுநீ பிரபன் தத்துங் கீதத்து மீதிற் பூசும்
பாழிலாச் சந்த னத்தும் பகர்வீர ரசத்து மற்ற
வேழம்போ லேக றுத்த விழிகளை யுருட்டி நோக்கல்
ஆழவே துரித திஷ்டி யாகுமென் றுரைப்பர் மாதே.

...90


10. சூசனா திருஷ்டி. 11. உக்கிர திருஷ்டி

மேலுந்தே சங்கள் பார்ப்ப திலுநாட் டியத்தும் பாணம்
சாலவே தொடுக்கும் போதும் பதிவிர தைதன் னீதிப்
பாலிலு மனங்க னுற்ற கலவியி லும்பார்க் குள்ளே
கோலுஞ்சிங் கார மாதி ரசங்களைக் குறிக்கும் போதே.

...91

போதுநேர் நயனந் தன்னை பொருந்தவே சுழித்து மூடி
ஏதமில் சூச னாக்கண் ணென்ற னருக்கி ரக்கண்
ஓதுமே பைத்தி யம்மே லுற்றவன் கோபம் வேகம்
தீதிலாப் பயர சத்தி லிருகடை சிவந்து பாரே.

...92


12. தூரதிருஷ்டி

சுகமுறுந் தூர திஷ்டி சொலுஞ்சிறி துயர நோக்கல்
அகவிநி யோகங் கள்ளுஞ் சாராய மருந்து வோனும்
தகுங்கைகா னீட்ட லீதிற் றானாகு மென்றே முன்னாள்
தகைமைசேர் பரத நூலோர் சாற்றின ரிதுவென் றோதே.

...93


13. காந்தக்கண்

கல்லெனுங் காந்தைக் கண்ணாங் கருவிழி பெரிதாய்ப் பார்த்தல்
வல்லப வினியோ கந்தான் வளர்பிரமை யதிச யித்தும்
நல்லபெண் வதனம் பார்த்தல் நாடுஞ்சித் திரவு றுப்பும்
புல்லிய சிங்கா ரத்தும் பொருமதி ரவியி டத்தும்.

...94

இடமாகு மிரதத் தோடு மிணங்குபாய் மாவி டத்தும்
கொடுமுடி கோபு ரத்துங் கூடுங்கண் ணாடி பார்த்தல்
மடமயிற் பலபொ ருட்கள் பார்ப்பதி லாகு மற்றும்
திடமதாய் முகத்தில் வீர ரசமது சனிக்குந் தானே.

...95


14. பயாநகதிருஷ்டி

காட்டியே கண்கண் மூடிக் கருவிழி பார்ப்ப தாகச்
சூட்டும்ப யாந கக்கண் சொல்லும்வி நியோக மையல்
கூட்டும்லரஞ் சனையும் வாஞ்சை கொளுமூக்குக் கண்ணாடிக்கும்
ஈட்டமாம் புத்த கத்து மெழும்சலிப் பிலுமுண் டாமே.

...96


15. கருணாதிருஷ்டி

பார்க்குமாங் கருணா திஷ்டி படர்கடை நடுவி ரித்து
ஏற்கவே யிடையி ரண்டு மிடுக்கியே பார்ப்ப தாகும்
தீர்க்கமாம் விநியோ கங்கள் செப்பக்கே ளிரவி தன்னை
மார்க்கமாய்ப் பார்க்கும் போதும் மந்திரத் தியானஞ் சேவை.

...97

சேவையாம் பகைவ ரோடெ திர்மொழி செப்புங் காலும்
கோவைநேர் விழியி னோவால் கூசிக்கண் பார்க்கும் போதும்
பூவையே சிந்தை யன்பு பொருந்தமெய்ச் சிலுப்பும் போதும்
மேவிய தவத்தோர் நாசி னுனிபார்த்த லசதி யென்பேன்.

...98

நுனிபார்க் குங்கல் யரணப் பெண்ணறுந் தலைக விழ்ந்து நாணல்
அணியதாய்த் திரிவா யில்வைத் ததன்குறி பார்க்கும் போதும்
இணையிலா மைய லாசை யிருகண்டூள் விழுந்த போதும்
துணிவதா மருந்த ருந்தற் சூழ்புகை தனிலு மாமே

...99


16. மூடாம்பகக்கண்

தொய்யுமூ டாம்பகக் கண்ணி மைகள்சூட் சித்துப் பார்த்தல்
மெய்யிதின் விநியோ கங்கேள் விரைந்திடுஞ் சிந்தை நோயும்
தையலே மயக்கந் தியானந் தன்னிலுந் துக்க மாகும்
ஐயமில் லாத நித்திரை யறைந்ததை யறிந்து கொள்ளே.

...100


17. அத்புததிருஷ்டி

தேடிய வற்பு தக்கண் சீரதைச் செப்பக் கேண்மின்
வாடியே சோம்பி நோக்கல் தன்னிலே நிமைகள் சற்றே
நாடியே துடிது டிக்க நயம்பெறு நயனத் துள்ளே
கூடியே கருவி ழிச்சஞ் சலமத கொளவே நோக்கும்.

...101

நோக்கயே விநியோ கங்கே ளொருவரை நோகச் சொன்னோம்
தாக்கவே யென்ற போதுஞ் சரீரநோய் கொண்ட போதும்
தேக்கியே யதுவுண் டாகு மெனப்பர தச்சீ ருற்றோர்
ஆக்கமா யபிந யிக்கு மடவுரை செய்தா ரன்றே.

...102


18. வீரதிருஷ்டி

செய்யவே யிமையுங் கண்ணுஞ் சீரசை யாதி ருத்திப்
பையவே புருவந் தன்னை நெரித்துக்கண் சிவப்ப தாக்கி
நொய்யவே பொரும லாக நோக்குதல் வீரக் கண்ணாம்
மெய்யிது வினியோ கந்தான் வீரர்மேற் பாய்வ தாமே.

...103


19. விகற்பதிருஷ்டி

கேளுநீ யிருகண் டன்னைக் கெம்பீர மாய்த் திறந்து
ஆழியாங் கடைக்கண் சற்றே குவித்தசை யாமற் சீராய்த்
தோழியே கருவி ழிக்காற் றுலங்கவே பார்ப்ப தாகும்
நீழுறும் விப்பி ராந்தம்; விஷாணமு நிகழ்த்து நூலே.

...104


20. விப்பிராந்ததிருஷ்டி 21. விஷாணதிருஷ்டி

யோகமாம் விழிதி றந்து ஒக்கவே பரப ரப்பாய்
வேகமாய்ப் பார்ப்ப தென்றே விள்ளுவர் விஷாண திஷ்டிக்
காருமாங் கடைக்கண் சொக்கி யிமைகளைத் திறந்து கண்ணைப்
பாகுமாய் நிமையைக் கொட்டிப் பார்ப்பது மாகும் பேரே.

...105


22. விப்புலுததிருஷ்டி

பாருவிப் புலுதா திஷ்டி பயன்விழித் திருக்கும் போது
கோரிய துண்டு இல்லை யெனநிமை கொட்ட லாகும்
மாறிய துக்கத் தும்முன் மத்தத்தும் பொருந்து மென்றே
நாரியே பரத நூலோர் நயம்பட வுரைத்த வாறே.

...106


23. விதர்க்கிததிருஷ்டி 24. தீனா திருஷ்டி

உரைக்கும்வி தர்க்கி தாக்கண் ணுறுமிமை யுந்து டித்துப்
பொருக்கவே பரப ரப்பாய்ப் பொருந்த நாற்றிசையு நோக்கும்
வெருக்கத்தீ னாதிஷ் டிக்கு மேலிமை சிறுக்கக் கொட்டிக்
கருவிழிச் சற்ற மைத்துக் கண்ணீர்த தும்பப் பார்த்தல்.

...107


25. திரஸ்தா திருஷ்டீ 26. கிரஸ்தா திருஷ்டி

பார்த்திடுந் திரஸ்தா திஷ்டி பகருவோ முண்ண டுக்கச்
சேர்த்திடு மிமைது டிக்கத் திருவிழி சலிக்க நோக்கும்
ஆர்த்திடு மிமைச லித்து அணிபுரு வம்நெ ரித்துக்
கோர்த்திடும் விழியை யேறப் பார்க்குங் கிரஸ்தாக் கணென்றே.

...108


27. இருட்டாக்கண்

காலத்து மிருட்டாக் கண்ணிற் காங்கரு விழியைச் சற்றே
ஏலவே சொருகி யோய நிமைகொட் டியேக போலம்
சாலவுன் னதமாய்ப் பார்ப்ப தாமெனப் பரத நூலோர்
நீலவேல் விழியி னாளே நிலையறிந் துரைசெய் தாரே.

...109


28. மலிநீ திருஷ்டி 29. லவித திருஷ்டி

செய்யவே வொன்றைத் பார்த்துத் திரும்பிபோ குவது போலப்
பையவே யிமையைச் சற்றே பணியமூ டுவதாந் திஷ்டிக்
கையுறு மலிநீ யாகுங் கடைமூடிப் புருவஞ் சேர்த்து
மெய்யுறு கண்டி றந்து பார்ப்பது லளித மென்னே.

...110


30. குஞ்சித திருஷ்டி 31. ஆசியாக்கண்

மேவிய குஞ்சி தக்க ணிமைபாதி மூடிப் பக்கம்
தாவிச்சஞ் சலமாய்ப் பார்ப்ப தாகுமே யாசி யாக்கண்
பாவையே விழியைச் சற்றே சுருங்கவாச் சரியம் பார்த்துக்
கூவியே சிரித்த லென்றே குறித்ததை விண்டார் மானே.

...111


32. அச்சுதா திருஷ்டி

விள்ளவே யச்சு தாக்கண் ணாமதின் விவரங் கேண்மின்
உள்ளுடன் புறம்புந் தோற்ற வொளியது நிறக்கக் காட்டும்
வெள்ளையாம் விழிபொ ருந்தி மேலிடப் பார்ப்ப தன்றே
வள்ளிதாய்ப் பரத நூலோர் வகுத்தனர் புலன றிந்தே.

...112


33. சங்கித திருஷ்டி. 34. மதக்கண்

தெரிவையே சங்கி தக்கண் திறமதாய் விழித்துப் பார்த்து
மறுபடி யிமையை மூடி வளர்கடைக் கண்ணாற் பார்த்தல்
முருகாகு மதக்கண் டன்னுள் மூவகை யான பேதம்
பெருமையாம் பயன றிந்து பிணக்கற வுரைக்கு நூலே.

...113


34. கருணைமதக்கண். 35. மத்திம மதக்கண்

மின்னாங் கருணை மதக்கண் விழித்தோரஞ் சரித்து நன்றாய்ப்
பன்னிய விகார முற்றுப் பார்க்குமத் திமம தக்கண்
நின்னய மாகச் சற்றே நிமைதனை விழித்து மூடி
உன்னியே யசைத்துப் பார்ப்ப தொக்குமென றுரைசெய் தாரே.

...114


36. அதருமமதக்கண்

வாரிசூழ்ந் திடும தர்ம மதக்கண்ணின் விபரங் கேண்மோ
நேரதாம் விழியைக் கீழே நிலைபார்த்துப் பிரயா சத்தில்
கோரியே நிமையைச் சேர்த்துக் கொட்டுத லாகு மென்றே
கூறினார் பரதங் கற்ற குருபரம் பரையி னாரே.

...115

நயனபேதப் பிரகரணம் முற்றும்.

3. புருவபேதப் பிரகரணம்

புருவபே தங்கள் நான்காய்ப் புகன்றனர் மிதமா மென்றும்
பருவமா மமித மென்றும் பாரிலுத் வர்த்தி யென்றும்
மருவப வர்த்தி யென்றும் வகுத்தன ரெவருங் காண
சருவியே யொவ்வொன் றிற்குந் தான்விநி யோகஞ் செப்பும்.

...116


1. மிதப்புருவம். 2. அமிதப் புருவம்

செப்பிய மிதப்பு ருவஞ் சிறந்துமேல் சிறித சைத்தால்
ஒப்புமே சாடை செய்த லுகந்துவே டிக்கைப் பேச்சாம்
மெப்புவ மிதப்பு ருவம் மிகுந்துமே லசைப்ப தாகும்
தப்பிலா நாட கச்சூ சனைதனிற் காணு மென்னே.

...117


3. உத்வர்த்திதப் புருவம் 4. அபவர்த்திதப் புருவம்

என்னவுத் வர்த்தி தந்தா னியம்புது மேலே நோக்கில்
சொன்னவிந் யொகம் ஞானந் தொலையாதா லோச னைக்காம்
பொன்னப வர்த்தி தந்தான் பூருகீழ் நோக்கிற் றுக்கம்
பன்னென முதலா மென்றே பார்த்திபன் மொழிந்த வாறே.

...118


புருவபேதப் பிரகரணம் முற்றும்.

4. நாசிபேதப் பிரகரணம்

நாசியின் பேத மைந்தாய் நவிலுமச் சிவிட்டஞ் சிலிட்டம்
மாசிலாக் கம்பி தஞ்சேர் வருசிலிட்ட புடமா மென்றும்
பேசுசத் புடந்தா னென்றும் பேதங்க ளொவ்வொன் றிற்கும்
வாசியாய்க் காட்டு மந்த வகையது விவரஞ் சொல்லும்.

...119


1. அச்லிட்டநாசி. 2. சிலிட்டநாசி

சொல்லுமச் சிலிட்ட நாசி தூக்குதல் வலது பக்கம்
மெல்லவே சாடை யாகு மேலான கபட மாகும்
அல்லவே சிலிட்ட மென்றும் ஆட்டிட லிடது நாசி
நல்லதாய்த் தூர திஷ்டிக் காமென வுகந்து நாடே.

...120


3. கம்பிதாசி. 4. சிலிட்டபுடநாசி

நாட்டிடு கம்பி தந்தா னிருநாசி தூக்கி யாட்டல்
கூடுவா சனையி லொப்பும் கொள்ளுநோய் ஜன்னி கட்காம்
சூடும்சி லிட்டபு டம்தொ லைவிலா தசைத்தல் நாசி
வேடிக்கை தனிலு மின்னம் விரகமுஞ் சோக மென்னே.

...121


5. சத்புடநாசி

எண்ணியே தூக்கியி ருக்கு மிருநாசி சத்பு டந்தான்
நுண்ணிய விநியோ கங்கேள் நுணுக்கமா மசூயை தன்னில்
கண்ணியே வருமென் றோதி நவிலுஷா தேவி சொன்ன
திண்ணிய நாசி பேதந் தௌிந்துநீ யறிந்து பாரே.

...122


நாசி பேதப் பிரகரணம் முற்றும்.

5. அதரபேதப் பிரகரணம்.

1. சமவதரம். 2. சுபாவவதரம்

அதரபே தங்கள் நான்கா யம்புவி தனிலே செப்பும்
விதமது சமசு பாவம் விகசிதம் ஈஷார்ஷ யம்மாம்
முதல்சமம் வாயை மூடி யிருத்தலாங் கோபந் துக்கம்
இதமுடன் சுபாவ மாகும் இளநகை தயவு வஞ்சம்.

...123


3. விகசித அதரம். 4. ஈஷார்ஷயவதரம்

வஞ்சம திலாது மிக்கு மகிழ்வது விகசி தந்தான்
மிஞ்சிய சந்தோ ஷாதி களுக்குமே விளம்ப லாகும்
எஞ்சிய ஈஷார்ஷ யந்தான் இயம்பின்வாய் நகைத்தல் கோணி
அஞ்சாடை சைகை யென்று அநுமனு மறைந்த வாறே.

...124

(5. Number missing)

அதரபேதப் பிரகரணம் முற்றும்.

6. முகராகப் பிரகரணம்

முகராகம் நான்க தாக மொழிந்தனர் சுவாபா வத்தில்
இகலிலாப் பிரசன் னத்தோ டிரத்தமுஞ் சியாம மென்னச்
சுகமுறும் வதன மாதே தொடுத்தவிம் முகபே தங்கட்
ககமகிழ்ந்து பரதமுனி யறைந்த விநி யோகங் கேளே .

...125


1. சுவாபாவிக முகம். 2. பிரசன்னமுகம்.
3. இரத்தமுகம். 4. சியாமமுகம்

மனதினில் விகார மின்றி மருவுதல் சுவாபா வந்தான்
கனத்த சந்தோஷ மாகக் கருதும் பிரசன்ன மாகும்
இனங்கிரு பையுமுன் கோபம் வீரமு மிரத்த மென்பர்
மனதினிற் றுக்கங் கொண்டு வகுத்தது சியாம மாமே.

...126

முகராகப் பிரகணம் முற்றும்.

7.கண்டபேதப் பிரகரணம்

உறுதியாங் கண்ட பேத மொன்பானன் னாட்டி யத்தில்
கருதுமுற் பத்தி பேதங் காட்டுநால் வகைய தாய்ச்சுந்
தரிதிறச் சீனத் தோடு சார்பரி வர்த்த கண்டம்
வரும்ப்ர கம்பிதமாங் கண்ட வகைதனை யறிந்து கொள்ளே.

...127


1. சுந்தரிகண்டம்

சுந்தரி யிலக்க ணங்கேள் தூய்கழுத் தைக்கு றுக்கி
விந்தையா யசைத்துக் காட்டும் விதத்தைச்சுந் தரியா மென்பர்
பந்தமாம் விநியோ கங்கேள் ரத்னங்கள் பார்ப் பதாகு
மந்தமாம் வீணை வாத்ய மருள்தேவ தைக்கு மன்னும்.

...128

அதற்காகு நமஸ்கா ரங்க ளடர்பல கார்யா ரம்பம்
மதித்தசி நேகா ரம்பம் மருவிய நல்லோ ரென்னில்
கதித்திடும் பைத்தி யத்துங் கனிந்திடு சரசங் கட்கும்
உதித்தசந் தோஷங் கட்கு முகந்தசுந் தரியாம் பாரே.

...129


2. திரச்சினகண்டம்

பாம்புபோ வதுபோ லிரண்டு பக்கத்து முயர்பா லாகத்
தேம்பலே யசைத்த கண்டந் திரச்சீனம் விநியோ கங்கேள்
பாம்புபோங் கதிக ளுக்கும் பரியசுத் திக்கும் நீல
ஆம்பலின் விழிய ணங்கே ஆயாசங் கட்கு மாமே.

...130


3. பரிவர்த்தன கண்டம்

தெரியிடம் வலத்திற் பாதி திங்களைப் போல சைத்தால்
பரிவர்த்த னக்க ளந்தான் பகர்ந்திடு விநியோ கங்கேள் சால
அரியசிங் கார நாட்டிய மாசைமின் னார்க போலம்
பருகவு மாகு மென்றே பகர்ந்தனர் பரத நூலோர்.

...131


4. பீரகம்பித கண்டம்

திறமொடு முன்னும் பின்னுஞ் சீரார்கண் டத்தை மாடப்
புறவுபோ லசைத்த கண்டம் பிரகம்பி தந்தா னாகும்
உறுவிநி யோகங் கேளா யுனக்கென் பதூஉஞ் சால
நிறைகொளுந் தேசி நாட்டியம் நீண்மாலை நந்தி வாக்கே.

...132

கண்டபேதப் பிரகணம் முற்றும்.

8. புஜபேதப் பிரகரணம்

புஜபேத மூர்த்வ மென்றும் புகலதோ முகந்தா னென்றும்
அசைவிலாத் திரியக் தம்மோ டபவித்தம் பிரசாரி தந்தான்
கசிவுள அஞ்சித தம்மண் டலகதி சுவத்தி கந்தான்
திசைகொளுத் வர்த்தி தம்பி ருஷ்டாது சாரிதமா மின்னம்.

...133

நமிரமா விடமே சரலம் நற்குஞ் சிதந்தா னென்றும்
அமருமாந் தோளி தத்தோ டருளுச் சரிதமே யென்றும்
இமையவ ரிருடி தோளுக் கியம்பின பேதம் பத்தாம்
கமழ்தச வதன னாறு புஜபேதங் கருதி னானே.

...134

புஜபேதப் பரகரணம் முற்றும்.

9. மார்புபேதப் பிரகரணம்.

1. சமமார்பு. 2. உத்வாகித மார்பு

வருமார்பு பேத மூன்று வளர்சம முத்வா கிதந்தான்
நிரைப்ரகம் பிதமே யென்றும் நிகழ்த்தினர் விநியோ கங்கேள்
தருசம மசையா நிற்கில் துக்கமுத் வாகி தந்தான்
பருமார்பு தூக்கி லென்னைப் பாரெனுஞ் சிலம்ப மாமே.

...135


3. பிரகம்பித மார்பு

ஆமெனப் பிரகம் பிதந்தான் மார்பதைச் சிறித சைத்தல்
ஓமெனும் பெரியோர் முன்பு முகந்திடும் நல்லோ ரென்னல்
சாமகா னங்கள் பாடிற் றணிந்திடும் பயனைக் காட்டல்
நேமமாய் மார்பு பேதம் நிகழ்த்தினன் வானோர் கோமான்.

மார்பு பேதப் பிரகரணம் முற்றும்.

10 வயிறு பேதப் பிரகரணம்

1. சலனோதரம்

சாற்றிய வயிறு பேதஞ் சலனோ தரந்தா னென்றும்
போற்றுலம் போத ரந்தான் புகல்கர்வ வுதர மென்றும்
தோற்றுமிம் மூன்று தன்னிற் சொல்சல னோத ரந்தான்
மாற்றியே விடாத சைத்த வயிறுமாச் சரிய மாமே.

...137


2. லம்போதரம். 3. கர்வோதரம்

ஆமெனுச் சாக மேப்ப மாகுலம் போத ரந்தான்
சேமரா ஜாங்க மேன்மை செப்புகர் வோத ரந்தான்
தாமென வெட்கிக் காட்டத் தான்விர கங்க ளுக்காம்
ஓமென வயிறு பேத முரைத்தன னைங்க ரன்றான்.

...138

10 வயிறு பேதப் பிரகரணம் முற்றும்.

11. பிருஷ்டபேதப் பிரகரணம்

1. சமம். 2. லளிதம்

முதுகுபே தங்கள் மூன்றாய் மொழிசம பிருஷ்ட மென்று
மிதமொடு லளிதம் வலித மிதின்விநி யோகங் கேளே
விதுமதுல் லாசத் தாலே விரிசம பிருஷ்ட மாகும்
பதியாம லுயர்ந்த பிருஷ்டம் லளிதமாம் பகரு மின்னும்.

...139


வலித பிருஷ்டம்

பகருமே தீரம் வீரம் பாரினிற் சுமைதாங் கிக்காம்
இகந்தனில் வலித பிருஷ்ட மேழைபோற் றணிந்து காட்டல்
விகற்பமில் லாதோ னென்று மிகுயோகி பக்த னென்றும்
அகமகிழ் பிருஷ்ட பேதம் அறுமுக னுரைத்த வாறே.

...140

பிருஷ்ட பேதப் பிரகரணம் முற்றும்.

12. இடுப்புப் பேதப் பிரகரணம்

1. சுபாவ நடு

இயம்பிய நடுவின் பேத மிசைவுடண் மூன்ற தாகும்
நயம்பெறு சுபாவ மென்று நமிதம னமித மென்றும்
சயம்பெறு நடுசு பாவம் சற்றசை யாது நிற்றல்
மயமெனும் யோகம் ஞானம் வழிதனக் கொவ்வு மின்னே.

...141


2. நமித நடு 3. அதமிதநடு

ஒவ்வுமே மிக்க சைத்த லுக்கமே நமிதந் தானும்
நவ்வுமி லேச்சர் தியானம் நடையதாங் கிச்சு மாகும்
செவ்விய நமிதந் தானுஞ் சிறிதசைத் தந்த ரங்கம்
தவ்விய மருங்கு பேதந் தத்தில னுரைத்த வாறே.

...142

13. பார்சுவ பேதப் பிரகரணம்

1. ஆலோளித பார்சுவம்

முந்தவே பக்க பேத மூன்றிலா லோளித தந்தான்
பந்தகுஞ் சிதமே யென்றும் பகர்விலோ ளிதமே யென்றும்
வந்தமா லோளி தந்தான் வளரிடப் பக்கஞ் சாய்த்தல்
தொந்தமா மபிந யத்திற் றுலங்குநற் சயன மாமே.

...143


3. குஞ்சித பார்சுவம். 4. விலோளித பார்சுவம்

துலங்கிய குஞ்சி தந்தான் சுழற்றியே முன்னும் பின்னும்
நலம்பெறு பக்கஞ் சாய்தல் நற்சபை வழக்குப் பேச்சாம்
இலங்கிய வலது பக்க மிசைத்தவி லோளி தந்தான்
குலுங்கவே சரம்பார்த் தென்னக் கோகள னுரைத்த வாறே.

...144

பார்சுவபேதப் பிரகரணம் முற்றும்.

14. கரகேத்திரமென்னும் பாணித்தானப் பிரகரணம்

சீர்மிகு பாணித் தானஞ் செப்பிடிற் பதின்மூன் றாரும்
நேர்வல மிடமுன் பின்கீழ் மேல்சிரம் நெற்றி கன்னம்
வார்புஜ மார்பு தொந்தி மருங்குவித் தான மன்றி
ஏர்பெறு மபிந யித்தல் மற்றிட மேவா தென்னே.

...145

கரகேத்திரமென்னும் பாணித்தானப் பிரகரணம் முற்றும்.

15. சிரக்கர கருமமென்னும்சிரப்பாணி கர்மப் பிரகரணம்

செப்புமுத் தூன னந்தான் சிலேஷம் விச்லேஷ மாகும்
மாப்புர க்ஷணமாம் க்ஷேப மோடன நிக்கிர கந்தான்
அப்புமே உத்கிருஷ் டத்தோ டாகிருஷ் டம்வி கிருஷ்டம்மே
தப்பிலாத் துரோட னஞ்சே தனந்தா டனந்தா னின்னம்.

...146

இன்னமும் பேத னத்தோ டியம்புக போட னந்தான்
பின்னுமோ டனமா மாவா கனம்விசற் சனமே யென்றும்
பன்னதற் ச